கும்பகோணத்தில் முன்னாள் அதிமுக நிர்வாகி S. ராஜேந்திரன் நினைவேந்தல்: தவெக நிர்வாகிகள் அஞ்சலிதஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரின் 29-ஆவது வட்டத்தில், மறைந்த முன்னாள் அதிமுக வட்ட கழக செயலாளர் S. ராஜேந்திரன் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மே 20ஆம் தேதி மரியாதையுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை கிழக்கு மாவட்ட மாநகர கழக செயலாளர் முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார். முன்னாள் கவுன்சிலர் எஸ்.கே. கௌரிசங்கர், தவெக மகளிர் அணி இணை அமைப்பாளர் திவ்யலட்சுமி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். 29-ஆவது வட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 36-ஆவது வட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மேலும் தவெக நிர்வாகிகள் சந்தோஷ், பயாஷ், அப்புகுட்டி, தீபன், சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். இந்த நினைவேந்தல் நிகழ்வை முன்னாள் அதிமுக நிர்வாகியாக இருந்து தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள எஸ்.ஆர். சங்கிலி கருப்பையன், மறைந்த ராஜேந்திரனின் மகன் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிருபர் அ.மகேஷ்
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
கும்பகோணத்தில் முன்னாள் அதிமுக நிர்வாகி S. ராஜேந்திரன் நினைவேந்தல்: தவெக நிர்வாகிகள் அஞ்சலி
Related Posts
Add A Comment


