Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sahabudeen
தி.மு.க கூட்டணியில் தமிழகத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட வி.சி.க விருப்பம்:புதுச்சேரியில் திமுக கூட்டணியில் 5 சட்டமன்ற தொகுதிகள் வேண்டும் என கேட்கும் வி.சி.கதமிழகத்தில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் கூடுதலாக 4 இடம் கேட்கும் வி.சி.க தமிழகத்தில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் கூடுதலாக 4 இடம் கேட்கும் வி.சி.கதமிழகத்தில் 7 தொகுதிகள் வரை வி.சி.கவிற்கு வழங்க தி.மு.க:முன்வந்துள்ளதாக தகவல் புதுச்சேரியில் வி.சி.கவிற்கு கூட்டணியில் ஒரு இடம் வழங்க உறுதி செய்திருப்பதாக தகவல்கூடுதலாக 1 தொகுதி என்பது போதாது இரட்டை இலக்கம் என்பதில் திருமாவளவன் உறுதி என தகவல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைஇரண்டு முறை சந்தித்து இரட்டை இலக்க தொகுதிகளை வலியுறுத்தியுள்ளார் திருமாதிமுக கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தேமுதிகவிற்கு இரட்டை இலக்க தொகுதிகள் என அனுமானம் தேமுதிகவிற்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கிவிட்டு விசிகவிற்கு ஒற்றை இலக்கமா? என கேள்வி
பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகள் – SDPI மகளிரணி கடும் கண்டனம்!! SDPI கட்சி மகளிரணி மாநில தலைவர் K. பாத்திமா கனி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சி. வே. சண்முகம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பெண்களை குறித்து வெளியிட்டுள்ள அவமதிப்பான மற்றும் இழிவான கருத்துகள் தீவிரமாகக் கண்டிக்கப்படுகின்றன. அதிலும் சட்ட ஒழுங்கை பேணுகின்ற மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் பெண்களை தரக்குறைவாக பேசி இருப்பதை SDPI கட்சியின் மகளிர் அணி வன்மையாக கண்டிக்கிறது. பொதுமக்கள் முன்னிலையில் பேசும் அரசியல் தலைவர்கள் தங்களது வார்த்தைகளில் பொறுப்புணர்வையும், சமூக மரியாதையையும், பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆனால் இத்தகைய பெண்விரோத கருத்துக்கள், சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்குகின்றன. ஒரு பெண் நடிகை என்பதற்காக அவளை அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இது பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் பாதிக்கும் செயலாகும். இத்தகைய மனநிலைகள் பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரிய தடையாக உள்ளன. இந்நிலையில், தமிழக…
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஹீமா பிந்து (வயது 20). பி.எஸ்சி., பட்டப்படிப்பு படித்து வந்த இவர் பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து மீர்பேட் காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் குமார் கூறும்போது, கல்லூரி மாணவி ஹீமா பிந்து தத்தெடுத்து வளர்த்து வந்த பூனை திடீரென மரணம் அடைந்துள்ளது. இந்த வருத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்திருக்கிறார்இதனை அறிந்து, உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் மரணம் அடைந்து விட்டார் என கூறினார்.. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆதவ் அர்ஜுனா திமுகவின் “ஸ்லீப்பர் செல்” என்றும், திமுகவில் உதயநிதிக்கு எதிராக உள்ள சில நபர்களுக்காக அவர் வேலை செய்து வருவதாக லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், லாட்டரி அதிபர் மகனுமான ஜோஸ் சார்லஸ் மார்டின் வீடியோ வெளியிட்டுள்ளார். ஆதவ் அர்ஜூனா தவெகவிற்கு சென்றிருப்பதே ‘ஸ்லீப்பர் செல்’ வேலையைச் செய்வதற்காகத் தான், விஜய்க்கு எதிரான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி மக்களிடையே தவறான செய்தியை பரப்ப முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய இபிஎஸ், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்து வருவதாகவும், தமிழகத்தில் கடந்த 75 நாட்களில் 234 கொலைகள் நடந்துள்ளதாகவும் கூறினார். தமிழ்நாட்டுக்கு இனி வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது, பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி விரைவில் வரும் என்றும் இபிஎஸ் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார். தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்போம் என தெரிவித்தார்.
நாம் எப்போதும் மக்களின் டீம் தான் எனவும் மதசார்பற்ற கொள்கையிலும், சமூகநீதி நிலைபாட்டிலும் எந்த சமரசமும் இல்லை என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று நோன்பாளிகளுடன் நோன்பு திறந்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விஜய், அரசியலுக்கு வந்தது முதல் பல்வேறு வதந்திகளை பரப்பியவர்கள், இந்த கூட்டணி, அந்த கூட்டணி என சேரப் போவதாக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக கூறி கூட்டணி குறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். யார் என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட விஜய், தவெக தலைமையில் தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமியர்கள் அனைவருக்கும் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து ! காயல் பட்டிணம் மார்ச்: 17 இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தில் கூறியிருப்பதாவது. புனித ரமலான் மாதம் என்பது இஸ்லாமியர்களுக்காக ஏக இறைவனான அல்லாஹுதாலாவினால் வழங்கப்பட்ட மிகப் பெரிய வெகுமதியாகும். ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருக்க வேண்டும் என உம்மத்தினர் விரும்புவார்கள் என ஓர் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மாதம் ரமலான். ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பது சிரமமான காரியம்தான் என்றாலும், புனித ரமலான் மாதத்தில் கிடைக்கின்ற நன்மைகளைக் கருத்தில் கொண்டு மனிதர்கள் அதனை விரும்புவார்கள் என்பதாக முகமது நபி(ஸல்) அவர்கள் அருளியிருக்கின்றார்கள்.ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும்… ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் நோற்பதும் உள்ளத்தின் அழுக்குகளையும் , மன ஊசலாட்டங்களையும், நீக்கி விடும் என ஓர் ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது. நோன்பினுள் பலவிதமான…
தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் சரவணக்குமார் சஸ்பெண்ட். தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரு வருட காலமாக துணை ஆணையராக பணியாற்றி வருபவர் சரவணகுமார். இதற்கு முன்பு சரவணகுமார் நாகர்கோவில். தஞ்சாவூர் அதன் பிறகு ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். பணியாற்றி வந்த காலத்தில் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது அதன் அடிப்படையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றி வரும் சரவணக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் அதற்கான உத்தரவை இன்று துணை ஆணையர் சரவணக்குமாரிடம் வழங்கப்பட்டது
சாத்தான்குளம் அருகே வியாபாரிகள் சங்க நிர்வாகி மற்றும் மனைவியைத் தாக்கிய தகப்பன், மகனை சாத்தான்குளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது , சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் பேய்குளம் வியாபாரிகள் சங்க நிர்வாகி ஆவார் அப்பகுதியில் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். சம்பவ தினத்தன்று மாலை அவரது வீட்டிற்கு வந்த அவருடைய அண்ணன் கணேசன் மற்றும் அண்ணன் மகன் ராஜ்குமரன் ஆகிய இருவரும் அவதூறாக பேசியதோடு வீட்டின் முன்புறம் கதவு மற்றும் கேட் கதவுகளை மிதித்து உள்ளே வந்து உள்ளே இருந்த லிப்ட் கதவு கண்ணாடிகளை உடைத்துள்ளனர். மேலும் மாரிமுத்து தாக்கியதோடு வீட்டை எனது பெயருக்கு எழுதியதா என்று அவதூராக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாரிமுத்து மனைவி பூச்செண்டு சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்…
தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பம்: அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க.வை இணைக்க முயற்சி!? நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க. ஆகிய 3 கட்சிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. தி.மு.க.வின் மெகா கூட்டணிஅரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பது எழுதப்படாத விதி. தேர்தலுக்கு தேர்தல் இது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு, கடந்த காலங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களே சாட்சி. அதுபோன்ற நிகழ்வு வரும் சட்டசபை தேர்தலிலும் நடைபெறும் என்றே தெரிகிறது. இதுவரை நடைபெற்ற 16 சட்டசபை தேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில், இந்த முறை ஆளுங்கட்சியான தி.மு.க. 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்துக்கொண்டு தேர்தல் களத்தில் இறங்குகிறது. இதுமட்டுமல்லாது, 100-க்கும் மேற்பட்ட இயக்கங்கள் மற்றும் சங்கங்களின் ஆதரவும் தி.மு.க. கூட்டணிக்கு கிடைத்துள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க.இப்படி பலம் பொருந்திய படையை வெல்ல வேண்டும் என்றால், எதிரணியினர் அதற்கு ஏற்ற வகையிலான…

