இளம் பத்திரிகையாளரும் தேசிய முன்னேற்றக் கழக நிறுவன தலைவருமான ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழ் திரையுலகில் வெவ்வேறு மாநிலத்தவர்கள் கதாநாயகர்களாக கதாநாயகிகளாக நடித்து பெரும் வெற்றியை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் இப்போது நடித்தும் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு முழு நேர தொழிலே அதுதான் முழுநேர சம்பாத்தியுமே அதுதான் என இருக்கும்போது பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வைத்து சரவணா ஸ்டோர் என்கின்ற மிகப்பெரிய பிரம்மாண்டமான மால்களைத் திறந்து லட்சக்கணக்கான மக்கள் மலிவு விலையில் தங்களது வீட்டு உபயோக பொருட்கள் ஆகட்டும் உடைகள் ஆகட்டும் இன்னும் இதர அடிப்படைத் தேவைகளாகட்டும் சரவணா ஸ்டோரில் வந்து பயன் பெற்று செல்லும் வரலாற்று காட்சிகளை நாம் பல வருடமாக பார்த்து வருகிறோம் மேலும் பல்வேறு மாநிலங்களில் இருக்கக்கூடியவர்கள் தமிழகம் வருகின்ற போது சரவணா ஸ்டோருக்கு வந்து துணிமணிகள் மற்ற பொருட்கள் என வாங்கி செல்வதும் வாடிக்கையாக இருக்கிறது காரணம் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் தரமான பொருட்களை கொடுத்து நிரந்தரமான பெயரை சம்பாதித்து வரும் நிறுவனம் தான் சரவணா ஸ்டோர் அதேபோன்று சரவணா ஸ்டோரின் அதிபர் தமிழகத்தில் கால் பதித்து நடிக்க வேண்டும் மக்களுக்கு நல்ல செய்திகளை கொடுக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் கதாநாயகனாக நடித்து வருகிறார் அவர் ஏற்கனவே நடித்து வெளியாகிய லெஜன்ட் என்கின்ற படமும் தமிழகத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது ஒரு தமிழனாக தொழில் செய்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி பொது மக்களுக்கு மளிகை விலையில் அனைத்து பொருட்களும் கிடைத்து லாபத்தை ஈட்டி கொடுத்து பெயரெடுத்து இருக்க கூடிய லெஜன்ட் சரவணன் அவர்கள் ஒரு தமிழன் என்கின்ற வகையில் மேலும் நமக்கெல்லாம் பெருமை கொடுக்கிறது ஆனால் லெஜென்ட் சரவணன் அவர்கள் திரை உலகில் நடித்து தான் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் ஒரு சதவீதம் கூட வரவில்லை என்பதை அனைத்து தரப்பும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள் ஏனென்றால் அவருக்கு மாற்று தொழில் இருக்கிறது இதை நம்பி அவர் இல்லை என்பது தெரிந்த செய்தி நிலைமை இப்படி இருக்க அவரைப் பாராட்ட மனம் இல்லாமல் இருந்தாலும் கூட ஒரு சாரார் சினிமா துறையைச் சார்ந்தவர்களும் சினிமா துறையில் சினிமா செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்களும் சரி இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று சினிமா விமர்சனம் செய்யும் யூடுபர்கள் திட்டமிட்டு யாரிடமும் எதையோ பெற்றுக் கொண்டு மனசாட்சிக்கு விரோதமாக சினிமா விமர்சனம் என்கின்ற பெயரில் லெஜன்ட் சரவணன் அவர்களை குறைத்துப் பேசியும் அவர் படங்களை குறித்து மதிப்பிட்டு மக்கள் மத்தியிலே பதிவு செய்வதும் தொடர் வாடிக்கையாக இருக்கிறது வெறும் பணத்திற்காக பத்திரிகை தர்மத்தை குழி தோண்டி புதைத்து விட்டு தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டு மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்து வரும் ஒரு தமிழனாக தமிழகத் திறத்துறையில் கால் பதித்த லெஜன்ட் சரவணன் அவர்களை மட்டுப்படுத்த முயற்சி செய்வது என்பது மிகவும் கீழ்த்தரமான செயல் இது ஒரு தமிழனுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம் என இந்த தருணத்தில் பதிவு செய்கிறேன் அடுத்தடுத்து வரும் லெஜன்ட் சரவணன் அவர்களின் படங்களுக்கு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யக்கூடிய வேலையை செய்தால் மக்கள் இது போன்ற நபர்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும் லெஜன்ட் சரவணன் அவர்களின் தமிழ் திரையுலக பயணத்தை திட்டம் போட்டு எவர் தடுத்தாலும் இருட்டடிப்பு செய்தாலும் அவர்களுக்கு தினம் தினம் ரசிகர்கள் எந்தவித எதிர்பார்ப்புமின்றி பெருகி வருவதனால் அவருடைய வளர்ச்சி என்பது ஒருபோதும் இது போன்ற நயவஞ்சர்களால் தடுக்க முடியாது என பதிவு செய்து அவர்களுக்கு கடும் கண்டனத்தை தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பதிவு செய்வதில் கடமைப்பட்டுள்ளேன் என ஜி ஜி சிவா அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்


