அஇஅதிமுக சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா…!
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வீராபுரம் ஊராட்சிக்குட்பட்ட மகேந்திரா சிட்டியில் வீராபுரம் துணைத்தலைவர் சரவணன் ஏற்பாட்டில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
விழா சிறப்பு அழைப்பாளராக மாநில மகளீர் அணிசெயளாலர், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் கலந்துக்கொண்டு தண்ணீர் பந்தல் திறந்துவைத்தனர் .
இதனை அடுத்து செங்கல்பட்டு மேலமையூரில் காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சம்பத் குமார் ஏற்பாட்டில் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது விழாவில்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணிதாசம்பத் கலந்துக்கொண்டனர்.
இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்,
திருக்கழுகுன்றம் மேற்கு ஒன்றிய பெருளாலர் சல்குரு ஏற்பாட்டில் கோடை வெயிலின் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது பொதுமக்களுக்கு புடவை, வேஸ்டி, அரிசி,
தண்ணீர் பந்தலில் இளநீர், தர்பூசணி, நீர்மோர், நன்னாரி சம்பத், கிர்னிபழம் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கினார்கள் விழாவில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுகுன்றம் எஸ். ஆறுமுகம், மாநில மகளீர் அணி செயலாளர் பா. வளர்மதி, சிட்லபாக்கம் சா.ராஜேந்திரன்.ஆனூர்பக்தவச்சலம், மறைமலைநகர் முன்னாள் நகர்மன்ற தலைவர் கோபிகண்ணன் மற்னறும் கழக நிர்வாகிகள் மன்ற உறுப்பினர்கள் இளைஞர் பாசறை நிர்வாகிகள், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு தண்ணீர் பந்தல் திறப்பு விழாவினை சிறப்பித்தார்கள்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
அஇஅதிமுக சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா…!
Related Posts
Add A Comment


