பொத்தரங்கன் விளை
2.5கோடி மதிப்புள்ள கட்டப்பட்ட புதிய
பரி. திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை,.
பரமன்குறிச்சி பொத்தரங்கன் விளை பரி. திரித்துவ ஆலய பிரதிஸ்டை அசனப் பண்டிகை 4 நாட்கள் நடந்தது.
முதல் நாள் காலை பரி. திருவிருந்து ஆராதனை,குடும்ப கூடுகை, விஷ்வவாணி கலைநிகழ்ச்சியும்.
இரண்டாம் நாள் சபையின் முதல் தலைமுறை விசுவாசிகள் மற்றும் சபையின் முன்னோர்களை கானப்படுத்துதல்.மாலையில் பரமன்குறிச்சி பஜாரில் இருந்து ஓய்வு பெற்ற பேராயர் தேவசகாயத்தை பாடல் பவணியாக திருச்சபையார் அழைத்து வருதல் பின்னர் ரூ.2.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய ஆலயத்தை பேராயர் தேவசகாயம் திறந்து வைத்தார்.பின்னர் திருவிருந்து ஆராதனை, திடப்படுத்துதல் ஆராதனை நடந்தது. ஆராதனையில் சேகர தலைவர் தாமஸ் ரவிக்குமார், கவுன்சில் சேர்மன் யோபு ரத்தினத்தினசிங், குருவானவர்கள் சந்தோஷ்பிரபு, ரவி, டி.சி .மெம்பர் டாக்டர்.தர்மராஜ், மதுரை ஜான்சன் பலர் கலந்துகொண்டனர்.அதனை தொடர்ந்து பேராயர் மற்றும் ஆலய மலர் வெளியிட்டனர்.
மூன்றாம் நாள் காலை ஆலய அசனப் பண்டிகை மற்றும் பரி.ஞானஸ்நான ஆராதனை தாவீது சுந்தரனார் சபை மன்ற தலைவர் யோபு ரத்தினசிங் தலைமையில் நடந்தது. அதனை தொடர்ந்து அசன பண்டிகை ஆயத்த ஜெபம், மாலை பொது விருந்து அசனம், சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி நடந்தது.
நான்காம் நாள் பாக்கியநாதன் நல்வழி சங்க பவனி,ஸ்தோத்திர ஆராதனை ஆலோசனை கூடுகை, விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை நடந்தது.
ஏற்பாடுகளின் சேகரத்தலைவர்: தாமஸ் ரவிக்குமார், சபைத்தலைவர்: கோல்கி வேதநாயகம், தலைவர்.ஜெபராஜ் செயலாலர்; இராஜசிங்ரூபன், பொருளாளர்: ஜெபக்கனி ஆலய நிர்வாக குழு உறுப்பினர்கள்:ஐசக் சாமுவேல்,தர்மராஜ்,ரபீசன் பாக்கியராஜ், ஜெனோவின் சாம்ராட் மற்றும் சபை மக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.
படம் விளக்கம்: பொத்தரங்கன் விளை பரி. திரித்துவ ஆலயத்தை ரூ. 2.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய ஆலயத்தை ஓய்வு பெற்ற பேராயர் தேவசகாயம் திறந்து செய்தார்.


