Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பீகார்: கள்ளச்சாராயம்
    இந்தியா

    பீகார்: கள்ளச்சாராயம்

    SahabudeenBy SahabudeenOctober 16, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    குடித்ததில் 8 பேர் பலி; பலர்

    மருத்துவமனையில் அனுமதி

    பீகாரின் சிவான் மாவட்டத்தில் பகவான்பூர் காவல் நிலைத்திற்கு உட்பட்ட மதர் கிராமத்தில் சிலர், உள்ளூரில் உள்ள கடை ஒன்றிற்கு சென்று, சாராயம் குடித்துள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அவர்களில் சிலருக்கு பார்வை இழப்பு, வாந்தி மற்றும் வயிற்று வலி ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

    இதுபற்றிய போலீசாரின் விசாரணையில் அவர்கள் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 15 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை சிவான் மாவட்ட மாஜிஸ்திரேட் முகுல் குமார் குப்தா இன்று கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து, பகவான்பூர் காவல் நிலைய உயரதிகாரி மற்றும் பகவான்பூர் காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    எனினும் அவர்களில் 3 பேர் பாட்னா நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இதுபற்றி அறிவதற்காக குழு ஒன்று அந்த கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மற்றொரு சம்பவத்தில், பீகாரின் சரண் மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்ததில் இருவர் உயிரிழந்து உள்ளனர். 2 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

    பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு 2016-ம் ஆண்டு ஏப்ரலில் மதுபான விற்பனை மற்றும் உட்கொள்ளலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. எனினும், அதன்பின்னர் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என சமீபத்தில் பீகார் அரசு தெரிவித்தது.

    Post Views: 182
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.