தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையின் படி மாநிலத்தின் வருவாய் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும் என்றும், அதே நேரத்தில் நிதிப் பற்றாக்குறை குறையும் என்றும் தெரியவந்துள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையின் படி மாநிலத்தின் வருவாய் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும் என்றும், அதே நேரத்தில் நிதிப் பற்றாக்குறை குறையும் என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் 3 லட்சத்து 9 ஆயிரம் கோடியாக இருந்த மொத்த வருவாய் வரவுகள், இந்த நிதியாண்டில் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, கடந்த நிதியாண்டில் மொத்த வருவாய் செலவினம் 3 லட்சத்து 78 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில் இவ்வாண்டு சுமார் 26 ஆயிரம் கோடி உயர்ந்திருப்பதாகவும், மூலதன செலவினம் சுமார் ஐயாயிரம் கோடி அதிகரித்துள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை விகிதம் 3.48% சதவீதத்தில் இருந்து 3.00% சதவீதமாக குறையும் எனவும், மாநிலத்தின் பொருளாதர வளர்ச்சி 5 லட்சம் கோடி உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

