தமிழகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் பாராளுமன்ற தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 10/ 06/ 2024 நேற்று திங்கட்கிழமை மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் தமிழக முழுவதும் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச. வளர்மதி இஆப தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலத்துறையின் மூலம் நவீன செயற்கை கால் 3 நபர்களுக்கு ரூ 75 000 மதிப்பீட்டில் மொத்தமாக 2.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியில் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 1 லட்சம் 2 நபர்களுக்கும் பழங்குடியினர் நலத்துறை இன சார்பில் 5 நபர்களுக்கு தலா 35 000 வீதம் 1,75 லட்சம் இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்கப்பட்டது
இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது ) விஜயராகவன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.


