தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் மாநில நிர்வாககுழு கூட்டம் நடைபெற்றது
இன்று (23/2/2025) ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணி மாநிலநிர்வாககுழு கூட்டம் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது
கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர்
சை.மனோகரன் தலைமை தாங்கினார்
முன்னிலை கச்சிமுகம்மது மாநில பொதுச்செயலாளார்
மு.மகாராஜன் மாநில பொருளாளார்
வரவேற்புரை சு.மூர்த்தி
மாநிலநிர்வாககுழு
நன்றியுரை S.நாகராஜ்
மாநிலநிர்வாககுழு
கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றம்
(1) 8 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த வேண்டுமென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
(2) உடன்குடி அனல்நிலைய 1வது திட்டம் நிறைவுபெற்ற நிலையில் மீண்டும் விரிவாக்க திட்ட பணியை தொடங்கியுள்ளதை உடனடியாக கைவிடவேண்டும் தமிழக அரசை வலியுறுத்தி நிறைவேற்றம்
(3) மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது அதில் தமிழகம் முழுவதுமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரம் மருத்துவர்கள் இருப்பை உறுதிசெய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதை இயக்கம் வரவேற்கிறது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றம்


