Author: admin

தூத்துக்குடி வருகை தந்த தமிழக ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் புத்தகம் வழங்கி வரவேற்பு அளித்தார். நெல்லையில் நடைபெறும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் ஆளுநருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் புத்தகம் வழங்கி வரவேற்றனர்.

Read More

தற்போதைய தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த 2006-ம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீதும், அவருடைய மனைவி மணிமேகலை மீதும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசுவையும், அவருடைய மனைவியையும் கீழ் கோர்ட்டு விடுவித்தது. இதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு, தானாக முன்வந்து, வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பான விசாரணை பிப்ரவரி 5-ந்தேதி தொடங்கி நாள்தோறும் நடைபெறும் என்று அறிவித்தது. இந்த விசாரணைக்கு இடைக்கால தடைக்கோரி, தங்கம் தென்னரசு, அவருடைய மனைவி மணிமேகலை ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமார் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. இதே விவகாரம் தொடர்புடைய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் மனுவை 5-ந்தேதி விசாரிப்பதால், இந்த மனுவையும் நினைத்து அன்றைய…

Read More

நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழகம் என்ற சொல்லை முன்னிலைப்படுத்தி, இந்திய தேர்தல் கமிஷனில் ஏற்கனவே 21 கட்சிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவற்றின் பெயர்கள் வருமாறு:- தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ் மாநில கட்சி, தமிழ் மாநில முற்போக்கு திராவிட கழகம், தமிழ்நாடு இளைஞர் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி, தமிழ் தெலுங்கு தேசிய கட்சி, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி, தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் நலக் கட்சி, தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி, தமிழக ஸ்தாபன காங்கிரஸ், தமிழர் தேசிய முன்னணி, தமிழர் மக்கள் கட்சி, தமிழ்நாடு மகாத்மாகாந்தி மக்கள் கட்சி, தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு பேரியக்கம், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி,…

Read More

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று கடலில் தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 14.01.2024 IND-TN-15-MM-4636 பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களில் விசைப்படகில் சமையல் பணிக்காகச் சென்ற கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், தேங்காய்ப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த A.ஜலாலுதீன் (வயது 38) த/பெ அபுபக்கர் என்பவர் கடந்த 21.01.2024 அன்று காலை 5.30 மணியளவில் கன்னியாகுமரி கடலில் இருந்து சுமார் 40 கடல்மைல் தொலைவில் ஆழ்கடலில் விசைப்படகிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்துள்ளார். அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இதுவரை கண்டுபிடிக்க இயலாமல் காணாமல் போயுள்ளார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள A.ஜலாலுதீன் என்பவரது குடும்பத்திற்கும் அவரது…

Read More

மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜி.டி.பி. குறித்து பேசிய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், தனிநபர் வருமானம் குறித்து ஏன் எதுவும் பேசவில்லை. இலவச உணவு தானிய திட்டம் குறித்து பேசி உள்ள அவர், உலக பட்டினி தரக் குறியீட்டில் இந்தியா மோசமான நிலையில் இருப்பதை தெரிவிக்கவில்லை. பணவீக்கம் குறித்து மேம்போக்காக குறிப்பிட்ட மத்திய நிதி மந்திரி உணவுப் பொருட்களின் விலை 7.7 % வரை அதிகரித்திருப்பது குறித்து எதுவும் பேசவில்லை. விவசாயிகள் பற்றி பேசிய நிதி மந்திரி விவசாயிகள் தற்கொலை குறித்து ஒரு வார்த்தை கூட ஏன் பேசவில்லை. ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நிலையில்லாத குறைந்தபட்ச ஆதார விலை, இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, காப்பீடு விவகாரங்களில் குளறுபடி போன்ற…

Read More

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கண்டிப்பதாகவும், பட்டியலின பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் எம்.எல்.ஏ. மகன், மருமகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியும்‌ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டியில் தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தினால் ஆர்ப்பாட்டம் தாமதமாக நடைபெற்றது முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜூ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசுகையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜூ.ஆர் புகழ் குறித்து சின்ன குழந்தைகளுக்கு கூட தெரியும்…எம்.ஜூ.ஆர் 8வது வள்ளல்… அவர் ஒரு தெய்வ பிறவி என்றும், ஈழத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு நாங்கள் போராடினோம் என்றால் அதற்கு காரணம் எம்.ஜூ.ஆர் போட்ட பிச்சை என்று விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார்.. தமிழக மக்களின் உள்ளங்களில்…

Read More

கோவில்பட்டி பகுதியில் 3 மணிநேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய மழை – ரெயில்வே சுரங்க பாலத்தில் தேங்கிய மழை நீர் – போக்குவரத்து காவல் எச்சரிக்கையை மீறி ஆபத்தை உணராமல் பயணித்த வாகன ஓட்டிகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக காலையில் அதிக பனியும் ,பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும் பரவலாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதலே வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது மட்டுமின்றி, லேசான சாரல் மழையும் பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல சாரல் மழை பலத்த மழையாக பெய்தது. தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் காலையில் பள்ளி கல்லூரி சென்ற மாணவர்கள்,, வேலைக்கு சென்று அரசு ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த மழையின் காரணமாக கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாலத்தில் மழைநீர் தேங்கியது. இருந்தபோதிலும் வாகன‌ஓட்டிகள் ஆபத்தை உணரமால் தேங்கி…

Read More

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பை காண்பித்து வருகின்றன. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு என பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது. பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியா? அல்லது கூட்டணியா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. முன்னதாக அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு நிர்வாகிகள் பா.ம.க., தே.மு.தி.க. உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று நடைபெறும் பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னரே கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும்…

Read More

குஜராத்தின் வதோதரா நகரில் எகல்பரா கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், திடீரென இன்று வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி பலத்த காயமடைந்த 3 பேர் உயிரிழந்தனர். மற்ற 2 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்த வெடிவிபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரிய வரவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read More

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். கடைசி கூட்டத்தொடர் என்பதால் இதை யாரும் புறக்கணிக்க வேண்டாம். நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது” என்று தெரிவித்தார். இந்நிலையில் பிரதமர் மோடி பேசியது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமர் மோடி ஒழுக்கமானவர். அவர் அனைத்து விதிகளையும், அரசியலமைப்பு சட்டத்தையும் பின்பற்றுகிறார். எனவே, அவருடைய அறிவுரையை பின்பற்ற வேண்டும்” என கிண்டலாக பதிலளித்துள்ளார்.

Read More