Homeதமிழ்நாடுசென்னை விமான நிலையம்: தனியாருக்கு மாற்றக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்

சென்னை விமான நிலையம்: தனியாருக்கு மாற்றக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்

விமான நிலையத்தை நிர்வகிக்கும் பணியை ‘இந்திய விமான நிலையங்கள் ஆணையம்’ அல்லாத வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு விஜய் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரதமருக்கு கடிதம்இது தொடர்பாக ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ”சென்னை விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாட்டில் உள்ள சில குறைபாடுகள் குறித்து அதிருப்திதெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, விமான நிலைய நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கடந்த ஆகஸ்டு மாதம் கடிதம் எழுதி உள்ளார்.

அதில், “தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது.தொழில் மற்றும் முதலீட்டு வளர்ச்சிக்கு சர்வதேச அளவிலான விமான நிலைய உள்கட்டமைப்பும் நிர்வாகமும்முக்கியமானவை. பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம், சரக்கு கையாளும் திறன் ஆகிய மூன்று அம்சங்களிலும் சென்னை விமான நிலையம் மேம்பட வேண்டும்.

தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் தமிழ்நாட்டுக்கு அதற்கேற்ற சிறப்பான விமான நிலையம் அவசியம் என்பதால், தற்போதைய ஆபரேட்டர்-நிர்வாகமான இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை (Airports Authority of India AAI) மாற்றிவிட்டு வேறுஆபரேட்டர் நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.அதாவது சென்னை விமான நிலையத்தின் ஆபரேட்டரை மாற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கை,அடிப்படையில் விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதற்கான முயற்சியாக அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு கைவிட முடிவு செய்ததன் தொடர்ச்சியாக இந்தநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா க கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read