Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sahabudeen
பலமுறை புகாருக்கு பதில் இல்லை: புதிய எம்.எல்.ஏ. வினோத் ரவி அதிரடி நடவடிக்கை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அசூர் பைபாஸ் சாலையில் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக மாறியுள்ளது. இதனால் அடிக்கடி தீப்பற்றி கடும் புகைமூட்டம் உருவாகி, அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்த பிரச்சனை குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் புதிதாக பொறுப்பேற்ற இளைஞர் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் வினோத் ரவி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், மக்களின் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு குப்பை மேடையை விரைவாக அகற்றி, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.இந்நிலையில், இதற்கு முந்தைய சட்டமன்ற உறுப்பினர் ஏன் இந்த பிரச்சனைக்கு தீர்வு…
பூம்புகார் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற எம்எல்ஏவுக்கு நிர்வாகிகள் வாழ்த்து மயிலாடுதுறை, மே – 16:நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் நிவேதா எம்.முருகன் இரண்டாவது முறையாக போட்டியிட்டு, வெற்றி பெற்றார் கடந்த சில தினங்களாக சட்டப்பேரவை நடைபெற்றது. அது முடிந்த நிலையில் நேற்று வீடு திரும்பிய நிவேதா எம்.முருகன் அவர்களுக்கு கழக நிர்வாகிகள் ஏராளமானோர் நேரில் சந்தித்து பூங்கொத்து மற்றும் சால்வைகள் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் நேற்று குத்தாலம் தாலுகாவிற்கு உட்பட்ட திருவாடுதுறை, திருவாலங்காடு திமுக நிர்வாகி மயிலாடுதுறை மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளர் வெடி.பாலா, குத்தாலம் ஒன்றிய திமுக பொருளாளர் பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அணைக்கரை கீழணையில் சர். ஆர்தர் காட்டனுக்கு முழு வெண்கல சிலை அமைக்க கோரிக்கை – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் அணைக்கரை கீழணையில் இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என போற்றப்படும் பொறியாளர் சர். ஆர்தர் காட்டனுக்கு முழு உருவ வெண்கல சிலை மற்றும் நினைவு பூங்கா அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ். மாசிலாமணி வலியுறுத்தினார். சர். ஆர்தர் காட்டனின் 223-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை காலை அணைக்கரை கீழணையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஜி. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் டி.ஆர். குமரப்பா முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர். ரவி வரவேற்புரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் கே. உலகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் மு.அ. பாரதி, ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர். தில்லைவனம், இயற்கை உழவர்கள் அமைப்பின்…
கும்பகோணத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆலோசனைப்படி, சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்தும், மாநில அரசே தேர்வுகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மத்திய பாஜக அரசை வலியுறுத்தி, தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கும்பகோணத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரடி அருகில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி.குமரன் தலைமை தாங்கினார். இதில் மாநகர மேயர் க.சரவணன், மாநகரத் தலைவர் கா.மிர்சாதின், மாவட்ட செய்தித் தொடர்பாளர் தண்டாளம் சோ.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் வட்டாரத் தலைவர்கள் ஏ.மணிசங்கர், டி.கே.கலைச்செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.பாலதண்டாயுதம், மாவட்ட மகளிர் அணி…
கும்பகோணம் மாநகர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி மாநகர செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.கே. கௌரிசங்கர் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் ஐடி விங் நிர்வாகியான ஞான. சுந்தரபாண்டியன் ஆகியோர், தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளரும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினருமான வினோத் ரவியை நேரில் சந்தித்து கட்சியில் இணைந்தனர்.இந்த நிகழ்ச்சியில், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அவர்களை வரவேற்று கட்சியின் அடையாள அங்கியை அணிவித்து வாழ்த்தினர்.கும்பகோணம் மாநகரில் அதிமுக அமைப்பில் முக்கிய பொறுப்புகளில் இருந்த இருவரின் இந்த திடீர் அரசியல் மாற்றம், உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வரவிருக்கும் அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு இந்த இணைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். நிருபர் அ.மகேஷ்
நாசரேத்தில் மதிமுக 33ஆவது ஆண்டு விழா மதிமுக 33ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு,தூத்துக்குடி தெற்கு மாவட்டம்,ஆழ்வார்திருநகரி ஒன்றியம் மற்றும் நாசரேத்து பேரூர்க் கழகம் சார்பில்6-5-2026 இன்று மாலை 6:45 மணி அளவில் நாசரேத்து நல்ல சமாரியன் மனநிலை காப்பகத்தில் உணவு வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் வே.இரஞ்சன்,மதிமுக பொதுக்குழு உறுப்பினர் இரா.மோகன்சிங்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக முன்னாள் அவைத்தலைவர் குரு.மத்தேயு ஜெபசிங்,ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலர்ஜெயக்கொடி ச.அரிகரன்,நாசரேத்து பேரூர் செயலர் ஐ.இராபர்ட்,ஆழ்வார்திருநகரி ஒன்றிய அவைத்தலைவர் வெள்ளக்கோவில் மனோகரன்,தென்திருப்பேரை பேரூர் செயலாளர் மலர் மு.முருகன்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுகஇலக்கிய அணி அமைப்பாளர்மூ.பாபுசெல்வன்,ஆழ்வார்திருநகரி ஒன்றிய துணைச் செயலர் லூ.மாசில்லாமணி,தென்திருப்பேரை பேரூர் துணைச் செயலாளர் கோ.செல்லப்பா,தென்திருப்பேரை செல்வகுமார்,பால்குளம் கார்த்திக்கேயன்,ஆம்ஸ் கருணா,தொண்டர் படை கணேசன் மற்றும்தொண்டர் படை முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாசரேத்தில்கோடை கால இலவச கால்பந்து பயிற்சி முகாம் நாசரேத்தில் கோடை கால இலவச கால்பந்து பயிற்சி முகாம் நடந்தது.நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் வெஸ்டர்ன் கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் 12 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு முகாமிற்கு பரி.யோவான் பேராலய தலைமைகுரு ஆல்பர்ட் ஜெயசிங் தாமஸ் தலைமை வகித்து ஆரம்ப ஜெபம் செய்தார். வெஸ்டர்ன் கிளப் நிர்வாகி அகஸ்டின் வரவேற்றார். நாசரேத் சேகர பொருளாளர் லேவி அசோக் சுந்தர்ராஜ், முன்னாள் கால்பந்தாட்ட வீரர் பவுளி ஜெயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதையடுத்து பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டன. பயிற்சியாளர்களாக நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜாசிங் ரோக்லண்ட் , மாரி, பபிட்டோ, கோவை ஆண்டனி, தூத்துக்குடி ஹரி, ஜெயக்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.இதில் முன்னாள் ரயில்வே அதிகாரி ஜான்சன், முன்னாள் கால்பந்து வீரர்கள் நசரேயன் ,ஜான் , வில்சன்,சில்வான்ஸ்,…
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன்,வெங்கடரமணன், நிர்மல்குமார். ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சென்னை தலைமை செயலகம் வந்தார் முதல்-அமைச்சர் விஜய். முன்னதாக அங்கு அளித்த காவல்துறை மரியாதையை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார். முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்து தற்காலிகசபாநாயகருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். நாளை புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெற உள்ளது. அண்ணா.. எம்.ஜி.ஆர். வரிசையில் கட்சி தொடங்கி 27 மாதங்களில் ஆட்சிக்கு விஜய் வந்துள்ளார். இந்த வெற்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கேரளம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் கட்சி மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக காலை 10 மணி முதலே திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் இந்திரா பவனுக்கு எம்.எல்.ஏ.க்கள் வர தொடங்கினார். அவர்களை காங்கிரஸ் முக்கிய பிரமுகர் செரியான் பிலிப் பிரதான வாயிலில் நின்றபடி வரவேற்று கொண்டு இருந்தார். அப்போது காங்கிரஸ் சார்பில் கொல்லம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் மாநில மகிளா காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணா வந்தார். அவரை பார்த்ததும் வாயிலில் நின்று கொண்டிருந்த செரியான் பிலிப், பெண் எம்.எல்.ஏ.வை பாய்ந்து கட்டி பிடித்துவரவேற்பது போல் முத்தம் கொடுக்க முயன்றார்.இதனால் அதிர்ச்சி அடைந்த பிந்து கிருஷ்ணா, அவரது கையை தட்டி விட்டு அங்கிருந்து செல்ல முயன்றார். ஆனால் செரியான் பிலிப் விடாமல் அவரை மீண்டும்…
தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து விஜய் இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள், விசிக மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றிடம் ஆதரவு கேட்டார் இந்த கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கக்கோரி ஆளுநரிடம் உரிமைக் கோரியுள்ளார் விஜய். விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி உயர் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆட்சியில் பங்கு கேட்கலாம் என முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வன்னி அரசு தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, இது திருமா காலம்-இனி உயர்வோம் மேலும் மேலும்!எனக் குறிப்பிட்டுள்ளார்.

