Author: admin

பா.ஜனதாவில் இணையும் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். சென்னையில் வருகிற 11-ந்தேதி நடைபயணம் மேற்கொள்கிறார். இதில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்கிறார். அண்ணாமலையின் இந்த யாத்திரை நிறைவு விழா வருகிற 25-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகிறார். அண்ணாமலை தனது நடைபயணத்துக்கு மத்தியிலும் தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் அண்ணாமலைக்கு மத்திய மந்திரி அமித்ஷா அவசர அழைப்பு விடுத்துள்ளார். அதன்பேரில் அண்ணாமலை இன்று காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இதற்கிடையே டெல்லியில் பா.ஜனதா தேசிய…

Read More

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை கடந்த ஜன., 14ம் தேதி ராகுல்காந்தி துவங்கினார். தற்போது ராகுல்காந்தியின் யாத்திரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்து வருகிறது. ராஞ்சியில் யாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், காரின் மேற்புறத்தில் ராகுல்கந்தி அமர்ந்திருக்கிறார். அவர் அருகே நாய் குட்டி ஒன்று இருந்தது. ராகுல்காந்தி அந்த நாய்க்கு பிஸ்கட் கொடுத்தார். நாய் சாப்பிட மறுத்து விட்டது. இதையடுத்து அந்த பிஸ்கட்டை அருகில் இருந்த நபரிடம் கொடுக்கிறார். பிறகு அந்த நாய் பிஸ்கட்டை சாப்பிட்டது. இந்த வீடியோவை சமூகவலைதளத்தில், பா.ஜ.க. ஐ.டி., பிரிவு தலைவர் அமித் மாளவியா, மற்றும் அசாம் முதல்- மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் பதிவிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். இது குறித்து அமித் மாளவியா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சியின்…

Read More

மத்திய இணை மந்திரி எல்.முருகன் விளக்கம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத் தொடர் இதுவாகும். ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். கடந்த 1-ந் தேதி, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்திற்கு நேற்று பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும் வழக்கம் போல் அலுவல்கள் நடைபெற்று வந்தன. மக்களவையில் கேள்வி நேரத்தில் தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரணம் நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு மத்திய…

Read More

தி.மு.க. வேட்பாளர்கள் யார்-யார்? – விரைவில் உத்தேச பட்டியல் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து அறிந்து கொள்வதற்காக தொகுதி வாரியாக நிர்வாகிகளை அழைத்து அண்ணா அறிவாலயத்தில் கருத்து கேட்கப்பட்டது. தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்தை கேட்டறிந்தது. கடந்த 28-ந் தேதி தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பு குழுவினர் கேட்டுக்கொண்டனர். இந்த ஆலோசனை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்டமாக ஒவ்வொரு தொகுதிக்கும் யார்-யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற உத்தேச பட்டியலை…

Read More

ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. மற்றும் பிற கட்சிகளான பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி தனித்தனியாக தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருவதால் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ஜ.க. பா.ம.க. இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 12 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா இடத்தை பா.ம.க. கேட்பதாகவும் பா.ஜ.க. 7 இடங்களை தர முன்வருவதாகவும் கூறப்படுகிறது. பா.ஜ.க. ஒதுக்கும் தொகுதிகளை பா.ம.க. ஏற்க முன்வராததால் ஜி.கே.வாசன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

Read More

நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு செங்கல்பட்டு பெரும்பாக்கம் அரசு கலை, (மற்றும்) அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு செங்கல்பட்டு, பிப்.06-செங்கல்பட்டு பெரும்பாக்கம் அரசு கலை, (மற்றும்) அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம், (மற்றும்) போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்குழு, (மற்றும்) அனைத்து மக்கள் சக்தி இயக்கம் இணைந்து நடத்திய சைபர் கிரைம், (மற்றும்) போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சக்தி தலைமை உரையாற்றி பேரணியை தொடங்கி வைத்தார். செம்மஞ்சேரி சரகம், காவல்துறை உதவி ஆணையர் ஆர்.வைஷ்ணவி சிறப்புரையாற்றினார்.மற்றும் பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் சண்முகம் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் டாக்டர் கலைமகன் வெங்கடேசன் கருத்துரை வழங்கினார். இதனை தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை சென்றடையும் விதத்தில் இந்த விழிப்புணர்வு பேரணி கல்லூரியில் துவங்கி செம்மஞ்சேரி நுழைவு வாயில்…

Read More

நீண்டநாள் முஸ்லிம் ஆயுள் சிறைக்கைதிகள் 5 பேர் விடுதலை! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு எஞ்சியுள்ளவர்களையும் தாமதிக்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தல் இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக சிறைச்சாலைகளில் உள்ள 33 நீண்டநாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட பல அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. சமீபத்தில் மதுரையில் நடந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநாட்டிலும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி முதல் தீர்மானம் இயற்றப்பட்டது. இந்நிலையில், பல நீண்ட போராட்டங்களின் விளைவாக அபுதாஹிர், ஹாரூண் பாஷா, சாகுல் ஹமீத், குண்டு ஜாஹிர், ஊம் பாபு ஆகிய 5 சிறைக்கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விடுதலையை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வரவேற்பதோடு, எஞ்சியுள்ள சிறைக்கைதிகளையும் தாமதிக்காமல் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேலும், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள்…

Read More

லட்சம் பேர் பங்கேற்கும் கூட்டத்தில் உரை அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக பா.ஜனதா நாடாளுமன்ற தேர்தல் தலைமை அலுவலகம், சென்னை அமைந்தகரையில் திறக்கப்பட்டது. பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 11-ந்தேதி சென்னை வருகிறார். பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதைத் தொடர்ந்து, ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி வருகிற 25-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். இதற்காக 530 ஏக்கர் பரப்பளவில் கூட்டரங்கு அமைக்கப்படுகிறது. 5 லட்சம் இருக்கைகள் போடப்பட உள்ளன. நிகழ்ச்சியில், 10 லட்சம் பொதுமக்கள், பா.ஜனதா தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். பா.ஜனதாவுடன் பல்வேறு கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர். பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்பவர்கள் கூட்டணிக்கு வருகை தருவார்கள். 2024-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது கிடையாது. சட்டமன்ற தேர்தல் வரும்போது தமிழகத்தின் மற்ற கட்சிகள்…

Read More

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர், வீரபாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அன்புமணி ராமதாஸ், சேலம் மாவட்டம் பா.ம.க.வின் கோட்டை என்றார். தமிழகத்தை ஆள்வதற்கு அனைத்து தகுதியும், திறமையும் பா.ம.க.வுக்கு உண்டு என்றும், ஆனால் அதிகாரம் மட்டும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். கட்சி தொடங்கி 34 ஆண்டுகாலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி மக்களின் உரிமைகளை பெற்றுத் தந்ததாகவும், இதுவே அதிகாரம் பா.ம.க.வின் கையில் இருந்தால் ஒரு கையெழுத்து போதும் என்றும் போராட்டங்கள் நடத்த தேவை இருக்காது என்றும் அவர் கூறினார்.

Read More

நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சியின் பெயரை டெல்லி தேர்தல் ஆணையத்தில் அவர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது;- “நடிகர் விஜய்யின் அரசியல் வருகை அ.தி.மு.க.வின் வாக்குகளை பாதிக்காது. ஏற்கனவே சினிமாவில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்துள்ளனர். நடிகர் விஜய்யின் அரசியல் வாழ்க்கை மக்கள் கையில்தான் இருக்கிறது. ஆனால் அவர் கமல்ஹாசனைப் போல் ஆகிவிடக்கூடாது. நாட்டை சீர்திருத்தப் போவதாகக் கூறி அரசியலுக்கு வந்த கமல்ஹாசன், இப்போது எம்.பி. சீட்டுக்காக மற்றொரு கட்சியுடன் சேர்ந்துகொண்டிருக்கிறார். இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

Read More