மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் ஆட்சியில் நடைபெறவுள்ள 2026–2027 ஆம் ஆண்டிற்கான முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் தனி நிதிநிலை அறிக்கையின் வரைவை, சனிக்கிழமை திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோவிலுக்கு எடுத்துச் சென்று, மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் சுவாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, வேளாண் நிதிநிலை அறிக்கை வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டு, தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனுக்கான பல்வேறு புதிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்தார்.இந்த நிகழ்வில் அமைச்சருடன் தவெக மாவட்ட நிர்வாகி விஜய் சந்திரன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது
செய்தியாளர் அ.மகேஷ்

