திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த
செங்கரை கிராமத்தில்
அரசு சார்பில் 50 50 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்ட நிலையில் அந்த இடத்தில் அப்பகுதி மக்கள் குடிசை வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்,
மேலும் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் இணைப்பு, சாலை வசதிகள்,
மின்சார இணைப்புகள் ஆகியவற்றை அமைத்து தரவேண்டும் எனவும்,
இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள்
வீட்டிற்குள்ளே வருவதால்
குழந்தைகள், பெரியோர்கள் என அனைவருக்கும் உயிர் பயம் ஏற்படுவதாகவும்,
எனவே
அப்பகுதியில் உடனடியாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டு, சாலை ஓரம் மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப்பிடம்,
அப்பகுதி சமூக ஆர்வலர் தேசிங்குராஜன், மற்றும் விக்கி, தலைமையில் 50 க்கும் மேற்பட்ட எஸ் சி.,எஸ்டி பட்டியலின பழங்குடி இன பொதுமக்கள்
கைகுழந்தைகளுடன் கோரிக்கை மனு அளித்தனர்.
