Author: admin

தேனி மாவட்டம்வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற பொதுவிருந்தினை மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்கள். தேனி மாவட்டம், வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தினை மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் .மெய்யநாதன் அவர்கள் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் .சரவணக்குமார் அவர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் .தங்கதமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள்.மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் .சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் வீரபாண்டியில் உள்ள அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு வைக்கப்பட்ட அன்னாரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுவிருந்தில் பொதுமக்களுக்கு உணவுகளை பரிமாறி தொடங்கி வைத்தார். மேலும், அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் நேர்த்தி கடனாக…

Read More

சென்னை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உலகளவில் லட்சக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில், ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரும்பாக்கம் A.B.பிளாக், எண் 22, எழில் நகர், “உன் தேடல் உன்னோடு தான்” மாணவர்களின் பயிற்சி இடத்தில், அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பாக 250-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தானியங்கள், கடலை மற்றும் பருப்பு வகைகள் கொண்டு உருவாக்கப்பட்ட, ஆரோக்கியம் மிகுந்த சத்துமாவு வழங்கும் விழாவானது நடைபெற்றது.மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பகுதியின் “உன் தேடல் உன்னோடு” கல்வியாளர் திவ்யா சிறப்பாக செய்திருந்தார்.இந்த இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் கீதா, பவானி, மகளிர் அணி பொறுப்பாளர் கீதா , மற்றும் அமுதவல்லி, கலா, இந்திராணி, பேரைச்செல்வி, பிரியா, மைதிலி, சுகுணா மேலும் மாணவரணியின் ராகவன் மற்றும் பாய்ஸ் கிளப் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Read More

நடிகர் விஜய், அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாக நேற்று அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். விஜய் அரசியல் கட்சித் தொடங்குவது என்பது பல காலமாக பேசப்பட்டு வந்தாலும், இன்று அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது; “திரை உலகில் உச்சத்தின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள்பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும்.. உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துக்கள் சகோதரா” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

செங்கல்பட்டு மாவட்ட அருண் ராஜ் ஆட்சியரை மரியாதை நிமித்தமாக சந்தித்து, அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பாக பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வரும் மக்கள் நலப்பணிகளின் தொகுப்பை காண்பித்து வாழ்த்துப்பெற்றேன். அதனையடுத்து, இயக்கம் சார்பாக நடைபெற இருக்கும் சத்துமாவு வழங்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் ஆட்சியரிடம் வழங்கினேன். அதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதியில் இயக்கம் சார்பாக நடைபெறும் “ப்ராஜெக்ட் 50” என்ற நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தேன். அதன் பின்னர் இறுதியாக இயக்கத்தின் நிகழ்ச்சிகளுக்கும், சமூக ஆர்வலர் என்ற முறையில் எனக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு வழங்க வேண்டியும் மனு அளித்து விடைபெற்றேன்.

Read More

சென்னை மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக சந்திப்பு..சென்னை மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக சந்தித்து, கலைமகன் எஸ் வெங்கடேசன் அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பாக பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வரும் மக்கள் நலப்பணிகளின் தொகுப்பை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.அதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதியில் இயக்கம் சார்பாக நடைபெறும் “ப்ராஜெக்ட் 50” என்ற நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் கால்நடைகளாலும், தெரு நாய்களாலும் மக்கள் படும் அவதிகள் குறித்து மனு ஒன்றையும் அளித்தேன், இறுதியாக இயக்கத்தின் நிகழ்ச்சிகளுக்கும், சமூக ஆர்வலர் என்ற முறையில் எனக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு வழங்க வேண்டி மனு அளித்துள்ளார்.

Read More

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி துவங்கியுள்ளார்.இந்த கட்சி சார்பில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள நடிகர் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

Read More

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனின் 265-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் சென்னம்பட்டி கிராம மக்கள் சார்பாக மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, இப்போட்டியை தமிழக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார். சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை,‌ தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டினர் சார்பாக ரொக்கப்பரிசு பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Read More

எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்து போனியாகவில்லை,தம்பி விஜய் தற்போது கட்சி ஆரம்பித்துள்ளார்.மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.மக்கள் தான் எஜமானர்கள் -அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் பகுதியில் 12 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட கலையரங்கத்தை மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்ருமான செல்லூர் ராஜு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, மதுரை மாநகரில் என்னுடைய காலத்தில் மதுரை மாநகராட்சியில் மற்றும் பத்தாயிரம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிருள்ளவரை மதுரை மக்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்.மதுரையில் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மூர்த்தி என இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரைக்கு ஒன்றுமே செய்யவில்லை. தற்போது மதுரையில் நடைபெற்று வரும் பாலம் கட்டிட வேலைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் என அனைத்திற்கும் வித்திட்டது…

Read More

டாக்டர் கலைமகன் எஸ். வெங்கடேசன் நிறுவனத் தலைவர் மாணவ மாணவியர்களுக்கு 110 உண்டியல் மற்றும் ஊக்கத்தொகையை அன்பள்ப்பாக வழங்கினார்.செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் அனைத்து பல்வேறு சமூக சேவைகளை செய்து பொதுமக்களின் அன்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.மேலும் ஏ பி பிளாக் நெம்பர் 22 எழில் நகர் பகுதியில் “உன் தேடல் உன்னோடு தான் ” மாணவ மாணவிகளின் பயிற்சி இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை செம்மஞ்சேரி பெரும்பாக்கம் ஒருங்கினைப்பாளர் திவ்யா ஏற்பாட்டில் உதவிபேராசிரியர் கணினி பயன்பாட்டியல் துறை வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம் முன்னிலை ரமேஷ் உதவி பேராசிரியர் கணினி பயன்பாட்டியல் துறை வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம் மூவரும் தலைமை தாக்கினர். இந்த அமைப்பு விரைவாக வளர்ச்சி பெற்றம் வருகிறது. அதன் தலைவர் எஸ். வெங்கடேசன் தலைமையில் 110 உண்டியல் மற்றும் ஊக்கத்தொகையை அன்பளிப்பாக வழங்கினார்.இயக்கத்தின் நிகழ்ச்சில் செம்மஞ்சேரில் “உன் தேடல் உன்னோடு தான்…

Read More

பேரறிஞர் அறிஞர் அண்ணாவின் 55 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து தொடங்கி பாளைரோடு வழியாக காய்கறி மார்க்கெட் சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலை அமைந்திருக்கும் இடத்தில் நிறைவடைந்தது. பின்னர் அங்கிருக்கும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், மாநில மீனவர் அணி செயலாளர் ப்ளோரன்ஸ், மீனவர் அணி செயலாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், அயலக அணி செயலாளர் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ், இலக்கிய அணி செயலாளர் ஜீவன் ஜேக்கப், இளைஞரணி…

Read More