திருச்சி மாவட்டத்தில் வீரபத்திரர் ராஜகுல பேரவையின் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகம் அருகே நடந்தது.
வீரபத்திர ராஜகுல பேரவை எம்பிசி பட்டியலில் ஐந்து சதவீதம் பங்கீடு மற்றும் ராஜ குளத்தூர் பெயர் மாற்றம் வேண்டி திருத்தா வசந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிறுவனத் தலைவர் கூறுகையில் 75 ஆண்டுகளாக நம் இனம் பற்பல போராட்டங்களை நடத்தியுள்ளது. அந்த வகையில் நமது பேரவையின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சிராப்பள்ளி மாநகரில் நமது வீரபத்திரர் ராஜகுலர் பேரவையின் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் ஆளுங்கட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் சாதி பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 138 வது பிரிவில் இருக்கும் நமக்கு எந்த சலுகைகளும் உரிய முறையில் கிடைக்கப்பெறவில்லை.
ஆகவே ஆங்கில பழமொழியான ஈஸ்ட் ஹார்வெஸ்ட் ஹோம் இஸ் பெஸ்ட் என்ற பழமொழிக்கு ஏற்ப சற்று ஏறக்குறைய 80 லட்சம் மக்களை உள்ளடக்கிய நமது சமுதாயத்திற்கு என ஐந்து சதவீத உள்ளீட பங்கினை பெற்று நம் மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயன்பெறும் வகையில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நல்ல முறையில் அமைதியான முறையில் நடைபெற்றது.
ஆகவே தமிழக அரசு நம்முடைய கோரிக்கைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பதாக நிறுவனத் தலைவர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
நிகழ்ச்சிகள் நிறுவனத் தலைவர் பொறியாளர் தா வசந்தன் கௌரவத் தலைவர் இன்பசேகரன் மற்றும் தமிழ்ச்செல்வன் மீனா குமார் சுப்புராஜ் காளியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுக் கொண்டனர் இறுதியாக திரு தங்கவேல் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
மற்றும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


