ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 123 (நிதி (A), நாள்: 24.06.2026)-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சை மாநகரம், மருங்குளம், மாரியம்மன் கோவில், பூதலூர் உள்ளிட்ட கிளைகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஓய்வூதியர்கள், தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, அரசாணைக்கு எதிராக முழக்கமிட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு மாரியம்மன் கோவில் கிளைத் தலைவர் ஜெ. ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மருங்குளம் கிளைத் தலைவர் வி. பன்னீர்செல்வம், மாரியம்மன் கோவில் கிளைச் செயலாளர் ஆர். வெங்கடராஜி, மாவட்டப் பொருளாளர் எம். அறிவழகன், கரந்தை கிளைச் செயலாளர் வி. சாமிநாதன், பூதலூர் கிளைத் தலைவர் ஆர். கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறப்படும் அரசாணை எண் 123-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, அவர்களின் நலன்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. முடிவில் மாவட்ட பிரதிநிதி கோ. ராஜமன்னார் நன்றி கூறினார்.செய்தியாளர் அ.மகேஷ்
