Author: Sahabudeen

பக்ரீத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம் தேசிய முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் இளம் பத்திரிகையாளர் ஜி ஜி சிவா தமிழ்நாடு அரசுக்கு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைகள் கூறி இருப்பதாவது நாடெங்கும் பக்ரீத் தியாக திருநாளை கொண்டாடுவதற்கு இஸ்லாமிய உறவுகள் மிக ஆவலாக இருந்தபோது சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டில் பொது இடங்களில் வீதிகளில் மாடுகளை அறுக்க கூடாது என தீர்ப்பு வழங்கியிருக்கிறது இத்தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்க வேண்டிய த வெ க தமிழ்நாடு அரசு வாய் மூடி மௌனியாக கடந்து சென்றிருப்பது மத நல்லிணக்கத்தை போற்றி வாழும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இஸ்லாமிய உறவுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது மேலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தமிழகத்தின் முதலமைச்சர் விஜய் அவர்கள் தான் சிறுபான்மை மக்களின் அரசை நடத்துவதாகவும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்றும் பேசினார் ஆனால் பக்ரீத் தியாகத் திருநாள் அன்று உயர் நீதிமன்ற…

Read More

பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய வணிகப் பொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) சார்பில் கும்பகோணத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் தலைமை அஞ்சல் நிலையம் எதிரில் சனிக்கிழமை காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய பாஜக அரசு உடனடியாக தலையிட்டு எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர். மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிப்பு அடைவதை எடுத்துரைத்து பேசினர்,ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் மாதா மணி தலைமை வகித்தார்.வடக்கு மாவட்ட தலைவர் ஆர். ராமச்சந்திரன் முன்னிலை…

Read More

“கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?” உலகப் புகழ்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில் மொட்டை கோபுரம் எதிரில் ஏ ஆர் ஆர் சாலையை நோக்கி கண்காணிப்பு பணிக்காக கும்பகோணம் மாநகர காவல்துறையினர் பொருத்திய சிசிடிவி கேமராவை மறைத்து அமைக்கப்பட்ட தவெக கட்சி நிர்வாகியின் பிறந்த நாள் பேனரால் சர்ச்சை. கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர். வினோத் ரவியின் நெருங்கிய நண்பரும், தஞ்சை கிழக்கு மாவட்ட பொருளாளர் மற்றும் முன்னாள் திமுக நிர்வாகி சாத்தூர் ரமேஷ் செட்டியாரின் மகனான ஆர். விஜய் சந்திரன் என்பவருக்கு மே 27 ஆம் தேதி புதன்கிழமை பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அமைச்சர் வினோத் ரவியின் நெருங்கிய நண்பர் என்பதால் மகாமக குளம் அருகில் உள்ள, ராயஸ் கிராண்ட் மஹாலில் மிகப்பெரிய விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தஞ்சை…

Read More

“கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?” உலகப் புகழ்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில் மொட்டை கோபுரம் எதிரில் ஏ ஆர் ஆர் சாலையை நோக்கி கண்காணிப்பு பணிக்காக கும்பகோணம் மாநகர காவல்துறையினர் பொருத்திய சிசிடிவி கேமராவை மறைத்து அமைக்கப்பட்ட தவெக கட்சி நிர்வாகியின் பிறந்த நாள் பேனரால் சர்ச்சை. கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர். வினோத் ரவியின் நெருங்கிய நண்பரும், தஞ்சை கிழக்கு மாவட்ட பொருளாளர் மற்றும் முன்னாள் திமுக நிர்வாகி சாத்தூர் ரமேஷ் செட்டியாரின் மகனான ஆர். விஜய் சந்திரன் என்பவருக்கு மே 27 ஆம் தேதி புதன்கிழமை பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அமைச்சர் வினோத் ரவியின் நெருங்கிய நண்பர் என்பதால் மகாமக குளம் அருகில் உள்ள, ராயஸ் கிராண்ட் மஹாலில் மிகப்பெரிய விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தஞ்சை…

Read More

கும்பகோணத்தில் அம்பேத்கர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் கும்பகோணம் எழுச்சிகிரகாவில் அம்பேத்கர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் அம்பேத்கர் குடியரசு தொழிற்சங்க மாநில பேரவை பொதுச் செயலாளர் கௌதமன் தலைமையில் நடைபெற்றது. எஸ்சி,எஸ்டி போக்குவரத்து தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பேரவை பொதுச் செயலாளர் ரமேஷ் அம்பேத், தமிழக முன்னேற்ற மக்கள் கழக பேரவை தலைவர் அறிவழகன், ஏ.ஏ‌‌.எல்.எல் எஃப், பொதுச்செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக பட்டியல் இனத்தை சார்ந்தவர்களுக்கு தமிழக அமைச்சரவையில் எட்டு நபர்களுக்கு வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்தல் உட்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஏ.ஆர்.எல் எஃப், மண்டல தலைவர் தியாகராஜன், எஸ்சி, எஸ்டி தொழிற்சங்கம் மண்டல பொருளாளர் மணிவண்ணன், நாகை மண்டல செயலாளர் மோகன், டி.எம்.எம்.கே மண்டல செயலாளர் குமார், ஏ.ஆர்.எல்.எஃப் கண்ணுசாமி சங்கர், டி.எம் எம்.கே, பாலச்சந்தர், ஏ ஆர் எல் எஃப்…

Read More

மனிதநேய மக்கள் கட்சியின் மனந்திறந்த பிரகடனம்..! தனிச்சின்ன தீர்மானத்தின் பின்னணி என்ன?மனிதநேய மக்கள் கட்சியின் மனந்திறந்த பிரகடனம்..!மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் மு.ஹி.ஜவாஹிருல்லா ச.ம.உ வெளியிடும் அறிக்கைகடந்த சில நாள்களாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் உவப்பில்லாத, உண்மைக்கு புறம்பான ஊகங்கள் உலா வருகின்றன. திமுகவுக்கும் ம.ம.க வுக்கும் பிரிவையும் பிளவையும் உண்டாக்கும் நோக்கில், உண்மையற்றச் செய்திகளை ஊதி பெரிதாக்கி உலாவ விடப்பட்டதை உணர முடிகிறது. திமுகவுக்கும் மமகவுக்கும் இடைப்பட்ட உறவு, வெறும் தேர்தல் உறவு மட்டுமல்ல. அதை தாண்டிய கொள்கை உறவு ஆகும்.மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் பல கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாகப் போட்டியிட்ட நிலையிலும் திமுக கூட்டணியில் கொள்கையுணர்வோடு நிலை பெற்றது மமக.2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ம ம க வுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்ற போதும் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பெரும் உழைப்பை தந்ததும் மமகவின் தொண்டர்கள்தான்.2024 ஆம்…

Read More

டெல்டா விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி அவசியம் – வேளாண் அமைச்சரை சந்தித்த பின் விவசாய சங்க தலைவர் பேட்டி காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என காவிரி டெல்டா விவசாய சங்க தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், வேளாண்துறை அமைச்சர் ஆர். வினோத் ரவியை சந்தித்து கோரிக்கையை முன்வைத்தார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். வினோத் ரவி, பதவி ஏற்றதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் அரசு துறை அலுவலர்கள் என பல தரப்பினர் அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்,அதன்படி மே, 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்திற்கு சென்ற காவிரி டெல்டா விவசாய சங்க தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர், அமைச்சர் வினோத் ரவியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்,…

Read More

வேளாண்துறை தலைமை அலுவலகத்தில் புதிய அமைச்சர் வினோத் ரவி நேரில் ஆய்வு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர். வினோத் ரவி, 78 ஆயிரத்து 650 வாக்குகள் பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக மே 21ஆம் தேதி வேளாண் துறை அமைச்சராக பொறுப்பேற்ற அவர், துறை சார்ந்த அரசு பணிகளை தொடங்கினார். மே 22 – ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை இயக்குநரகத்திற்கு நேரில் வருகை தந்த அவருக்குஅங்கு உள்ள வேளாண்துறை அரசு அலுவலர்கள் அமைச்சருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். பின்னர் அமைச்சர் அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டார்.தொடர்ந்து வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைகளில் பணியாற்றும் அலுவலர்களை சந்தித்து பேசினார். அப்போது துறையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.வேளாண்மை இயக்குநர் முனைவர் க.வீ. முரளிதரன், இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில், தொழில்நுட்ப அலுவலர்கள்…

Read More

கும்பகோணத்தில் முன்னாள் அதிமுக நிர்வாகி S. ராஜேந்திரன் நினைவேந்தல்: தவெக நிர்வாகிகள் அஞ்சலிதஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரின் 29-ஆவது வட்டத்தில், மறைந்த முன்னாள் அதிமுக வட்ட கழக செயலாளர் S. ராஜேந்திரன் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மே 20ஆம் தேதி மரியாதையுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை கிழக்கு மாவட்ட மாநகர கழக செயலாளர் முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார். முன்னாள் கவுன்சிலர் எஸ்.கே. கௌரிசங்கர், தவெக மகளிர் அணி இணை அமைப்பாளர் திவ்யலட்சுமி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். 29-ஆவது வட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 36-ஆவது வட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மேலும் தவெக நிர்வாகிகள் சந்தோஷ், பயாஷ், அப்புகுட்டி, தீபன், சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். இந்த நினைவேந்தல் நிகழ்வை முன்னாள் அதிமுக நிர்வாகியாக இருந்து தற்போது தமிழக வெற்றி கழகத்தில்…

Read More

கும்பகோணத்தில் முன்னாள் அதிமுக நிர்வாகி S. ராஜேந்திரன் நினைவேந்தல்: தவெக நிர்வாகிகள் அஞ்சலிதஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரின் 29-ஆவது வட்டத்தில், மறைந்த முன்னாள் அதிமுக வட்ட கழக செயலாளர் S. ராஜேந்திரன் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மே 20ஆம் தேதி மரியாதையுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை கிழக்கு மாவட்ட மாநகர கழக செயலாளர் முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார். முன்னாள் கவுன்சிலர் எஸ்.கே. கௌரிசங்கர், தவெக மகளிர் அணி இணை அமைப்பாளர் திவ்யலட்சுமி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். 29-ஆவது வட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 36-ஆவது வட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மேலும் தவெக நிர்வாகிகள் சந்தோஷ், பயாஷ், அப்புகுட்டி, தீபன், சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். இந்த நினைவேந்தல் நிகழ்வை முன்னாள் அதிமுக நிர்வாகியாக இருந்து தற்போது தமிழக வெற்றி கழகத்தில்…

Read More