தேசிய முன்னேற்றக் கழக நிறுவன தலைவரும் திமுக தோழமைக் கட்சியுமான ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில்
மக்களுக்கு ஏதாவது ஒன்று பிரச்சனை என்றால் இந்த விஜய் நான் வருவேன் என்று பனையூரில் அமர்ந்து கொண்டு பஞ்ச் டயலாக் பேசி வரும் விஜய் அவர்கள் கரூர் துயர சம்பவத்திற்கு ஒரு சதவீதம் கூட அடி மனதில் இருந்து வேதனையோ ஆறுதலோ அந்த மக்களுக்காக ஏற்படுத்திக் கொள்ளவில்லை காரணம் கரூர் துயர சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து தான் வீட்டை விட்டு வெளியே வந்து பெயரளவிற்கு ஒரு சில வார்த்தைகளை பேசி அதுவும் திமுகவை விமர்சனம் வைத்து காணொளியை முடித்து வைத்தார் அதற்குப் பிறகு கரூர் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு துணையாக இருப்பார் என்று பார்த்தால் அதுவும் இல்லை பிறகு ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடித்துவிட்டு அங்கேயும் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ஆடிப் பாடி நடனம் ஆடினார் இது ஏதோ எதார்த்த நடனம் என்று யோசித்தாலும் கூட இப்போது தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் பனையூரில் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நடனம் ஆடுகிறார் அப்போது இதுவெல்லாம் விஜய் அவர்களின் இயல்பான குணத்தையே காட்டுகிறது ஈவு இரக்கம் என்று ஒன்று விஜய்யிடம் இருந்தால் எப்படி தன்னை பார்க்க வந்த மக்கள் 41 பேர் பலி ஆகி இருக்கிறார்கள் என்பதனை மனதில் நினைத்திருந்தால் இதுபோன்று வெட்கங்கெட்ட செயலை விஜய் அவர்கள் செய்து வருவாரா மேலும் இந்த லட்சணத்தில் மக்கள் பணியே செய்யாமல் இருந்து கொண்டு மக்களையே சந்திக்காமல் இருந்து வரும் விஜய் அவர்கள் மக்கள் பணியை எப்போதும் செய்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தமிழ்நாடு அரசையும் தமிழக முதலமைச்சரையும் கண்முடித்தனமாக விமர்சனம் வைப்பது விஜய் அவர்களின் அரசியலின் உச்சபட்ச கோமாளித்தனத்தை காட்டுகிறது பாஜகவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு எதற்கெடுத்தாலும் திமுக VS TVK தான் போட்டி என உளறி வருகிறார் வேடிக்கை என்னவென்றால் இவர் கட்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்து கூட்டணிக்கு வாருங்கள் வந்தால் ஆட்சியில் பங்கு தருகிறேன் என்று எவ்வளவோ இன்று வரை கெஞ்சியும் விஜய் அவர்களின் கோமாளித்தனமான அரசியலை பார்த்து தமிழ்நாட்டில் பெயர் சொல்லும் அளவிற்கு இருக்கக்கூடிய ஒரு கட்சி கூட விஜய் அவர்களை நம்பி வர தயாராக இல்லை இதற்கு என்ன காரணம் தான் வலிமையாக இல்லை என்பதனை விஜய் அவர்கள் தெள்ளத் தெளிவாக யோசித்துப் பார்க்காமல் தன்னை நம்பி வந்திருக்கும் ரசிகர்களிடம் பொய்யாகப் பேசி அவர்களை ஏமாற்றி தாம் தான் அடுத்த முதலமைச்சர் என்ன கோமாளித்தனமான பேச்சுகளை பேசி வருகிறார் இது எல்லாம் கூர்ந்து கவனித்து வரும் நடிகர் விஜய் அவர்களின் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் நகைச்சுவையோடும் இவர் பாஜகவின் கைக்கூலி என்றும் கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள் மக்கள் பணியையும் குறிப்பாக மகளிருக்கான முன்னேற்ற பணியை சிறப்பாக செய்து வரும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சியை மீண்டும் தொடர செய்வது என்பதை தமிழ்நாடு மக்கள் தெள்ளத் தெளிவாக முடிவெடுத்து வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சியை மக்கள் மக்கள் வெற்றிவாகை சூடி பரிசளிப்பார்கள் என்பதனை விஜய் அவர்கள் ஏனோ புரியாமல் பிதற்றுகிறார் இனிவரும் காலங்களில் ஆவது தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் உணர்வுக்கும் மதிப்பளித்து தன்னை முழு நேர அரசியல்வாதியாக விஜய் அவர்கள் நிரூபணம் செய்தால் மட்டுமே 5% வாக்குகள் ஆவது விஜய் அவர்கள் பெற முடியும் இல்லையென்றால் இந்த வாக்கு சதவீதத்திற்கும் பங்கம் ஏற்படும் என்பதனை இந்த தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் இந்திய அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்து தமிழ்நாடு முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றிருக்கும் அவர மாடல் நாயகனை விமர்சனம் செய்வது விஜய் அவர்கள் தன் முகத்தில் கரியை பூசிக் கொள்வதற்கு சமம் என நடிகர் விஜய்க்கு தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கண்டனத்தை பதிவு செய்கிறேன் இவ்வாறு ஜிஜி சிவா அருகில் குறிப்பிட்டிருக்கிறார்


