கோவாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் ஃபியூச்சர் சாம்பியன் அகடமியில் பயின்ற 8 மாணவர்கள் தங்கம் பதக்கமும் 6 மாணவர்கள் வெள்ளி பதக்கம் வென்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சென்னை இரயில் நிலையத்தில் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவா மாநிலம் காலிகெட் பகுதியில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் சென்னையை சேர்ந்த ஃபியூச்சர் சாம்பியன் அகடமியில் பயின்ற மாணவர்கள் நிறுவனரும், பயிற்ச்சியாளருமான ரங்கராஜன் தலைமையில் கலந்து கொண்ட மாணவர்கள் 8 பேர் தங்கபதக்கம் பெற்று முதல் பரிசும் 6 வெள்ளி பதக்கம் பெற்று இரண்டாம் பரிசு வென்று வெற்றிபெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்ந்ந்துள்ளனர். சென்னை இரயில் நிலையம் வந்த கராத்தே வீரர் வீராங்கனைகளுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்தன மாலை, சால்வை அணிவித்து உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஃப்யுச்சர் அகடமியின் நிறுவனர் ரங்கராஜன் பேசுகையில் கோவா மாநிலம் காலிகெட் பகுதியில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொண்டனர். இதில் எனது மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் பரிசுபெற்று வெற்றிபெற்றுள்ளனர். போட்டியில் பாஃர்ம் 1 (Form) தரப்பட்டுள்ளது, இது மாணவர்களின் எதிர்கால படிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் அதற்காக இந்த சர்வதேச போட்டியில் கலந்து கொண்டதாகவவும், அரசு கராத்தே போட்டியில் பங்கேற்கும் மாணவர்களை ஊக்குவித்து வேலை வாய்ப்புகள் பெருக்கவும், விளையாட்டு துறைக்கு அரசு மேலும் முக்கியதுவம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


