Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் லாரி டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருவதால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஓட்டுனருக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகததில் ஓட்டுனர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஏஐசிசிடியூ தொழிற்சங்கம் சார்பில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டம் எதிரொலியாக டிரைவர்கள் பணிக்கு செல்லாததால் 500க்கும் மேற்பட்ட லாரிகள் துறைமுகம் கிரீன் கேட் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். துறைமுகத்தில் 4 கப்பல்கள் நிற்கிறது. டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கப்பலில் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை ஜனநாயக தரைவழிப் போக்குவரத்து ஓட்டுனர் மற்றும் பொதுத்தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு ஓட்டுனருக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகததில் ஓட்டுனர்களுக்கான அடிப்படை வசதிகளை…
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்.டி.பி.எல். அனல் மின் நிலைய தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தில் பணி செய்யக்கூடிய தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளராக அறிவிக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வறை அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.டி.பி.எல். அனல் மின் நிலைய தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 13.02.2023 முதல் நடத்திய வேலை நிறுத்தம் நடைபெற்ற போது வேலை நிறுத்தம் தொடர்பான கோரிக்கைகளின் மீது 20.02.2023 அன்று சென்னையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையர் (நடுவண்) முன்னிலையில் எங்கள் தொழிற்சங்கத்திற்கும் அனல் மின் நிலைய நிர்வாகத்திற்கும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் ஏற்பட்ட ஒப்பந்தங்களை என்டிபிஎல் நிர்வாகம் அமலாக்கவில்லை. இதனிடையே மதுரை மண்டல தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் கடந்த 11.05.2023…
ஞாயிற்றுக்கிழமை STUDENTS POWER OF INDIA & நேரு யுவகேந்திரா வேலூர் & B.R.A. Boys (சௌளூர்) மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் 16 வது இரத்த தான முகாம். தில் ஏராளமான இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சூரஜ் பிரசன்னா, ஏகநாதன், பூபதி, ராகவி, உதயகுமார், முரளி யுவராஜ் ராவ், மற்றும் உறுப்பினர்கள் மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் டாக்டர் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதில்,G. திருமால் வருவாய் ஆய்வாளர் ஆண்டியப்பனூர் திருப்பத்தூர் மாவட்டம் & வேலு A.K. மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொண்டு இரத்த தானமும் செய்தார் என்பது குறிப்பிடுகிறார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நிறுவனர் மற்றும் மாநில தலைவர் ரூபின் குமார் நன்றிகளையும் மற்றும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்து வந்த பில்லா ஜெகன் என்பவர் தற்போது விலகி திமுகவில் இணைந்துள்ளார். இதனால் அப்செட்டில் உள்ள புஸ்ஸி ஆனந்த் தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளரை அறிவித்துள்ளார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணிச் செயலாளராக பொறுப்பு வகித்தவர் பில்லா ஜெகன், விஜய் ரசிகர் மன்றத் தலைவராக இருந்தவர். அவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் ஆவார். விஜய் புதிதாக தமிழக வெற்றி கழகத்தின் களப்பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற வேலை செய்ய வேண்டும், மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து செயல்படும் தலைவராக விஜய் இருப்பார் என்று புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.…
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில், சென்னை கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ, டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கட்டா நைட்ரைடர்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விரைவில் நடக்கவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. ரச்சின் ரவீந்திரா (1.8 கோடி), ஷர்தூல் தாகூர் (4 கோடி), டேரில் மிட்செல் (14 கோடி), சமீர் ரிஸ்வி (8.40 கோடி), முஷ்பிகுர் ரஹ்மான் (2 கோடி), அவனிஷ் ராவ் ஆரவல்லி (20 லட்சம்) ஆகியோரை இந்த 17ஆவது சீசனுக்கான மினி ஏலத்தில் சென்னை அணி வாங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்து வந்தது. இந்த நிலையில், சென்னை அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் இணைந்துள்ளது.…
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் முதல் மும்பை வரை ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ மேற்கொண்டு வருகிறார். தற்போது ஒடிசா மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அங்கு மக்கள் மத்தியில் பேசினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் முதல் மும்பை வரை ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ மேற்கொண்டு வருகிறார். தற்போது ஒடிசா மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அங்கு மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்(ஓ.பி.சி.) பிறந்ததாக மக்களை ஏமாற்றி வருகிறார். அவர் பிறப்பால் ஓ.பி.சி. இல்லை. பொதுப் பிரிவில் இருந்த ‘தெலி’ சாதியில்தான் மோடி பிறந்தார். அவர் குஜராத் முதல்-மந்திரியாக பதவியேற்ற பிறகுதான் அவரது சாதி ஓ.பி.சி.யில் சேர்க்கப்பட்டது” என்று தெரிவித்தார். இந்நிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு…
நகைச்சுவை நடிகர் தியாகுவின் சூப்பர்ஹிட் படங்கள் – ஒரு பார்வை இன்று பிறந்த நாள் காணும் நகைச்சுவை நடிகர் தியாகு நடித்த திரைப்படங்கள் குறித்து பார்ப்போம். நம்மை எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பவர் சொந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஆராய்ந்தால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அந்தவகையில் தியாகு என்றழைக்கப்படும் நடிகரும் ஒருவர். இவரது இயற்பெயர் தியாகராஜன். கும்பகோணத்தில் பிறந்தவர். இவர் பிரபல வயலின் வித்வான் ராசமாணிக்கம் பிள்ளையின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப்படங்களில் இவரது நகைச்சுவை தனியாகத் தெரியும். இவரது முகத்தைப் பார்த்தால் திருட்டு முழி கலந்த வில்லத்தனமாக இருக்கும். சில படங்களில் துணை வில்லனாகவும் நடித்து இருப்பார். இவர் நடித்த சில படங்களைப் பார்ப்போம். ஒரு தலை ராகம் 1980ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் இப்ராகிம். சங்கர், ரூபா, சந்திரசேகர், தியாகு இவர்களுடன் டி.ராஜேந்தர் நடித்து இருந்தார். கதை, இசை மற்றும் நடிப்பு என முப்பரிமாணங்களைக்…
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை, அரசியல் கட்சியினர் கட்சி மாறும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரிகள் மந்திரி ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். அதேபோல், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். பா.ஜ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலரின் விவரம்:- ஆர்.துரைசாமி கு.வடிவேல் கந்தசாமி கோமதி சீனிவாசன் ஆர்.சின்னசாமி எம்.வி.ரத்தினம் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் கந்து வட்டி தொழில் கொடி கட்டி பறக்கிறது. கோவில்பட்டி, கடம்பூர், கயத்தார், எட்டயபுரம், நெல்லை, தென்காசி என பல்வேறு பகுதியில் நெட் ஒர்க்காக செயல்படுகின்றனர். கந்து வட்டியினால் பலரும் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது. கந்து வட்டி கும்பல் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. செக் லீப் , ப்ரோ நோட் ஆகியவற்றை வைத்து கந்து வட்டி கும்பல் மிரட்டி வருவதாகவும்,, எனவே கந்து வட்டி சட்டத்தினை திருத்தம் செய்ய வேண்டும்,, தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி வழக்கறிஞர் அய்யலுச்சாமி என்பவர் கழுத்தில் செக் லீப் , ப்ரோ நோட் ஆகியவற்றை மாலையாக அணிந்தும், ஒரு கையில் காந்தி புகைப்படம் மற்றும் மற்றொரு கையில் அக்னி சட்டி ஏந்தி நூதன போராட்டத்தில்…
நாடு முழுவதும் அரிசி விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஓராண்டில் 15 சதவீதம் அதிகரித்து விட்டது. எனவே, அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக, மலிவு விலையில் அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கு ‘பாரத் அரிசி’ என்று பெயரிடப்பட்டது. பாரத் அரிசி’ அறிமுக விழா நேற்று டெல்லியில் நடந்தது. மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஷ் கோயல் அறிமுகப்படுத்தினார். பாரத் அரிசி விற்பனைக்காக பயன்படுத்தப்படும் 100 வாகனங்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 5 கிலோ மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளில் பாரத் அரிசி கிடைக்கும். கிலோ ரூ.29 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய மந்திரி பியூஷ் கோயல், 5 பயனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசி பாக்கெட்டுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “மொத்த விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பெரும்பாலான மக்களுக்கு பலன் அளிக்கவில்லை. எனவே, சில்லரை சந்தையில் தலையிட்டுள்ளோம்.…

