Author: Sahabudeen

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் நயினார்பத்து ஊராட்சி அம்மன்புரம் கிராமத்தில் 35 குடும்பங்களுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளுக்கு மின் இணைப்புகள் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் நயினார்பத்து ஊராட்சி அம்மன்புரம் கிராமத்தில் 35 குடும்பங்களுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளுக்கு மின் இணைப்புகள் இல்லாமல் சிரமப்பட்டு வந்த நிலையில், கனிமொழி எம்.பி., தமிழக மீன்வளம், மீனவர் நலன் -கால்நடை பராமரிப்புத் துறை அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் எடுத்த நடவடிக்கையால் மின் இணைப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டது. இதையொட்டி, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமையில் அம்மன்புரத்தில் நடைபெற்ற விழாவில் மின் இணைப்புக்கான சான்றிதழ்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். மேலும் இக்குடும்பத்தினர்கள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு 2001 முதல் 2025 வரை கட்டவேண்டிய நில…

Read More

புதுடெல்லி, தற்போதைய 17-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற ஜூன் மாதம் 16-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு, புதிய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே 18-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கடந்த ஆண்டு முதலே இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தேர்தல் கமிஷனர்கள் சுற்றுப்பயணம் செய்து, தேர்தலை நடத்துவது குறித்து ஆய்வு நடத்தினர். அனைத்து அரசியல் கட்சியினரிடமும் கருத்துக்களை கேட்டறிந்தனர். அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்த நிலையில், அரசியல் கட்சியினர் ஒரு புறம் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என மும்முரமாக உள்ளனர். இந்தநிலையில் எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது. அதாவது இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு, 18-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான…

Read More

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை 2019ல் அமல்படுத்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்துஎஸ்டிபிஐ கட்சி மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் அவர்கள் தலைமை தாங்கினார் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜாபர் சுல்தான் அவர்கள் வரவேற்புரை நல்கினார் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது அவர்கள் தொகுப்புரையாற்றினார் மற்றும் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் மாநில செயலாளர் அபூபக்கர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Read More

தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்கள், இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக்கோரி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் அடிக்கடி கைது செய்யப்படுவது குறித்து தான் ஏற்கெனவே பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். கடந்த வாரம் எழுதியிருந்த கடிதத்தில் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 22 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தான் கோரியிருந்தேன். ஆனால் இன்று (15.03.2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் உட்பட 15 மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்பதை கவலையோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைவதுடன், மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வாழும்…

Read More

தமிழ் சின்னத்திரையில் “லொள்ளு சபா” என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் சேசு.இவர் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சின்னத்திரையை தொடர்ந்து, ஏ1, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சேஷு மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் சேஷு விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது நண்பர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Read More

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஊடகங்களில் வருகின்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இதுபோன்ற வதந்திகளை, விஷமப் பிரச்சாரங்களை, தவறான தகவல்களை கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்றும் முதற்கண் கேட்டுக் கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தல் குறித்து எடுக்கப்படும் முடிவு என்னால் மட்டுமே அறிவிக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் “இரட்டை இலை” சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது நமது விருப்பம். இதனை, பத்திரிகையாளர் சந்திப்பின்போது நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். இதனைத் தொடர்ந்து “இரட்டை சிலை” சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்த முயற்சிக்கு விரைவில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம். இந்தியாவில் தொடர்ந்து நிலையான ஆட்சியை, நல்லாட்சியை பிரதமர் மோடியால் மட்டுமே தர முடியும் என்பதன் அடிப்படையில், பா.ஜ.க.வுக்கு நமது ஆதரவினை…

Read More

புதிய கருத்து கணிப்பில் தகவல் நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டன. அதே நேரம் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதுவரை வந்துள்ள பெரும்பாலான கருத்து கணிப்புகள், மீண்டும் பிரதமராக மோடியே தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளன. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க. கூட்டணிதான் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகளில் தெரியவந்துள்ளது. தற்போது நியூஸ்18 நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 30 தொகுதிகளை தி.மு.க கூட்டணி கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது. பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 5 தொகுதிகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் அந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான…

Read More

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 14.03.2024 19.03.2024 2: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20.03.2024: தமிழகத்தில் ஓரிரூ இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 14.03.2024 16.03.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 14.03.2024 18.03.2024 2: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.…

Read More

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டில் முனைப்பு காட்டி வருகின்றன. தமிழக பா.ஜ.க. தேர்தல் பணிகளில் தீவிரம் காண்பித்து வருகிறது. வலுவான கூட்டணியை அமைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறது. இந்த சூழலில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு கைகோர்த்துள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு எட்டு முதல் பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி குறித்து முடிவு எடுக்க பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நாளை அவசரமாக கூட்டுகிறது.

Read More

தெலுங்கு தேசம் கூட்டணியில் இணைந்தது பா.ஜனதா நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக உள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி மீண்டும், மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது. கடந்த தேர்தலின்போது, பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. தேர்தலில் அந்த கட்சி தோல்வியடைந்தது. இந்த முறை தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன்கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் இருகட்சிகளும் தேர்தலில் இணைந்து செயல்பட முடிவு செய்தது. கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில், மீண்டும் பா.ஜனதாவுடன் கைகோர்ப்பது என்று சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். இதற்காக பா.ஜனதாவுடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்தநிலையில் டெல்லி சென்ற சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பா.ஜனதா-தெலுங்கு தேசம் கட்சிகளிடையே…

Read More