தமிழகத்தில் கந்து வட்டி தொழில் கொடி கட்டி பறக்கிறது. கோவில்பட்டி, கடம்பூர், கயத்தார், எட்டயபுரம், நெல்லை, தென்காசி என பல்வேறு பகுதியில் நெட் ஒர்க்காக செயல்படுகின்றனர். கந்து வட்டியினால் பலரும் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது. கந்து வட்டி கும்பல் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. செக் லீப் , ப்ரோ நோட் ஆகியவற்றை வைத்து கந்து வட்டி கும்பல் மிரட்டி வருவதாகவும்,, எனவே கந்து வட்டி சட்டத்தினை திருத்தம் செய்ய வேண்டும்,, தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி வழக்கறிஞர் அய்யலுச்சாமி என்பவர் கழுத்தில் செக் லீப் , ப்ரோ நோட் ஆகியவற்றை மாலையாக அணிந்தும், ஒரு கையில் காந்தி புகைப்படம் மற்றும் மற்றொரு கையில் அக்னி சட்டி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். தனது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது கோரிக்கை மனுவினை வழங்கினர்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
கந்து வட்டியினால் ஏற்படும் தற்கொலைகளை தடுக்க வலியுறுத்தி – கோவில்பட்டியில் கையில் அக்னி சட்டியை ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகி
Related Posts
Add A Comment


