பட்ஜெட்டில் முதல்வர் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அறிவிப்பை வெளியிட வேண்டும் : என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல்!!
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்தார்கள்.முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் திமுக ஆட்சி நடக்கிறது.
எனவே திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பணி நிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள்.
இந்த பட்ஜெட் முழுமையான பட்ஜெட் என்பதால் இப்போதே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் தினமும் அரசுக்கு கோரிக்கை மனுவை தபால் அனுப்பி வருகின்றார்கள்.தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 12 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை போன்ற பாடங்களை கற்று தருகின்றார்கள்.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக 2024 ஆம் ஆண்டு பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளத்தை 2,500 ரூபாய் உயர்த்தியதால் தற்போது 12,500 ரூபாய் தொகுப்பூதியம் பெறுகின்றனர்.ஆனால் 13 ஆண்டை கடந்து தற்போது 14வது ஆண்டிலும் தற்காலிகமாக பணிபுரிவதால் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.எனவே இதே பாடங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களை போலவே, பகுதிநேர ஆசிரியர்களை பணியமர்த்தி காலமுறை சம்பளம் வழங்க நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.இதற்காக அரசு கொள்கை முடிவு எடுத்து 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை தமிழக அரசுப் பணிக்கு ஈர்க்க வேண்டும்.
எனவே, முதல்வர் பட்ஜெட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும்.என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் முதல்வருக்கு கோரிக்கை விடுத்து வலியுறுத்தி வந்தார் .
படவிளக்கம்; ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்
