Author: Sahabudeen

ரம்ஜான் மாதம், முஸ்லிம்களின் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதன்படி சென்னையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஷவ்வால் மாத பிறை நேற்று தெரியவில்லை. எனவே நாளை (வியாழக்கிழமை) ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஈதுல் பித்ர் (ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இந்த நிலையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டு தொழுகை செய்தார். இதனைத்தொடர்ந்து இஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியும், கை கொடுத்தும் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சினிமா இயக்குனர் அமீரின் வீடு உள்பட 14 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Read More

தமிழக முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98. வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஆர்.எம். வீரப்பனுக்கு இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆர்.எம். வீரப்பன், சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்தார். ஆர்.எம். வீரப்பன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் மறைவை அடுத்து, சென்னை தியாகராய நகரில் வைக்கப்பட்டு உள்ள அவருடைய உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “பணம், பெயர், புகழுடன் வலம் வந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவர் எப்போதும் பணத்துக்கு பின்னால் சென்றது கிடையாது. பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடித்து வாழ்ந்தவர். அவருடனான எனது நட்பு மிகவும் ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது. என் வாழ்நாளில் அவரை…

Read More

தமிழக முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98. வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஆர்.எம். வீரப்பனுக்கு இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆர்.எம். வீரப்பன், சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்தார். ஆர்.எம். வீரப்பன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “ஆர்.எம்.வீரப்பனின் மறைவு வேதனை அளிக்கிறது. எம்.ஜி.ஆரின் கொள்கைகளை பிரபலப்படுத்தியதற்காகவும், பொதுச் சேவையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் அவர் நினைவுகூரப்படுவார். திரைப்பட உலகில் சுறுசுறுப்பான பங்கும் அவர் வகித்தவர். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள்” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Read More

பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி, 7- வது முறையாக தமிழகம் வந்துள்ளார். இதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய பிரதமர் மோடிக்கு பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தியாகராய நகர் பனகல் பூங்கா பகுதிக்கு சென்றார். அங்கு, பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்று வருகிறார். வாகன பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார். வாகன பேரணியில் பங்கேற்று வரும் பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். 2 கிலோ மீட்டர் வரையிலான இந்த பேரணியின்போது, பா.ஜனதா வேட்பாளர்கள் பால்கனகராஜ் (வடசென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை),…

Read More

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- தேர்தலுக்காக இத்தனை முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். வன்முறையால் பற்றி எறிந்த மணிப்பூருக்கு எத்தனை முறை மோடி சென்றுள்ளார்? புல்வாமா தாக்குதலை எப்படியெல்லாம் மோடி அரசியல்படுத்தினார் என்பதை அப்போதைய காஷ்மீர் ஆளுநர் கூறியதும், உடனே அவரது வீட்டில் ரெய்டு நடந்தது. மோடிக்கு ஊழலை ஒழிக்கும் எண்ணம் இல்லை. பெண் சக்தி குறித்து பேசும் பிரதமர் மோடி, டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் வடித்தபோது எங்கே போனார்?. மணிப்பூரில் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட போது என்ன சொன்னார்? குஜராத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்தது பாஜக அரசு. சமூக நீதி அக்கறை கொண்ட பிரதமரை வரும் தேர்தலில் தேர்வு செய்ய வேண்டும். காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. கடுமையான நிதி நெருக்கடியிலும் நலத்திட்டங்களை தமிழக அரசு…

Read More

பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று நல்ல ஒரு நடவடிக்கையை எடுப்பார் – நடிகை நமீதா நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து திரைப்பட நடிகை நமீதா இன்று காலை திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பயனாளிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் இதுவரை ஆண்ட கட்சிகள் யாராவது மக்களுக்கு வீடு கொடுத்துள்ளார்களா? மத்திய அரசு ஒவ்வொரு தனி நபருக்கும் இந்தியா முழுவதும் வீடு கொடுத்துள்ளது. வீடு மட்டுமல்லாமல் குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளது. தி.மு.க., 234 தொகுதிகளில் மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டுள்ளதா? ஆனால் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளை கேட்டுள்ளார். தி.மு.க., மக்களை பிரித்தாளும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவர்களின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது.காட்டில் யானையை…

Read More

முன்னாள் மத்திய மந்திரி பிரேந்தர் சிங், பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கட்சி தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அவருடைய மனைவியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பிரேம லதாவும் பா.ஜ.க.வில் இருந்து விலகினார். இதையடுத்து இருவரும் காங்கிரசில் இணைய உள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரேந்தர் சிங் தனது மனைவியுடன் காங்கிரசில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக் மற்றும் பூபிந்தர் சிங் முன்னிலையில் பிரேந்தர் சிங் அக்கட்சியில் இணைந்தார். 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த பிரேந்தர் சிங், 10 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.வில் சேர்ந்தார். அவருடைய மகன் பிரிஜேந்தர் சிங் ஒரு மாதத்துக்கு முன்பு பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரசில் இணைந்த பிறகு பிரேந்தர் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “நான் காங்கிரசை விட்டு வெளியேறியபோது, பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் சித்தாந்தங்களில் பெரிய…

Read More

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மாதம் 21- ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவருக்கு 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி தனது பணிகளை கவனித்து வருகிறார். கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கைக்கு பா.ஜ.க.தான் காரணம் என ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர். இதனை பா.ஜ.க. மறுத்து வருகிறது. இந்த விவகாரம் டெல்லி சட்டசபையிலும் எதிரொலித்தது. இந்நிலையில், டெல்லி சட்டசபை கூட்டத்தில் இன்று இந்த விவகாரம் மீண்டும் எழுப்பப்பட்டது. ‘டெல்லியில் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முயற்சிகள்’ என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் காரசாரமாக தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். முதல்-மந்திரி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினர்.…

Read More

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தொகுதி பங்கீடு மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில் மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குபதிவு நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் ”இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது. அதன்படி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

Read More

தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வி வி செந்தில் நாதன்.கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னாண்டி பட்டி.வீரியபட்டி . காணிகாளம்பட்டி போன்ற பல்வேறு கிராமங்களில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது திரளாக கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மலர் தூவியும் பிரதமர் மோடி அவர்களின் முகமூடி அணிந்து வேட்பாளரை வரவேற்றனர் இப்போது பொதுமக்களிடம் பேசிய வேட்பாளர் வி வி செந்தில்நாதன்இந்த இரண்டா அரை ஆண்டுகளில் பள்ளி கல்லூரி படிக்கும் மாணவர்கள் கையில் கஞ்சா போன்ற போதை பொருட்களை மலிந்த மாநிலமாக உள்ளது என குற்றம் சாட்டினார் மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு மக்கள் பிரச்சினைக்கும் வராத கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தற்போது பொய் வாக்குறுதிகளை கூறியும் பணம் மற்றும் பரிசு பொருட்களை நம்பியும் மக்களை ஏமாற்றி விடலாம் என எண்ணி தேர்தல் களத்தில் உள்ளார் ஆனால் தேசிய…

Read More