திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் பகுதியில் புகழ் பெற்றதும் பழமை வாய்ந்ததுமான பழூர் நவகிரக ஸ்தலம் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் தாமரை குளத்தைச் சுற்றி வெளிச்சம் இல்லாததால் மின் விளக்குகள் அமைப்பதற்கு முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு செய்த நிலையில் தொடர்ந்து பொருத்தம் இல்லாத பதிலையும் பொறுப்பற்ற பதிலையும் அளிக்கும் திருக்கோவில் செயல் அலுவலர். ஒரே மனுவிற்கு போதுமான வெளிச்சம் உள்ளது என்றும் கோயிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்றும் மின் விளக்குகள் அமைப்பதற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு விண்ணப்பித்துள்ளோம் என்றும் இறுதியாக யாருமே எதிர்பார்க்காத பதிலாக குளத்திற்கு வேலி அமைக்கப்படும் என்றும் பதிலளித்துள்ளது கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவிக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் புகழ்பெற்ற பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலுக்கு மின்விளக்கு பொருத்துவதற்கு கோவிலின் பாதுகாப்பிற்கு பாரபட்சம் காட்டுவது ஏன்? என்பது திருச்சிராப்பள்ளி இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையருக்கே வெளிச்சம் ……
தொடர்ந்து திருக்கோவிலுக்கு ஓனராக செயல்படும் செயல் அலுவலர் மீது நடவடிக்கை பாயுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி.
.


