Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sahabudeen
கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாலிபர் ஒருவர் பயணித்தார். பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்து நின்றபோது அந்த வாலிபர் வழக்கம்போல் கொட்டாவி விட்டார். அடுத்த நொடியில் அவரால் மீண்டும் வாயை மூடி இயல்பு நிலைக்கு வர முடியாமல் கடும் சிரமப்பட்டார். அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து பாலக்காடு ரெயில்வே மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி பி.எஸ்.ஜிதன் விரைந்து வந்து, சம்பந்தப்பட்ட வாலிபருக்கு உடனடி சிகிச்சை அளித்தார். இதையடுத்து அந்த வாலிபர் வாய் மூடி இயல்பு நிலைக்கு வந்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஸ்ரீராமபுரம் சுதந்திர பாளையாவில் வசித்து வருபவர் கோபால். இவரது மகள் யாமினி பிரியா (வயது 20). இவர் பனசங்கரியில் உள்ள ஒரு கல்லூரியில் பி பார்ம் படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற யாமினி தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பினார். மல்லேசுவரம் மந்த்ரி வணிகவளாகம் பின்புறம் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே வந்த போது அவரை வாலிபர் ஒருவர் வழிமறித்து தகராறு செய்ததுடன், அவரது கழுத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும்தினத் தந்திவிபத்துஸ்ரீராமபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலிக்க மறுத்த விவகாரத்தில் யாமினியை, அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த விக்னேஷ் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.இதையடுத்து மாணவி யாமினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நேற்று காலை பிரேத பரிசோதனை செய்து அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள்…
பீகார் மாநிலம் கயாவை சேர்ந்தவர் 74 வயதான முன்னாள் விமானப்படை வீரர் மோகன் லால். இவரது மனைவி 14 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், தான் மரணமடைந்தால் இந்த ஊரில் யார் எல்லாம் தன்னுடைய இறுதிச்சடங்கிற்கு வருவார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக இறந்தது போல நடித்து தனக்குத்தானே இறுதிச்சடங்கு செய்துள்ளார். இறுதிச்சடங்கு நடைபெற்ற போது, எழுந்து உட்கார்ந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இறந்தது போல் நடித்து தனக்கு தானே இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:”2021ஆம் ஆண்டில் தீபாவளியின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்; அதில் 10 சதவீத அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. ; அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார்” என்று கூறி, தி.மு.க. உருட்டு கடை அல்வா என்ற பெயரிலான காலி பாக்கெட்டுகளை பத்திரிகையாளர்கள் மத்தியில் காட்டினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், அமைச்சர் துரைமுருகன் மற்றும் சபாநாயகர் அப்பாவுவுடன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய வேல்முருகன், அந்தியூர் -பவானி தொகுதி மக்களுக்கு காவிரி உபரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பவானியை தொகுதிக்கான கோரிக்கையை கேட்க, அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார் என கூறி பதிலளிக்க மறுத்தார். இதனால் அமைச்சர் துரைமுருகனுடன் வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இடையே, தேவையில்லாத பிரச்சினையை உருவாக்க வேண்டாம் என்றும், யாருக்கு கேள்வி கொடுக்க வேண்டும் என்று தனக்கு தெரியும் எனவும் சபாநாயகர் கூறியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பிரபல ஆங்கில இதழான ‘தி பிரின்ட்’டில் வெளியான ஒரு கட்டுரை தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய ரகசிய கருத்துக்கணிப்பின் முடிவுகளை அடிப்படையாக கொண்ட அந்தக் கட்டுரை, வரவிருக்கும் தேர்தலை மையப்படுத்தி, விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் வாக்கு வங்கியை பற்றிய அதிர்ச்சி தரும் தரவுகளை வெளியிட்டுள்ளது. திமுக நடத்திய இந்த ஆய்வில், விஜய்யின் நிலைப்பாடு குறித்து இரண்டு முக்கிய காட்சிகள் ஆய்வு த.வெ.க தனித்துப் போட்டியிட்டால், அதன் வாக்கு வங்கி 23% வரை இருக்கும். த.வெ.க, அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய மூன்றும் கூட்டணி அமைத்தால், அந்த கூட்டணிக்கு சுமார் 35% வாக்குகள் கிடைக்கும். ஆனால், இதற்கு எதிராக நிற்கும் திமுக கூட்டணி 50% வரை வாக்குகளை பெறும் என்றும் இந்த சர்வே கணித்துள்ளது. அண்மையில் கரூரில் நடந்த துயர சம்பவத்துக்கு பிறகும், விஜய்யின் செல்வாக்கு குறையவில்லை என்றும், அவரது ரசிகர்கள்…
சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டிற்கு சென்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்ததாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஓ.பி.ரவீந்திரநாத், “இன்று உலகமெங்கும் உள்ள மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற தமிழ்த் திரையுலகின் பெருமைமிகு நாயகன், பத்மவிபூஷண், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்தை தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் உடன் இணைந்து, மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் நேரில்சந்தித்து, எனது தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, ஆசி பெற்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த கிருத்திகா ரெட்டி என்பவருக்கும் மகேந்திர ரெட்டி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.கிருத்திகா ரெட்டி உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். திடீரென கூச்சலிட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். கிருத்திகா ரெட்டியின் மரணமடைந்து 6 மாதங்களுக்கு பிறகு அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடையவில்லை, கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுந்த நிலையில் மகேந்திர ரெட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். மகேந்திர ரெட்டியை விசாரித்தபோது அவர் கூறிய விவரங்கள் போலீஸை அதிர வைத்தது. திருமணத்திற்கு முன்பு கிருத்திகா ரெட்டிக்கு குறைந்த ரத்த அழுத்தம், அஜீரண கோளாறு, வாயு தொல்லை போன்ற பிரச்சினைகள் இருப்பதை அவருடைய பெற்றோர் மகேந்திரரிடம் மறைத்திருப்பதாகவும், திருமணத்துக்குப் பிறகு மகேந்திரருக்கு தெரிந்ததாகவும் கூறினார். கிருத்திகாவுக்கு அடிக்கடி வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டு வந்ததால், மகேந்திர ரெட்டி அவரை கொலை செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முடிவு…
உத்தரபிரதேச மாநிலத்தில் பிரமோத் என்பவருக்கும் ஷிவானி என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், பிரமோத்துக்கு ஷிவானியின் தாயார் மீது காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி, சந்தித்து பேசி வந்துள்ளனர். இதன் காரணமாக கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மாமியாருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஷிவானி உயிரற்ற நிலையில் கிடந்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தான் ஷிவானியின் கணவர் பிரமோத், ஷிவானியின் தாயாருடன் ஒன்றாக இருக்கும் ஆபாச புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மனைவி கீர்த்தனா. இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தங்களது உறவினர்களுடன் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த லட்சுமிநகர் பகுதியில்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பிரமோத் என்பவருக்கும் ஷிவானி என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், பிரமோத்துக்கு ஷிவானியின் தாயார் மீது காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி, சந்தித்து பேசி வந்துள்ளனர். இதன் காரணமாக கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மாமியாருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஷிவானி உயிரற்ற நிலையில் கிடந்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தான் ஷிவானியின் கணவர் பிரமோத், ஷிவானியின் தாயாருடன் ஒன்றாக இருக்கும் ஆபாச புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.