Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sahabudeen
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட போவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இதனிடையே நெல்லை தொகுதியில் சரத்குமார் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதே சமயம் நெல்லை தொகுதியில் களமிறங்க பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. நெல்லை நாடாளுமன்ற தொகுதி நெல்லை, பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “நெல்லை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவார். சமத்துவ மக்கள் கட்சி எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேர்தல் தேதி, வேட்பாளர் பட்டியல் ஆகியவை அறிவிக்கப்பட்ட பிறகு பிரச்சார பணிகளை தொடங்குவோம்” என்று தெரிவித்தார்.
கமல்ஹாசன் விளக்கம் தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். தமிழ்நாடு மற்றும் நாட்டின் நலனை காக்க எடுத்த முடிவு இது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவை தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனினும், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்தது ஏன்? என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ மூலமாக விளக்கம் அளித்துள்ளார். கமல்ஹாசன் கூறியிருப்பதாவது: தற்போதைய சூழல் தமிழ்நாட்டுக்கும் தேசத்துக்கும் பயனுள்ளாதக அமைய வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எதிர்வாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது. தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். தமிழ்நாடு, தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு இது” என்று கூறியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஜாபர் சாதிக்குடன் நெருக்கம் காட்டியது தெரியவருவதாகவும், இதற்கு தார்மீக பொறுப்பேற்று இருவரும் பதவி விலக வேண்டும் எனவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து புகார் மனுவை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் விவரங்களை அளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மசூதி அருகே, சாலை விவரத்தில் தொழுகை நடத்திய முஸ்லிம் பக்தர்களை காலால் எட்டி உதைத்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்ட் )செய்யப்பட்டார். நாட்டில் சமீப காலமாக குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளும் நடவடிக்கைகளும் அதிகரித்து வருகின்றன. ஒரு மதத்தினரை ஒழிக்க வேண்டும் என்று மாநாட்டிலேயே பகிரங்கமாக பேசும் அளவுக்கு நிலைமை மாறி உள்ளது. மாடுகளை விலக்கி வாங்கி வருபவர்களை கூட பசு கடத்தல் காரர்கள் எனக்கூறி தாக்குவதும் பொது இடங்களில் வழிபாடு நடத்தக் கூடாது என மிரட்டல் விடுப்பதும் சகஜமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் பக்தர்களை காலால் எட்டி உதைத்தும் தலையில் ஓங்கி அடித்தும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் அராஜகத்தை ஈடுபட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி இந்திரலோக் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் பக்தர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால்…
பீகார் மாநிலம் பாட்னாவின் பாலிகஞ்ச் பகுதியில் பா.ஜனதா கட்சியின் பேரணி நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும் போது கூறியதாவது:- காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர்கள் எப்போதும் தங்கள் குடும்பங்களின் நலனுக்காக உழைக்கின்றனர், ஆனால் ஏழைகளுக்காக எதையும் செய்யவில்லை . ஏழைகளுக்கு நல்லது செய்ய பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவால் மட்டுமே முடியும் பீகார் மாநிலம் பாட்னாவின் பாலிகஞ்ச் பகுதியில் பா.ஜனதா கட்சியின் பேரணி நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும் போது கூறியதாவது:- காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர்கள் எப்போதும் தங்கள் குடும்பங்களின் நலனுக்காக உழைக்கின்றனர், ஆனால் ஏழைகளுக்காக எதையும் செய்யவில்லை . ஏழைகளுக்கு நல்லது செய்ய பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவால் மட்டுமே முடியும் காங்கிரசும் ஆர்.ஜே.டி.யும் நீண்ட காலம் ஆட்சியில் இருந்தாலும், மூத்த தலைவர் கர்பூரி தாக்கூருக்கு…
தேர்தல் வருவதால் மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளதாக தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;- “சிலிண்டர் விலையை எப்பொழுதோ குறைத்திருக்க முடியும். ஆனால் தேர்தல் வரும் சமயத்தில் சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர். அதுவும் மகளிர் தினத்தில் சிலிண்டர் விலையை குறைத்திருக்கிறார்கள். பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும்தான் கவலையா? பெண்கள் சமையல் அறையிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயமாக இதை மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது இவ்வாரு கூறினார்
ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க முதல்வருக்கு – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல் ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகம் முழுவதும் வருகிற 12-03-2024 தேதி அன்று புனித ரமலான் மாதம் துவங்க உள்ளதால் அன்று முதல் இஸ்லாமியர்கள் 30 நாட்களும் விடிய காலை முதல் மாலை வரையிலும் நோன்பு வைத்து வருவார்கள் . ஆகவே அடிக்கடி மின்சாரம் தடை ஏற்பட்டால் நோன்பு வைத்திற்கும் இஸ்லாமியர்கள் மிகவும் சிரமம் படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு தடை இல்லா மின்சாரம் நோன்பு 30 நாட்களும் வழங்க வேண்டும் .மேலும் இஸ்லாமியர்கள் பகுதிகளில் இரவு நேரம் தேனீர் கடைகள் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது. நோன்பு 30 நாட்களும் இரவு நேரம் மசூதிகளில் நடை பெறும்…
குறையாது: அரசு டாக்டரான 3 அடி உயர இளைஞர் குஜராத்தின் பாவ் நகரை சேர்ந்த கணேஷ் பாரையா 72 சதவீத உயர குறைப்பாடுடன் பிறந்தவர். 3 அடி உயரம் மட்டுமே இருக்கும் கணேஷிற்கு டாக்டராக வேண்டும் என்ற பெரிய கனவு இருந்தது. ஆனால் அவரது உயரத்தை மட்டும் கணக்கிட்டு, அவர் டாக்டராகமுடியாது, அவசர சிகிச்சைகளை இவரால் கையாள முடியாது என்ற காரணத்தை கூறி, 2018ம் ஆண்டு கணேஷிற்கு மருத்தவப் படிப்பிற்கான சேர்க்கை மறுக்கப்பட்டது. ஆனால், கணேஷின் பள்ளி முதல்வர் உறுதுணையாக இருந்ததால், ‘குறையுடன் பிறப்பவர்கள் மருத்துவராகக் கூடாதா?’ என்ற கேள்வியை எழுப்பி சட்ட போராட்டத்தை ஆரம்பித்தார். இது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அவரை பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க அனுமதியும் அளித்தது. இதையடுத்து, பின் 2019இல் கல்லூரியில் சேர்ந்த அவர் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தார்.தற்போது பாவ்நகரில் உள்ள பொது மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக…
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார். அவ்வகையில், ராஜஸ்தானில் இன்று யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பன்ஸ்வாரா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காலியாக உள்ள 30 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும். அரசு தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவதை தடுப்பதற்கு உரிய சட்டம் இயற்றப்படும். விவசாயிகள் விளைவிக்கும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும். கிக் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியாவில் வடை சுடுவது பிரதமர் நரேந்திர மோடி-தமிழ்நாட்டில் வடை சுடுவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் மதுரை 73 வது வார்டு முத்துப்பட்டி பகுதியில் பத்து லட்ச ரூபாய் செலவில் விநாயகர் கோவில் நகரில் புதிதாக சத்துணவு அங்கன்வாடி மையம் அமைக்க முன்னாள் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பூமி பூஜை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் தேர்தல் பத்திரம் குறித்த கேள்விக்கு தேர்தல் பத்திரம் குறித்து கவலைப்படுவது காங்கிரஸ் மற்றும் திமுக தான் எங்களிடம் அந்த அளவுக்கு நிதி இல்லை ஆனால் எங்களுக்கு கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. திமுக கூட்டணி மக்களை எதிர்க்கவில்லை, உடல் ரீதியாக நலம் தான் வாயிலை வடை சுடுவது இந்திய அளவில் மோடி ஜி, தமிழ்நாட்டில் நம்ம ஸ்டாலின்…

