தமிழக வெற்றி கழகம் தஞ்சை கிழக்கு மாவட்டம் சார்பில், திருவிடைமருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மகாதான வீதியில், அண்மையில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களை டிசம்பர் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அப்பகுதியில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்த (SIR) பணியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு, தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் ரவி தலைமை தாங்கினார், திருவிடைமருதூர் பேரூர் கழக செயலாளர் கோகுல் முன்னிலை வகித்தார், கழகப் பொருளாளர் எஸ், பிரபாகரன் நன்றி உரை வழங்கினார், அதைனைத்தொடர்ந்து அந்த பகுதியில் மழையால் தங்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் வீடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பகுதி மக்களிடம் வினோத் ரவி மற்றும் நிர்வாகிகள் கேட்டறிந்தனர். பின்னர் 182வது பூத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி முறையாக நடைபெறுவதையும், தகுதியானவர்களின் பெயர்கள் சேர்க்கப்படுவதையும் நிர்வாகிகள் உறுதி செய்தனர். இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் தஞ்சை கிழக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அஞ்சனா பாலாஜி, வினித் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ஏ. பாண்டியராஜன், கிழக்கு மாநகர செயலாளர் முருகானந்தம், தினேஷ் குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம், செந்தில், பொருளாளர் எஸ். பிரபாகரன், துணைச் செயலாளர் நவீன், துணைச் செயலாளர் மாசிலாமணி, இளைஞர் அணி பேரூர் கழக செயலாளர் ராஜேந்திரன் போன்ற முக்கிய நிர்வாகிகள், உட்பட்ட பகுதி பொதுமக்கள் ஏராளமானவர்கள் இருந்தனர்.
நிருபர் அ, மகேஷ்


