கார் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் எட்டு வயது குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு
மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் சாலை விபத்து
இந்த சாலை விபத்தில் எட்டு வயது குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு அதிகாலை கனகவேல் வயது 61) தனது குடும்பத்துடன் காரில் தளவாய்புரம் சென்று மதுரை வில்லாபுரம் நோக்கி வந்துள்ளார்
மதுரை மாவட்டம் சிவரக்கோட்டை அருகில் பாண்டி என்ற பழ வியாபாரி இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது காரில் குறுக்கில் வந்த பொழுது விபத்து சம்பவம் ஏற்பட்டது கார் தூக்கி வீசப்பட்டு காரில் பயணித்த கனகவேல் ,கிருஷ்ணகுமாரி ,நாகஜோதி சிவ ஆத்மிகா என்ற 8 வயது குழந்தை உட்பட அனைவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
இதனைத் தொடர்ந்து விபத்து சம்பந்தமாக அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடல்களை மீட்டு மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீண்டும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது இந்த சாலை விபத்தினால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது சாலை விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடைபெற்று வருகிறது


