Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sahabudeen
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ நடத்தி வருகிறார். அவரது யாத்திரை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மும்பையில் உள்ள சைத்திய பூமி எனப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவிடத்தில் ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை நிறைவு செய்கிறார். தொடர்ந்து நாளைய தினம் ராகுல் காந்தி தலைமையில் ‘நியாய சங்கல்ப பாதயாத்திரை’ நடைபெற உள்ளது. மும்பையில் உள்ள மணி பவணில் இருந்து ஆகஸ்ட் கிராந்தி மைதான் பகுதி வரை பாதயாத்திரை நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு ‘இந்தியா’ கூட்டணி தலைவரக்ள் பங்கேற்க உள்ளனர்.
மதுரை கோச்ச்சடையில் ரேஷன் கடை திறப்பு நிகழ்வில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். பி.எம். ஶ்ரீ பள்ளி திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திடவுள்ளது குறித்த கேள்விக்கு,”திமுகவுக்கு நிலையான கொள்கை கிடையாது. நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்த போட்டது திமுக தான்.நீட் ரத்து ரகசியத்தை உதயநிதி இதுவரை சொல்லவில்லை. திமுக காலத்தில் தான் தமிழர்களின் உரிமைகள் பறிபோனது. மத்திய அரசை எதிர்ப்பது போல் எதிர்ப்பது தான் திமுகவின் கொள்கை” என்றார் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அண்ணாமலை விமர்சித்தது குறித்த கேள்விக்கு,”தமிழ்நாட்டில் உள்ள ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான்.மத்தியில் ஆளும் கட்சி என்ற மமதையில் அண்ணாமலை மறைந்த தலைவர்களை மதிக்காமல் அரைவேக்காடு தனமாக பேசுகிறார். அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பெட்டியை உடைக்கும் போது தான் பாஜகவுக்கு மக்கள் என்ன ஆப்பு வைத்துள்ளார்கள் என்று தெரியும். அதன் பிறகு அண்ணாமலை இருப்பாரா, தொடர்வாரா…
உடன்குடி ஊராட்சி ஒன்றியம் நயினார்பத்து ஊராட்சி அம்மன்புரம் கிராமத்தில் 35 குடும்பங்களுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளுக்கு மின் இணைப்புகள் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் நயினார்பத்து ஊராட்சி அம்மன்புரம் கிராமத்தில் 35 குடும்பங்களுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளுக்கு மின் இணைப்புகள் இல்லாமல் சிரமப்பட்டு வந்த நிலையில், கனிமொழி எம்.பி., தமிழக மீன்வளம், மீனவர் நலன் -கால்நடை பராமரிப்புத் துறை அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் எடுத்த நடவடிக்கையால் மின் இணைப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டது. இதையொட்டி, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமையில் அம்மன்புரத்தில் நடைபெற்ற விழாவில் மின் இணைப்புக்கான சான்றிதழ்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். மேலும் இக்குடும்பத்தினர்கள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு 2001 முதல் 2025 வரை கட்டவேண்டிய நில…
புதுடெல்லி, தற்போதைய 17-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற ஜூன் மாதம் 16-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு, புதிய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே 18-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கடந்த ஆண்டு முதலே இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தேர்தல் கமிஷனர்கள் சுற்றுப்பயணம் செய்து, தேர்தலை நடத்துவது குறித்து ஆய்வு நடத்தினர். அனைத்து அரசியல் கட்சியினரிடமும் கருத்துக்களை கேட்டறிந்தனர். அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்த நிலையில், அரசியல் கட்சியினர் ஒரு புறம் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என மும்முரமாக உள்ளனர். இந்தநிலையில் எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது. அதாவது இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு, 18-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான…
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை 2019ல் அமல்படுத்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்துஎஸ்டிபிஐ கட்சி மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் அவர்கள் தலைமை தாங்கினார் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜாபர் சுல்தான் அவர்கள் வரவேற்புரை நல்கினார் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது அவர்கள் தொகுப்புரையாற்றினார் மற்றும் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் மாநில செயலாளர் அபூபக்கர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்கள், இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக்கோரி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் அடிக்கடி கைது செய்யப்படுவது குறித்து தான் ஏற்கெனவே பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். கடந்த வாரம் எழுதியிருந்த கடிதத்தில் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 22 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தான் கோரியிருந்தேன். ஆனால் இன்று (15.03.2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் உட்பட 15 மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்பதை கவலையோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைவதுடன், மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வாழும்…
தமிழ் சின்னத்திரையில் “லொள்ளு சபா” என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் சேசு.இவர் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சின்னத்திரையை தொடர்ந்து, ஏ1, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சேஷு மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் சேஷு விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது நண்பர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஊடகங்களில் வருகின்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இதுபோன்ற வதந்திகளை, விஷமப் பிரச்சாரங்களை, தவறான தகவல்களை கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்றும் முதற்கண் கேட்டுக் கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தல் குறித்து எடுக்கப்படும் முடிவு என்னால் மட்டுமே அறிவிக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் “இரட்டை இலை” சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது நமது விருப்பம். இதனை, பத்திரிகையாளர் சந்திப்பின்போது நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். இதனைத் தொடர்ந்து “இரட்டை சிலை” சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்த முயற்சிக்கு விரைவில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம். இந்தியாவில் தொடர்ந்து நிலையான ஆட்சியை, நல்லாட்சியை பிரதமர் மோடியால் மட்டுமே தர முடியும் என்பதன் அடிப்படையில், பா.ஜ.க.வுக்கு நமது ஆதரவினை…
புதிய கருத்து கணிப்பில் தகவல் நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டன. அதே நேரம் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதுவரை வந்துள்ள பெரும்பாலான கருத்து கணிப்புகள், மீண்டும் பிரதமராக மோடியே தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளன. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க. கூட்டணிதான் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகளில் தெரியவந்துள்ளது. தற்போது நியூஸ்18 நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 30 தொகுதிகளை தி.மு.க கூட்டணி கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது. பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 5 தொகுதிகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் அந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான…
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 14.03.2024 19.03.2024 2: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20.03.2024: தமிழகத்தில் ஓரிரூ இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 14.03.2024 16.03.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 14.03.2024 18.03.2024 2: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.…

