Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » கன்னியாகுமரி அருகே கடற்கரையில் எலும்பு கூடாக மனித சடலம் ஒன்று கரை ஒதுங்கியது.
    இந்தியா

    கன்னியாகுமரி அருகே கடற்கரையில் எலும்பு கூடாக மனித சடலம் ஒன்று கரை ஒதுங்கியது.

    SahabudeenBy SahabudeenNovember 26, 2024Updated:November 26, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே கூட்டுமங்கலம் கடற்கரை பகுதிக்கு நேற்று அந்த பகுதியை சேர்ந்த சிலர் சென்றனர். அப்போது எலும்பு கூடாக ஒரு மனித சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து குளச்சல் கடலோர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிறகு கரை ஒதுங்கிய மனித சடலத்தை கைப்பற்றினர். அந்த பிணம் ஆணா? பெண்ணா? என அடையாளம் காண முடியாத அளவுக்கு காட்சி அளித்தது. மேலும் சங்கு, சிப்பிகள் உடலின் மீது படித்திருந்தது. பிணமாக மீட்கப்பட்டவர் 2 மாதங்களுக்கு முன்பே கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மண்டைக்காடு கிராம நிர்வாக அலுவலர் தீபக் கடலோர போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பிணமாக கரை ஒதுங்கியவர் யார்? எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்கரையில் எலும்பு கூடாக மனித சடலம் ஒன்று ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Post Views: 193
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.