ஓடும் ரயிலில் மதகுரு கொலை! ஜி ஜி சிவா கண்டனம்
தேசிய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது
பாட்னா: பீகாரைச் சேர்ந்த 30 வயது மதகுரு ரயிலில் சென்றுகொண்டிருந்தபோது பரேலி ரயில் நிலையம் அருகே சக பயணிகளால் தாக்கப்பட்டு வெளியே தூக்கி வீசப்பட்டதில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தின் பகோடோலி எனும் கிராமத்தைச் சேர்ந்த மௌலானா தௌசிஃப் ரஸா (30), உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள பரேலியில் உயர் கல்வியை படிப்பை முடித்துள்ளார். இவர் சமீபத்தில் சிவான் மாவட்டத்திலுள்ள ஒரு மதரஸாவில் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கியிருந்தார்.
இந்நிலையில், ‘தாஜுஷ் ஷரியா’ எனும் விழாவில் கலந்துகொள்வதற்காக கடந்த 24-ஆம் தேதி, தான் படித்த பகுதியான பரேலிக்கு தௌசிஃப் சென்றுள்ளார். அந்த விழாவில் கலந்துகொண்ட பிறகு சிவானுக்கு செல்வதற்காக ரயிலில் ஏறியுள்ளார்.
ஏப்ரல் 26ஆம் தேதி ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த அவர், இரவு 9 மணியளவில் தனது மனைவி தபஸ்ஸும் காதுனை அழைத்து, பதற்றத்துடன் பேசியுள்ளார். சிலர் தன்னிடம் தேவையில்லாத விஷயங்கள் குறித்து பேசி அடித்ததாக கூறியதுடன், உ.பியில் உள்ள ஷாஜஜான்பூர் காவல்நிலையத்தை தொடர்புகொண்டு இதுகுறித்து தெரிவிக்குமாறும் கூறியுள்ளார்.
தனது கணவன் பதற்றத்துடன் பேசியதைக் கேட்டதும் தபஸ்ஸும் வீடியோ காலில் தொடர்புகொண்ட போது, யாரோ ஒருவர் தௌசிஃபின் சட்டையை பிடித்து இழுத்ததைப் பார்த்துள்ளார். அப்போது தன்னை காப்பாற்ற காவல்துறையின் உதவியை கேட்குமாறு அவர் தனது மனைவியிடம் கூறியுள்ளார்.
வீடியோ காலில் உதவி கேட்ட கணவர்
இதுகுறித்து தபஸ்ஸும் கூறுகையில், “எனது கணவரை நான் வீடியோ காலில் தொடர்புகொண்டபோது ஷாஜஜான்பூர் காவல்நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு என்னிடம் கூறினார். அதன்பிறகு அவரை நான் பார்க்கவில்லை. தொடர்பு அவருடைய செல்போனுக்கு அழைத்துக்கொண்டே இருந்தேன். ஆனால் அந்த பக்கத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை.
திங்கட்கிழமை காலை 9 மணியளவில் பரேலி கண்டோன்மென்ட் காவல் நிலையத்திலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. என்னிடம் பேசியவர் எனது கணவர் ரயிலிலிருந்து விழுந்து காயமடைந்திருப்பதாக தெரிவித்தார். நான் அவரிடம் பேசவேண்டும் என்று வற்புறுத்தி கேட்டபோது தான் அவர் இறந்த செய்தியை என்னிடம் கூறினார்” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
தௌசிஃபின் இறப்பு குறித்து அவரது தந்தை மற்றும் சகோதரர்களிடம் தபஸ்ஸும் தகவல் தெரிவித்துள்ளார். தௌசிஃபின் 4 சகோதர்கள் டெல்லி மற்றும் பஞ்சாபில் வசித்து வரும் நிலையில், இருவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
உயிரிழந்த தௌசிஃபின் இளைய சகோதரரான தௌஹீத் ஆலம் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “நாங்கள் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) மாலை பரேலிக்கு சென்று அங்கு சிவில் லைன்ஸில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தௌசிஃபின் உடலை வாங்கியபோது, பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருந்தது.
2014 ஆம் ஆண்டு முதல் மத்திய பாஜக ஆட்சியில் வந்ததிலிருந்து நாடு முழுவதும் பாஜக சம்பாரி வார சங்கங்களினால் இஸ்லாமிய உறவுகளுக்கு வடநாட்டில் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு தன்மையில்லை என்பதை தெளிவாக பார்த்து வருகிறோம் ஜெய் ஸ்ரீ ராம் என கோசமும் மாட்டுக்கறி வைத்திருப்பதாக சொல்லி சாகடிக்கும் நிகழ்வு மேலும் மசூதிகள் ஆங்காங்கே தாக்கப்படுவதும் மசூதிகளை நீதிமன்றம் மூலமாகவே பொய் ஆதாரங்களை கொடுத்து மசூதிகளை தள்ளுவதும் தொடர்கதையாக இருக்கிறது இதன் தொடர்ச்சியாக மத நல்லிணக்கத்தோடு மார்க்கத்தை நேசித்து வந்த இஸ்லாமிய மதகுருவை தொப்பியும் தாடியும் வைத்திருந்த ஒரே காரணத்திற்காக மதவாதிகள் ஓடும் ரவி அடித்து துன்புறுத்தி தூக்கி வெளியே வீசி இருக்கிறார்கள் அதில் அவர் படுகாயம் அடைந்து இருந்து போனார் அந்த ரயிலில் கூட சக பயணிகள் யாருமே அவர் உயிரை காப்பாற்ற உங்களை வேடிக்கை பார்த்தது மனசாட்சியை உலுக்குகிறது இந்திய உச்ச நீதிமன்றம் தலைமை நீதி அரசர் உடனுக்குடன் இந்த வழக்கினை தனி கவனம் செலுத்தி தானாக முன்வந்து குற்றவாளி எந்த உங்களுக்கு இருந்தாலும் எவ்வித சமரசம் இன்றி அனைவருக்கும் தூக்கு தண்டனை நேரடியாக வழக்கினை கொடுக்க வேண்டும் எனவும் மேலும் இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடக்குமானால் மாநிலத்தில் யார் ஆட்சி செய்தாலும் ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சி நடைமுறைப்படுத்தி சட்டத்தின் ஆட்சி ஏற்படும் வகையில் நீதியரசர் மக்கள் துணையாக இருக்க வேண்டும் ஏனென்றால் இந்த நாட்டிற்காக இந்த தேசத்திற்காக சுதந்திரத்திற்காக போராடி லட்சோப லட்ச இஸ்லாமிய உறவுகள் செத்து மடிந்து இருக்கிறார்கள் நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்காக தனது சொத்தினை இந்தியா முழுவதும் வாரி வழங்கியிருக்கிறார்கள் அப்பேர்பட்ட இஸ்லாமிய தொப்புள் கொடி உறவுகளை இன்று நாடு முழுவதும் மதவெறியர்களால் துன்புறுத்தி சாகடிப்பதும் அவர்களின் உடைமைகளே சூறையாடுவதும் ஒரு ஜனநாயக நாட்டிற்கு அழகல்ல என்பதை நீதியரசர் கவனத்தில் கொள்ள வேண்டும் இது போன்ற சம்பவங்களால் உலக நாடுகளும் செய்திகள் மூலம் உத்துப் பார்த்துக் கொண்டிருப்பதையும் ஆலும் அரசுக்கு சுட்டிக்காட்டுகிறேன் மத்திய பாஜக சங்கர் சங்கங்களுக்கும் இது போன்ற கொடுமை செயலுக்கு துணை போகும் நயவஞ்சகர்களுக்கும் தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைமையின் சார்பாக கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்


