தீவுப்பகுதியில் தொடரும் மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் சிறை பிடிப்பு இதற்கு எதிராக உறுதியான குரல் மற்றும் போராட்டம் மேற்கொள்ளாமல் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்
மீனவர் பிரச்சனையை தீர்க்காமல் அதற்கு எதிராக வீரியமாக செயல்படாமல் இருப்பதற்கு ராஜினாமா செய்து விட்டு உறுதியாக குரல் கொடுப்பவர் இடம் விட்டுச் செல்லலாம்
ஐந்தாண்டு காலம் முடிந்தும் இரண்டாவது முறையும் மக்கள் வெற்றி பெற வைத்தது மக்கள் பிரச்சினை தீர்ப்பதற்கு தான் தவிர
திருமண நிகழ்ச்சியிலும் இறப்பு நிகழ்ச்சியும் கலந்து கொள்வதற்காக உங்களை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கவில்லை, இப்போதாவது மீனவர் பிரச்சினைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்துங்கள்.
அதே போன்று வேதாளை ஊராட்சியில் தொடர்ந்து பின்கோடு பிரச்சனையால் பாஸ்போர்ட் அலுவலகத்தில் அகதிகள் என வினவப்பட்டு மன உளைச்சலுக்கு மக்கள் ஆளாகிறார்கள், ஜமாத் நிர்வாகம் உட்பட அனைவரும் சேர்ந்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியை வன்மையாக கண்டிக்கிறோம்
இராமநாதபுரம் பாராளுமன்றம் முழுவதும் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதை கண்டு கொள்ளாமல் இருப்பது பொறுப்புக்கு அழகல்ல
இந்த பாராளுமன்ற கூட்ட த் தொடரில் உடனடியாக மக்கள் பிரச்சனைகளை வலியுறுத்தி குரல் எழுப்ப வேண்டும், குறிப்பாக மீனவர்களின் பிரச்சனைகளையும், வேதாளை பின்கோடு பிரச்சனையையும் உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
M. முகமது சுலைமான் MBA
மாவட்ட பொதுச் செயலாளர்
SDPI கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்

