Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sahabudeen
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த 6ம் தேதி அதிகாலையில் ஜெயபாண்டி, அழகர் ஆகிய இருவரையும் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கொண்ட கும்பல் வாளால் வெட்டி விட்டு தப்பியது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருப்புவனம் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான போலீசார் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன், குணா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில் ஆகாசை கைது செய்து அழைத்து வந்த போது மேலப்பசலை பாலத்தில் இருந்து குதித்ததால், கால் முறிந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், சிகிச்சையில் இருந்த ஆகாஷ் நள்ளிரவில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார் என போலீசார் தரப்பில் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
தெஹ்ரானில் நிலத்துக்கு அடியில் காமேனி பதுங்கியிருந்த இடத்தை தகர்த்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து அந்த நாட்டின் மீது கடந்த 28-ந்தேதி திடீரென போர் தொடுத்தன.இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து ஈரானும் ஆவேசமாக பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி அசரடித்து வரும் அந்த நாடு. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கபடைத்தளங்களையும் தாக்கி வருகிறது. வளைகுடா பிராந்தியம் முழுவதும் நீடித்து வரும் இந்த போர் இன்று 7-வது நாளை எட்டியுள்ளது. இருதரப்பும் எவ்வித இடைவெளியும் இல்லாமல் ஒன்றையொன்று தாக்கி வருகின்றன. இந்தநிலையில், ஈரான் உயர் தலைவர் காமேனி தெஹ்ரானில் நிலத்துக்கு அடியில் பதுங்கியிருந்த இடத்தை தகர்த்த வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், சிங்கத்தின் கர்ஜனை ஆபரேஷனில் 50 ஜெட் விமானங்கள் ஈடுபட்டன.காமேனியின் இல்லம்,…
முன்னாள் அமைச்சர்வெல்லமண்டி நடராஜனுக்கு மீண்டும் அதிமுகவில் பொறுப்பு-கழக பொதுச்செயலாளர். ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்கள் மீண்டும் அதிமுகவில் கடந்த வாரம் இணைந்ததை அடுத்து அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு கழுத்தில் பச்சை துண்டு எண்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். மக்களின் உண்மையான பிரதிநிதி என்பதால் தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு என முந்தைய கூட்டத்தில் கூறினேன். பயமுறுத்தும் வேலை இனி எடுபடாது, அதனால் தான் நான் பேசுவதை மாற்றிபேசி அவதூறு பரப்புகின்றனர். ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி என குழந்தைகள் கூட சொல்லத்தொடங்கி உள்ளனர். தமிழ்நாடு தான் தவெக, தவெக தான் தமிழ்நாடு.. வரும் தேர்தலில் விசில் பறக்கும்.எனக்கும் தமிழ்நாட்டு மக்களும் இடையில் யாராலும் நுழைய முடியாது. தமிழ்நாட்டு அணி, டெல்லி அணி என்று சொல்கிறார்கள். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணியால் தொட்டுக் கூட பார்க்க முடியாது. அப்படி இருக்கும்போது, கிரிக்கெட்டில் விசில் போடுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத்தான். எனக்கு விவசாயத்தை பற்றி விவரமாக தெரியாது. ஆனால்…
தெலுங்கானா மாநிலம், மெகபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பீமேஸ்வர் (வயது 32). இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களுக்கு கூறி சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் பீமேஸ்வரை காணவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியின் குளத்தில் பீமேஸ்வர் பிணமாக மிதந்துள்ளார். போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜட் சர்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனையில் ஊழியர்கள் பிணத்தை பிண அறையில் வைத்து பரிசோதனைக்கு தயாரித்திருந்தபோது, அப்போது பிணவறையில்புகுந்த நாய் ஒன்று பீமேஸ்வர் பிணத்தை கடித்து சாப்பிட்டுள்ளது. இதைக் கண்ட ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிகாரிகள் இரவு முழுவதும் பீமேஸ்வர் பிணத்தை ஆம்புலன்ஸில் வைத்திருந்து பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களுக்கு ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி! கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து,அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன. நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்! இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும்…
இதுகுறித்து தமது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீதான துல்லிய தாக்குதலில் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ளார். உலகின் மிக மோசமான மனிதர் உயிரிழந்துஉள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதே போன்று நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஈரான் உயர் மட்ட தலைவரான ஆயதுல்லா காமேனியின் வீடு இஸ்ரேல் தாக்குதலில் தரை மட்டமானதுஎன்றும், காமேனியின் மருமகன், மருமகள், ராணுவத்தின் உயரதிகாரிகள், அணு ஆயுத திட்ட உயரதிகாரிகள் உயிரிழந்து விட்டதாக கூறினார். உயர்மட்ட தலைவரான காமேனி உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்றும், காமேனி உயிரிழந்து விட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இதனை ஈரான் அரசு தரப்பு மறுத்துள்ளது. அந்நாட்டு அரசு சார் செய்தி நிறுவனங்களான தஸ்னிம் மற்றும் மெஹர் இதனை மறுத்துள்ளன. காமேனி நல்ல உடல் நலத்துடன் உள்ளதாகவும், போரில் எதிரிகளுக்கு எதிரான நாட்டை வழிநடத்தி வருவதாகவும்…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தில், உயிருக்கு போராடிய தந்தையை, ஆம்புலன்ஸ் கிடைக்காததால் லோடு வண்டியில் ஏற்றி, CPR செய்து கொண்டே மகன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அவர்கள் மருத்துவமனை சென்றடைந்தபோது, மருத்துவர்கள் பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இறப்புச் சான்றிதழில் மாரடைப்பு மரணத்திற்குக் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வசதி உடனடியாக கிடைக்காததால், குடும்பத்தினர் ஒரு சரக்கு வாகனத்தை ஏற்பாடு செய்து மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் மருத்துவமனைக்கு செல்லும் பாதைதாமதமானதாலும் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சி தகவல்! திருச்செந்தூர் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்ற மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உடல்நிலை மற்றும் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடுமையான முதுகு வலி காரணமாக நீண்ட நேரம் நிற்கவோ, தீவிர பிரசாரம் செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சொத்து குவிப்பு வழக்கு, அமலாக்கத்துறை வழக்கு, சொத்துக்கள் முடக்கம் உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார். அண்மையில் திருச்செந்தூரில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு தெளிவாக வெளிப்பட்டது. தொண்டர்கள் ‘அனிதா அம்மாவை லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம்’ என பேசியபோது, அவர் ‘அப்படியெல்லாம் பேச வேண்டாம்’ என தடுத்தார். இறுதியாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், ‘திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் யார் போட்டியிட்டாலும்,…
கேரள மாநிலம், புன்னபுரா பகுதியை சேர்ந்தவர் உஷா ஜோசப் (51). இவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஆலப்புழா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பிய தினத்திலிருந்தே அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை. இதனால் அவருக்கு சிறுநீர் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறத் தொடங்கியது. இதையடுத்து அவர் சிறுநீரக நிபுணரை அணுகினார். அங்கு மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்-ரே பரிசோதனையில் அவரது வயிற்றுக்குள் சுமார் 10 செ.மீ. நீளமுள்ள கத்தரிக்கோல் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, எக்ஸ்-ரே அறிக்கைகளுடன் மீண்டும் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். விபரத்தை அறிந்த மருத்துவர்கள் பதற்றமடைந்தனர். பின்னர் வயிற்றில் உள்ள கத்தரிக்கோலை அகற்றலாம், ஆனால் இந்த விஷயத்தை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் நடந்த விசாரணையில்,…

