ஒரு கட்சியின் வேட்பாளர் வேறொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடவே கூடாது எனவும், உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது துருதிர்ஷ்டமானது என்ற தனது நிலைபாட்டில் உறுதியாக இருப்பதாகவும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தங்கள் எம்எல்ஏக்களை மதிமுக எம்எல்ஏக்கள் என்றே கூற முடியாது எனவும், இனி மதிமுகவினர் வேறு கட்சியின் சின்னத்தில் போட்டியிடகூடாது என ஆயிரம் தடவை கூட கூறுவேன்எனவும் ஆவேசமாக பேசினார்.


