Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sahabudeen
பயணத்தையே மொத்தமா ரத்து செய்த கமல்.. இன்று ‘அவசர’ கூட்டம்.. திமுக கூட்டணியா இல்லையா? முக்கிய முடிவு!
கமல்ஹாசனின் வெளிநாட்டு பயணம், தேர்தல் முடியும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று கட்சியினருடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார் கமல். கமல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இணைந்து தயாரிக்கின்றன. கமல் வெளிநாட்டு பயண திட்டம் ரத்து: இந்நிலையில், இப்படத்தின் பணிகளுக்காக அண்மையில் வெளிநாடு சென்று திரும்பினார் கமல்ஹாசன். பிப்ரவரி இறுதியில் மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தது. ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடையாததன் காரணமாக பயணத்தை தள்ளி வைத்தார் கமல்ஹாசன். எனினும் ஒரு வாரம் ஆகியும் கூட்டணி பேச்சு முடிவடையாத நிலையில் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளார் கமல்ஹாசன். இயக்குநர் மணிரத்னம் மற்றும் ‘தக் லைஃப்’ படக்குழுவினர் தற்போது லொக்கேஷன் பார்ப்பதற்காக செர்பியா சென்றுள்ளனர். கமல்ஹாசனும்…
போலீஸ் நிலையங்களில் 10 ஆண்டுகளாக பல வழக்குகள் தீர்வு காணப்படாமல் இருந்தது போலீஸ் சூப்பிரண்டு கவனத்திற்கு வந்தது. பொதுவாக பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் வீட்டுப்பாடம் எழுதாவிட்டாலும், விளையாட்டு வகுப்புகளில் சரியாக செயல்படா விட்டாலும் பள்ளி வளாகத்தை 10 தடவை சுற்றி ஓட வேண்டும் என்ற தண்டனையை அனுபவித்து இருப்போம். இல்லையெனில் அதுபற்றி கேள்வி பட்டிருப்போம். அதுபோல் வழக்குகளுக்கு தீர்வு காணாத போலீஸ்காரர்கள் முதல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் என அனைவருக்கும் போலீஸ் சூப்பிரண்டு நூதன தண்டனை வழங்கிய சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் மிதுன் குமார். இவர் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவான வழக்குகளில் 10 ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்காதது பற்றி விவரம் கேட்டிருந்தார். அதன்படி சிவமொக்கா டவுனில் கோட்டே, ஜெயநகர், சிவமொக்கா பொருளாதார குற்றப்பிரிவு, கும்சி போலீஸ் நிலையங்களில் 10 ஆண்டுகளாக பல வழக்குகள் தீர்வு காணப்படாமல் இருந்தது…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:- புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்ட நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் இன்று சந்தித்து பேசினர். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கிருஷ்ணசாமியை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி என்பது உறுதியாகி உள்ளது. அ.தி.மு.க.வின் கூட்டணி மிக வலுவான கூட்டணியாக அமையும். எங்களது விருப்பத்தை அ.தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவித்துள்ளோம். விரைவில் எந்த தொகுதியில் போட்டி என்பதை ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

