திண்டுக்கல் மாவட்டம் பழனி ஜவகர் நகரை சேர்ந்தவர் பாபு.(38) பழனி நகராட்சியில் தூய்மை பணியாளராக நிரந்தர பணியாற்றி வந்த பாபுவுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்திருந்த பாபு வழக்கம் போல இன்றும் காலை முதல் தூய்மை பணிக்கு சென்றார். இந்நிலையில் இன்று இரவு 8மணியளவில் பாபு பழனி காந்தி ரோட்டில் உள்ள பழைய நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் தூக்கு மாட்டிய நிலையில் உயிரிழந்து கிடந்தார். பாபு தூக்கில் தொடங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த நகராட்சி அலுவலக காவலாளி உடனடியாக நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த போலீசார் தூக்கில் தூங்கி உயிரிழந்த பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பணியின் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு பாபு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அனைவரிடமும் நன்றாக பழகும் குணமுள்ள நகராட்சி தூய்மை பணியாளரான பாபுவின் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
பழனி நகராட்சியில் தூய்மை பணியாளராக நிரந்தர பணியாற்றி வந்த பாபு என்ற ஊழியர் அரசு அலுவலக அறையிலேயே தூக்கு மாட்டி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Posts
Add A Comment


