வீட்டில் நள்ளிரவில் அத்துமீறி புகுந்து பெண்கள் மற்றும் வயதானவர்களிடம் அராஜகமான முறையில் நடந்து கொண்ட அனைத்து காவலர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்…
தமுமுக கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ஏ.பசல் முஹம்மது கோரிக்கை…
சங்கராபுரத்தில்
அக்பர் பாய் என்பவரின் வீட்டில் நள்ளிரவில் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து வயதானவர்கள் மற்றும் பெண்களிடம் அராஜகமான முறையில் நடந்து கொண்ட அனைத்து காவலர்கள் மீதும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…
தமுமுக கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் வலியுறுத்தல்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் அக்பர் பாய் என்பவர் வீட்டில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அராஜகமான முறையில் வீட்டில் புகுந்து வயதானவர்கள் மற்றும் பெண்களிடம் கடுமையான முறையில் நடந்து கொண்டது மட்டுமல்லாமல் அராஜகமான முறையில் வயதானவர்களை தள்ளிவிட்டு, கர்ப்பிணி என்று கூட பாராமல் அவருடைய மருமகளை தள்ளி விட்டு கடுமையான முறையில் நடந்துள்ளார்கள்..
ஏன் இந்த முரட்டுத்தனம்!!
ஏன் இந்த கடுமையான விசாரனை!!
யார் கொடுத்தது இந்த சர்வாதிகாரத்தை!!
விசாரணைக்கு அழைத்து சென்ற நபர்களின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்படும் அளவுக்கு தாக்கி இருக்கிறார்கள்..
மனித உரிமை ஆணையம் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்களை தாண்டி செயல்பட்டு இருக்கிறார்கள்..
ஆகவே தமிழக அரசும் காவல்துறையும் அத்துமிரலில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திய மற்றும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து காவலர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்…
ஏ.பசல் முஹம்மது
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்


