Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sahabudeen
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர் ஸ்ரீவித்யாவை அவருடைய கணவரே வெட்டி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அந்தப் பகுதியில் போலீசார் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். கொலை நிகழ்ந்த பள்ளி வளாகத்திற்கு நேரில் சென்றுள்ள ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ் குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த கொலை சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றிக்கழகம் மொத்தம் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேபோல் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகத்தின் 2 வேட்பாளர்களுடன் சேர்த்து மொத்தம் 30 வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய விஜய்க்கு போலீசார் அனுமதி வழங்கினர். இந்த நிலையில், விஜய் இன்று புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தவளகுப்பம் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின் போது, மணவெளி தொகுதி தவெக வேட்பாளர் ராமு என்பதற்குப் பதிலாக தவறுதலாக பா.ஜ.க. வேட்பாளரும் சபாநாயகருமான செல்வம் என கூறினார். இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்த வேட்பாளர் தன் பெயர் ராமு என்று நினைவூட்டியதும், விஜய் உடனே திருத்தி “வேட்பாளர் ராமு” என்று கூறினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பும் இதுபோன்ற தவறு நிகழ்ந்துள்ளது. கொளத்தூர் தொகுதியில், வேட்பாளர் வி.எஸ். பாபுவுக்கு பதிலாக “பிரபு” என்று தவறாக கூறிய…
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில், தற்போது போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சிதம்பரம் மக்களவைத் தொகுதி எம்பி ஆக இருக்கும் திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில், இன்று போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், காட்டுமன்னார்கோயிலில் திரு இளையபெருமாளின் இளையமகன் ஜோதி வேட்பாளராக போட்டியிடுகிறார் என அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், உடன்குடி அருகே மெஞ்ஞானபுரம் அடுத்த கல்விளை பகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று வாக்குசேகரிக்க சென்றார். அப்போது, வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டி அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அனிதா ராதாகிருஷ்ணனின் வாகனத்தை பெண்கள் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள் எதிர்ப்பால் பிரசாரத்தை மேற்கொள்ளாமல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திரும்பிச்சென்றார். திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கேஆர்எம் ராதாகிருஷ்ணன் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நாம் தமிழர் வேட்பாளராக ஒபிலியாவும், தவெக வேட்பாளராக முருகனும் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மாவின் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கம் – வெற்றி கொடி கட்டும்ஆர். மனோகரன்…… கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அந்த வகையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான ஆர் மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை சென்னையில் பொதுச் செயலாளர் அவர்களை சந்தித்து விட்டு சாலை மார்க்கமாக திருச்சிக்கு வருகை தந்த ஆர். மனோகரன் அவர்களுக்கு திருவானைக்காவல் அருகே உள்ள அவரது அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் வெடி வெடித்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 2026 ஸ்ரீரங்க சட்டமன்ற வேட்பாளர் ஆர் மனோகரன் அவர் கழகத்தில் வகித்த பதவிகள் 1986 ஸ்ரீரங்கம் நகர்மன்ற உறுப்பினர் 1986 நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் 1988 கழகம் விளைவு பட்ட போது ஜெ.அணி வட்டக் கழக செயலாளர் ஸ்ரீரங்கம்…
கடலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திடீரென மின்விநியோகம் தடைபட்ட நிலையில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். மின்சாரம் இல்லாததால் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். தரைத்தளம் வழியாகச் செல்லும் வயர் துண்டிக்கப்பட்டதால் 4 மணி நேரமாக மின்சாரம் தடைபட்டதாகவும், அதனை சரி செய்த பிறகு நிலமை சீரானதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயது மாணவி. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கலபுரகியை சேர்ந்த சிவானந்தா (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் சிவானந்தா கர்நாடக ஆயுதப்படையில்போலீஸ்காரராக பணியாற்றி வந்துள்ளார். முதலில் நண்பர்களாக பழகிய இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மேலும் சிவானந்தா, மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த மாணவி, சிவானந்தாவைகாதலிக்க தொடங்கியுள்ளார். பின்னர் காதலர்கள் 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்றும், தங்கும் விடுதியில் அறை எடுத்து உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு அடிக்கடி சண்டை வர தொடங்கியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சிவானந்தா மாணவியை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறி, தனது காதலை முறித்து கொள்ளுமாறு மாணவியிடம் கூறியுள்ளார். இதில்மனமுடைந்த அந்த மாணவி சிவானந் தாவிடம் தொடர்ந்து மன்னிப்பு கேட்டு வந்துள்ளார்.ஆனால் அதற்கு சிவானந்தா, மாணவியின் செல்போன் எண் மற்றும் சமூக வலைதள கணக்கை…
கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் அவனூர் அருகே பாண்டியாட்டு வீட்டை சேர்ந்தவர் அரவிந்தாக்ஷன்.:இவரது மகள் அனுப் பிரியா(வயது 25). இவர் லாலூர் பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்கிடையே கடந்த 19-ந்தேதி வீட்டில் இருந்து வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி அனுப் பிரியா சென்றார். கல்லூரி முடிந்து மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கல்லூரி மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்தனர். அப்போது அனுப் பிரியாவுடன் படிக்கும் சக மாணவி, கல்லூரி அரை நாள் மட்டுமே நடந்தது, 12.30 மணிக்கு நானும், அனுப் பிரியாவும் கல்லூரியில் இருந்து வெளியே வந்தபோது அனுப்பிரியா திருச்சூர் வடக்கு பஸ் நிலையத்திற்கு சென்றதாக தெரிவித்தார். தொடர்ந்து பஸ் நிலையம் உள்பட சுற்றுவட்டார இடங்களில் தேடியும் அனுப் பிரியா கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர். இதுகுறித்து உடனே திருச்சூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிதரனிம்…
அரியலூர் மாவட்டம் பெரியத்திருக்கோணத்தை சேர்ந்த 72 வயதான ராஜலட்சுமி என்ற பெண்ணை படுகொலை செய்து 14 சவரன் நகைகளுடன் தப்பிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் பெரியத்திருக்கோணத்தை சேர்ந்த 72 வயதான ராஜலட்சுமி என்ற பெண்ணை படுகொலை செய்து 14 சவரன் நகைகளுடன் தப்பிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பேரன் வசந்த் வீட்டில் பெண் வசித்துவந்த நிலையில், குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் வசந்த்தும் அவரது மனைவியும் மருத்துவமனைக்கு சென்றிருந்த நேரத்தில் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும் அரியலூர் மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா. சாஸ்திரி மற்றும் டிஎஸ்பி தினேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமான ‘ரமலான்’ அல்லது ‘ரம்ஜான்’ மாதம், இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக திகழ்கிறது. இந்த மாதத்தில்தான், இஸ்லாமியர்களின் புனிதநூலான திருக்குரான் அருளப்பட்டதாக கூறப்படுகிறது. ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாகும். இந்த மாதத்தின் இறுதியில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் ‘ஈத் அல்-பித்ர்’ (Eid al-Fitr) எனப்படும் ‘ரம்ஜான்’ பண்டிகை கெண்டாடபடுகிறது இதன்படி, வளைகுடா நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. : பிறை தெரிவதில் உள்ள மாறுபாடு காரணமாக இந்தியா, மலேசியா உள்ளிட்ட சில நாடுகளில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முன்னதாக கடந்த பிப்ரவரி 28– ந்தேதி ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து வளைகுடாஉள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் க்குதல் நடத்தி வருகிறது.அதனால் மத்திய…

