வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் அமைந்துள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில், தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது, வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு விநியோகிக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்த விதைநெல், நிலக்கடலை, உளுந்து, பச்சைப்பயறு, கேழ்வரகு உள்ளிட்ட விதைகளின் தரத்தை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விதைகளை கைகளில் எடுத்து பரிசோதித்த அவர், அவற்றின் தரம், இருப்பு, விவசாயிகளின் தேவைக்கேற்ப போதுமான அளவு கையிருப்பு உள்ளதா என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.மேலும், விதைகள் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளனவா, தரம் பாதிக்காத வகையில் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்த அமைச்சர், விவசாயிகளுக்கு தரமான விதைகள் உரிய நேரத்தில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்இந்த திடீர் ஆய்வின் மூலம், வேளாண் உள்ளீடுகளின் தரத்திலும், விவசாயிகளுக்கான சேவையிலும் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் வினோத் வலியுறுத்தினார்.செய்தியாளர் அ.மகேஷ்
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
விதைகள் தரமாக உள்ளதா? இருப்பு போதுமா?- வேலூரில் அமைச்சர் ர. வினோத் திடீர் ஆய்வு
Related Posts
Add A Comment

