Author: Sahabudeen

ஆட்டத்தை தொடங்கிய முதல்வர்! சென்னையில் அதிரடி ‘ஆபரேஷன்’! தலைநகர் சென்னையை அதிர வைக்கும் வகையில், நேற்றிரவு காவல்துறையினர் நடத்திய ஒரு பிரம்மாண்ட ‘ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்’ மூலம் 76 ரவுடிகள் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகப் ‘ஜீரோ சகிப்புத்தன்மை’ காட்டப்படும்என்று விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னை மாநகரக் காவல்துறை இந்த மின்னல் வேக அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. குறிப்பாகத் தி.நகர், அடையாறு மற்றும் புளியந்தோப்பு ஆகிய முக்கிய காவல் மாவட்டங்களில் நள்ளிரவில் சினிமா பாணியில் இந்தத் தேடுதல் வேட்டை அரங்கேறியுள்ளது.நேற்றிரவு தொடங்கியஇந்தத் திடீர் சோதனையில்,ஏற்கனவே குற்ற வழக்குகள்நிலுவையில் இருப்போர்,ஜாமீன் பெற்றுவிட்டுத்தலைமறைவாகஇருந்தவர்கள் மற்றும்போதைப்பொருள் விற்பனையில் ரகசியமாக ஈடுபட்டு வந்த சமூக விரோதிகளைப் போலீசார் குறிவைத்துத் தூக்கினர். இதில் தி.நகர் காவல் மாவட்டத்தில் மட்டும் 18 ரவுடிகளும், அடையாறில் 16 ரவுடிகளும், புளியந்தோப்பு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ரவுடிகளும் எனச் சென்னை…

Read More

ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டியுள்ளார்.தி.மு.க. தனது கொள்கையை மறந்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிக்க முயன்றதாகவும், இ.பி.எஸ். பின்வாசல் வழியாக முதலமைச்சராக திட்டமிட்டதாகவும் அவர் சாடினார். தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த தி.மு.க. -அ.தி.மு.க. முயன்றதாக ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டினார். அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே த.வெ.க.வுக்கு சி.வி.சண்முகம் தரப்பு ஆதரவு அளித்ததே தவிர, அமைச்சர் பதவிக்காக அல்ல என்று ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துள்ளார்.

Read More

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி ஹரிதா வெங்கடேஷுக்கு எம்எல்ஏ வினோத் ரவி நேரில் பாராட்டு தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கினார் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாராசுரம் 30வது வார்டு மல்லுக தெருவை சேர்ந்த மாணவி ஹரிதா வெங்கடேஷ், சமீபத்தில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தையும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் முதல் இடத்தையும் பெற்று சிறப்பான கல்வி சாதனை படைத்துள்ளார்.இந்த சிறப்பான சாதனையை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். வினோத் ரவி மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, அவரது கல்வி முன்னேற்றத்திற்காக ஊக்கத்தொகையும் வழங்கினார்.இந்த நிகழ்வில் மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு அவரை பாராட்டினர். மாணவி…

Read More

தமிழர் சட்ட இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் இரத்ததான முகாம் 2009 ஆம் ஆண்டின் ஈழப் போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழர் சட்ட இயக்கத்தின் சார்பில் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர். பார்த்திபன். தலைமையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்ததான வங்கியில் வைத்து இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர். வழக்கறிஞர் ராஜதிவ்யா, மாநில பொருளாளர் வழக்கறிஞர் காளிராஜ், மாநில பசுமை பாதுகாப்பு பிரிவு தலைவர் நிவேக் சமூக ஆர்வலர் நாராயணன், வழக்கறிஞர். நர்மதா, நிதிஷ் ஆகியோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

Read More

பருத்தி விவசாயிகளை பாதுகாக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் பருத்தி விவசாயிகளை பாதுகாக்கவும், வேளாண் கொள்கைகளில் திருத்தம் செய்யவும் வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கும்பகோணம் தலைமை அஞ்சலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாமு. தர்மராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஏ.எம். ராமலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் டி.ஆர். குமரப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், பருத்தி இறக்குமதி வரியை நீக்கக்கூடாது என்றும், வேளாண் ஆணையம் பரிந்துரைத்த C2 + 50% அடிப்படையில் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், கரும்பு வரைவு சட்டம் 2026-ஐ கைவிட வேண்டும், வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.இதனுடன், விவசாயிகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யாத ஒன்றிய…

Read More

விஜய்க்கு 6 மாதங்கள் நேரம் கொடுக்க வேண்டும்; புதியவர்களை குறைவாக எடைபோடக்கூடாது; அதிகமும் எதிர்பார்க்கக்கூடாது; விஜய் ஆட்சி எப்படி உள்ளது என்ற கேள்விக்கு கமல் பதில் விஜய்க்கு 6 மாதங்கள் நேரம் கொடுக்க வேண்டும்; புதியவர்களை குறைவாக எடைபோடக்கூடாது; அதிகமும் எதிர்பார்க்கக்கூடாது -கமல் விஜய் ஆட்சி எப்படி உள்ளது என்ற கேள்விக்கு கமல் பதில்; ரஜியுடன் போட்டி தான் பொறாமை பட்டது இல்லை; ரஜினியும், நானும் பொறாமைப்பட்டது இல்லை; விஜயின் ஆட்சி குறித்து தற்போது ஏதும் கூற முடியாது தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் கட்சி தொடங்கினால் திராவிட கட்சி தான்; இ.பி.எஸ்.சை தவிர அனைத்து சந்தித்தார் தலைவர்களையும் விஜய் மதுரை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பு

Read More

தரப்பு தீவிரம் அ.தி.மு.கபொதுக்குழுவை கூட்ட வேண்டும் என ஆதரவு கோரி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது; மொத்தமுள்ள 1800 பொதுக்குழு உறுப்பினர்களில் சுமார் 1000 பேரிடம் இருந்து எஸ்.பி.வேலுமணி கையெழுத்தை பெற்றுதரப்பினர்உள்ளதாக தகவல் உறுப்பினர்கள் கையெழுத்து அடங்கிய மனுவை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கி, பொதுக்குழுவை கூட்ட அழுத்தம் கொடுக்க வேலுமணி தரப்பு திட்டம்; பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆலோசனை பொதுக்குழு கூட்டுவது தொடர்பாக வேலுமணி தரப்பு கையெழுத்து கேட்டால் போட வேண்டாம் என தனது ஆதரவாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தி இருந்தார்

Read More

தடுக்க மு.க.ஸ்டாலினை நான் சந்தித்ததாக வதந்தி பரவியது; அந்த அளவுக்கு நான் தரம் கெட்டவன் அல்ல: ரஜினிகாந்த் காட்டமாக பதில் தேர்தல் முடிவுகளுக்கு பின் என்னைப் பற்றி விமர்சனங்கள் பரவியது””விமர்சனங்களுக்கு பதிலளிக்கவில்லை என்றால் அது உண்மையாகி விடும்””தேர்தல் முடிவுகளுக்கு பின் ஸ்டாலினை சந்தித்ததால் விமர்சனங்கள் வந்தது”மு.க.ஸ்டாலினை நட்பின் அடிப்படையில் சந்தித்தேன் – ரஜினி விஜய் முதல்வராகக்கூடாது என நான் முயற்சித்ததுபோல் விமர்சனம் வெளியானது விஜய் வெற்றிபெற்றபின் எக்ஸ் தளத்தில் வாழ்த்தினேன் ரஜினிவிஜய் மீது எனக்கு பொறாமை என பரப்புகின்றனர் – ரஜினிகமல் முதல்வராகி இருந்தால் கூட எனக்கு பொறாமை வந்திருக்குமா என தெரியவில்லைவிஜய் முதலமைச்சராவதில் எனக்கு என்ன பொறாமை? – ரஜினிவிஜய் வென்றதில் எனக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் – ரஜினி மக்களுக்கு விஜய் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது”விஜய் தனியாக வெற்றிபெற்றுள்ளார் ரஜினிகாந்த்”எம்ஜிஆர், என்.டி.ஆரை விட பெரிய வெற்றிபெற்றுள்ளார் விஜய்”எனக்கும் விஜய்க்கும் 28 வயது வித்தியாசம் -ரஜினி”சம்பிரதாயத்துக்காக விஜயை…

Read More

கும்பகோணத்தில் கனமழை பாதிப்பு: வடிகால் சீரமைப்புக்கு எம்.எல்.ஏ உடனடி நடவடிக்கை கும்பகோணம் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளான பெருமாண்டி ஊராட்சி அசூர் மெயின்ரோடு, OVM அம்சவள்ளி நகர் எதிரில் நேற்று பெய்த கனமழையால் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக அப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்கப்படாமல், குண்டும் குழியுமாக இருந்ததே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமாக உள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுவதாக கூறுகின்றனர். இந்நிலையில், சாலையில் மழை நீர் தேங்கி வெளியேற முடியாத அவல நிலை வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.இதையடுத்து, தகவலை அறிந்த கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்த அவர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு, சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்கவும், இனி…

Read More

தஞ்சாவூர்: மாவட்ட ஆட்சியர், மத்திய மண்டல DIG-ஐ சந்தித்த எம்எல்ஏ வினோத் ரவி தமிழக வெற்றி கழகத்தின் கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வினோத் ரவி அவர்கள், சனிக்கிழமை காலை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மத்திய மண்டல காவல் துணை தலைவர் (DIG) திரு. ஜியாக் ஷேக் ஆகியோரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.இந்த சந்திப்பில், சட்டம் ஒழுங்கு நிலை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தொகுதி சார்ந்த முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நிருபர் அ.மகேஷ்

Read More