நாசரேத் மதுரம் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா அனுசரிக்கப்பட்டது.
நாசரேத் டாக்டர் மதுரம் நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனை துறையின் இயக்குனரும், பள்ளி தாளாளருமான குருவானவர் ஜான் சாமுவேல் தலைமை வகித்தார். ஆசிரியை ஐடா ரோஸ்பெல் ஆரம்ப ஜெபம் செய்தார். தலைமை ஆசிரியை ஜெயந்தா சகிலா வரவேற்றார்.பள்ளி மாணவ மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எங்கனம் பங்களிக்கிறார்கள் என்பதை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.இதையடுத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. அதனைதொடர்ந்து பள்ளி மாணவ_ மாணவிகள், ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் ஜெனிட்டா, ஜெல்சியா ஜெபா, ஷைனி சாரோன், தமிழ்ச்செல்வி, இயற்கை ஆர்வலர்கள் அபிஷன் மோசஸ், ஜான்சன், ஆபிரகாம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை பட்டு ரோஸ் நன்றி கூறினார்.
படம் விளக்கம்
நாசரேத் டாக்டர் மதுரம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குருவானவர் ஜான் சாமுவேல் மரக்கன்று நட்டினார்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
நாசரேத் மதுரம் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா
Related Posts
Add A Comment


