உத்தரபிரதேச மாநிலத்தில் பிரமோத் என்பவருக்கும் ஷிவானி என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், பிரமோத்துக்கு ஷிவானியின் தாயார் மீது காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி, சந்தித்து பேசி வந்துள்ளனர்.
இதன் காரணமாக கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மாமியாருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஷிவானி உயிரற்ற நிலையில் கிடந்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தான் ஷிவானியின் கணவர் பிரமோத், ஷிவானியின் தாயாருடன் ஒன்றாக இருக்கும் ஆபாச புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மனைவி கீர்த்தனா. இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தங்களது உறவினர்களுடன் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த லட்சுமிநகர் பகுதியில் உள்ள மேம்பாலத்துக்கு அடியில் தற்காலிக கூரை அமைத்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்றிரவு தங்களது பணியை முடித்துக்கொண்டு தற்காலிக கூரையில் குழந்தையுடன் இருவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது நள்ளிரவு அப்பகுதிக்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், தூங்கிக்கொண்டிருந்த பெற்றோரிடமிருந்து குழந்தையை நைசாக தூக்கிச்சென்றனர். நள்ளிரவு 3 மணிக்கு விழித்த தம்பதியினர், குழந்தை மாயமாகி இருப்பதை கண்டுஉடனடியாக அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
உடனடியாக அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தியதில், 3 பேர் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். மர்ம கும்பலிடம் இருந்து குழந்தையை மீட்கும் பணியை போலீசார் தற்போது துரிதப்படுத்தியுள்ளனர்.
பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.