நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு
செங்கல்பட்டு பெரும்பாக்கம் அரசு கலை, (மற்றும்) அறிவியல் கல்லூரியின்
நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு
செங்கல்பட்டு, பிப்.06-
செங்கல்பட்டு பெரும்பாக்கம் அரசு கலை, (மற்றும்) அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம், (மற்றும்) போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்குழு, (மற்றும்) அனைத்து மக்கள் சக்தி இயக்கம் இணைந்து நடத்திய சைபர் கிரைம், (மற்றும்) போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சக்தி தலைமை உரையாற்றி பேரணியை தொடங்கி வைத்தார். செம்மஞ்சேரி சரகம், காவல்துறை உதவி ஆணையர் ஆர்.வைஷ்ணவி சிறப்புரையாற்றினார்.மற்றும் பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் சண்முகம் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் டாக்டர் கலைமகன் வெங்கடேசன் கருத்துரை வழங்கினார். இதனை தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை சென்றடையும் விதத்தில் இந்த விழிப்புணர்வு பேரணி கல்லூரியில் துவங்கி செம்மஞ்சேரி நுழைவு வாயில் வரை நடைபெற்றது. அதனையடுத்து, பேரணி மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உணவு , பிஸ்கட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் மகளிர் அணியின்கீதா கலைமகன், செம்மஞ்சேரி பெரும்பாக்கம் ஒருங்கிணைப்பாளர்கள் திவ்யா, பிரியா, மைதிலி, இந்திராணியம்மாள், பானுமதி செம்மஞ்சேரி செயல் தலைவர் லட்சுமணன் சிங்கம், மாணவரணி ராகவன், தேவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றனர்.


