Homeதமிழ்நாடுஆட்சிக்கு வந்து 28 மாதங்களுக்கு பிறகு மகளிர் உரிமைத்தொகை அறிவித்தது மறந்து போனதா?

ஆட்சிக்கு வந்து 28 மாதங்களுக்கு பிறகு மகளிர் உரிமைத்தொகை அறிவித்தது மறந்து போனதா?

திமுகவுக்கு தவெக பதிலடி

எங்கே தான் நடத்திய ஊழல் மாடல் உதார் ஆட்சியின் ஊழல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்கிலீஷ் மாடல் அறிக்கை விட்டு தடுமாறி இருக்கிறார் என்று தவெக விமர்சித்துள்ளது.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வேஸ்ட்..வேஸ்ட் என்று முன்னாள் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தவெக கூறியிருப்பதாவது:

அரசு வாங்கிய கடன் எல்லாம் எங்கே போனது என்று தெரியாமல் அருமையான நிர்வாகத் திறன் ஆட்சி நடத்திய ஸ்டாலின் சார் தன் ஆட்சியை வேஸ்ட் வேஸ்ட் என்று ஆட்சி போன பிறகு அறிக்கை விட்டுள்ளார்மகளிர் உரிமைத்தொகையை ஆட்சிக்கு வந்த 28 மாதங்கள் வரை தூங்கிவிட்டு அறிவித்ததை மறந்துவிட்டு ஸ்பீட் முதலமைச்சர் போல ஃபேக் நரேட்டிவ் செய்ய முற்படுகிறார்

.ஆட்சி முடியும்போது அவசர அவசரமாக ஓட்டுக்காக லேப்டாப் வழங்கிய ஸ்டாலின் சார் ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப் வழங்கப்படப் போவதைப்பொறுக்காமல் சொந்தமாக யோசிக்கத் தெரியாத அரசு தன் அரசு என்பதை சுரத்தே இல்லாமல் ஒரு சூப்பர் சொதப்பல் அறிக்கை விட்டிருக்கிறார்.

எங்கே தான் நடத்திய ஊழல் மாடல் உதார் ஆட்சியின் ஊழல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்கிலீஷ் மாடல் அறிக்கை விட்டு தடுமாறி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img