Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sahabudeen
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக வருகிற 26 மற்றும் மே 7-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. பெங்களூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, இறுதி வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூரு வடக்கு தொகுதியில் நேற்று முன்தினம் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இந்தநிலையில், பெங்களூரு தெற்கு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சவுமியா ரெட்டியை ஆதரித்து நடைபெற்ற வாகன பேரணியில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது, காங்கிரஸ் தொண்டர் ஒருவர் இடுப்பில் கைத்துப்பாக்கியை சொருகியபடி, முதல்-மந்திரி சென்ற வாகனத்தில் ஏறி அவருக்கு திடீரென மாலை அணிவித்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, போலீசார் விசாரித்ததில், அவர் உரிமம் பெற்ற பிஸ்டல் வைத்திருப்பது தெரியவந்தது. காவல்துறை அலட்சியமாக இருந்தது குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். பெங்களூரில் முதல்-மந்திரி சித்தராமையா பங்கேற்ற சாலைப்…
சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து சேலம் மாவட்டம் எடப்பாடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் செல்வகணபதியை வெற்றி பெற வைக்க வேண்டும். சேலத்தில்தான் தி.மு.க இளைஞரணி மாநில மாநாடு நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாடு 30 சதவீத வெற்றி தான். சேலம் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றால்தான் 100 சதவீத வெற்றி ஆகும். சேலம் பழைய பேருந்து நிலையம் ரூ.98 கோடி மதிப்பில் புனரமைப்பு செய்யப்படும். ரூ.548 கோடி மதிப்பில் சேலத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் கருப்பூரில் டைடல் பார்க் அமைக்கப்படும். சேலத்தில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். இந்தியா கூட்டணி அரசு அமைந்ததும் சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படும். தவழ்ந்து சென்று முதல்-அமைச்சர் பதவிக்கு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.…
மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காய்கறி சந்தை மற்றும் பழ அங்காடியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா உடனிருந்தனர். தலைமை பதவிக்கு வாரிசாக வருவது தான் வாரிசு அரசியல்; எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தலில் போட்டியிடுவது இல்லை. முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வை கார்ப்பரேட் கம்பெனி போல நடத்தி கொண்டிருக்கிறார் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை. மிக்ஜம் புயல் முதற்கொண்டு அனைத்திலுமே பொய் சொல்லி வருகிறார் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின். நான் என்ன பொய் சொல்கிறேன் என்று அவர்கள் கூறட்டும், விளக்கம் அளிக்கிறேன். 520 வாக்குறுதிகளில் 98 சதவீதம் நிறைவேற்றியதாக பொய் சொல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அ.தி.மு.க.விற்கு மக்கள் எழுச்சி பெரிய அளவில் உள்ளது.…
பிரதமர்: அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர தி.மு.க. சார்பில் பிச்சனூர் தேரடி பகுதியில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்தை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அபார வெற்றி பெறுவோம். அவர்களது கட்சியினருக்கு பிரசாரம் செய்ய வருகிறார். மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். பிரதமர் வருவதால் தமிழகத்தில் மக்களிடம் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி அலை வீசுகிறது. வடமாநிலங்களிலும் இந்தியா கூட்டணி அலை வீசுகிறது. நிச்சயம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். பா.ஜனதா தலைவர்கள் பலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். வேட்டி கட்டியவர் கைகாட்டும் நபர்தான் பிரதமராக வந்து கொண்டுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவரே இந்தியாவின் அடுத்த பிரதமர். இவ்வாறு அவர் கூறினார்.
உலகத்துக்கே காட்டிய ஊழல்தான் தேர்தல் பத்திரம் – கனிமொழி தாக்கு தென்சென்னை தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி திருவான்மியூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது மக்களுக்காக என்று கூறுகிறார்.அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பா.ஜ.க.,வில் வேட்பாளர்கள் இல்லாததால் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வேட்பாளராக நிற்கிறார். சட்டம் போட்டு ஊழல் செய்வது எப்படி என பிரதமர் மோடி உலகத்துக்கே காட்டிய ஊழல்தான் தேர்தல் பத்திரம். திடீரென பிரதமருக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறை வந்துள்ளது. இந்தியாவே, முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினைதான் பின்பற்றி வருகிறது. பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் தொல்லை கொடுக்கின்றன. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கேஸ் விலை ரூ.500 குறைக்கப்படும். பெட்ரோல் விலை குறைக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் 2-வது இடத்தில் அ.தி.மு.க.,தான் வரும். பா.ஜ.க. நோட்டாவுக்கு…
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். அன்பழகன். இவர் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஏ.கே.எஸ் அன்பழகன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி (வயது 70). அவர் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இதனிடையே, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த புகழேந்திக்கு கடந்த 5ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது நேற்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உயிரிழந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ளது. தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், நாடாளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை…
இஸ்லாமிய பெருமக்களுக்கு – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது . புனித ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்காக அல்லாஹ் த ஆலாவினால் வழங்க பட்ட மிக பெரிய வெகுமதியாகும். ஓரு அதீஸில் ரமலான் மாதம் எத்தகை சிறப்பு உள்ளது என்று ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருக்க வேண்டும் என உம்மத்தினர் விரும்புவார்கள். ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பது சிரமமான காரியம் என்று மக்கள் நினைக்கின்றனர்.ஆனால் புனித ரமலான் மாதத்தில் கிடைக்கின்ற நன்மைகளை கருதி மனிதர்கள் அதனை விரும்புவார்கள். என்பதாக முகமது நபி அவர்கள் அருளுகிறார்கள்.ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் வைப்பதும் உள்ளத்தின் அழுக்குகளையும் , மன ஊசலாட்டங்களையும், நீக்கி விடும் என ஓரு அதீஸில் அறிவிக்க பட்டுள்ளது. நோன்பினுள் பலவிதமான நோக்கங்களும்…
பீகார் மாநிலம் நவாடாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் முழுவதும் வெற்றி பெறப்போகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வலுவான அரசு நாட்டுக்காக துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.எனக்கு கேளிக்கை விஷயங்கள் கிடையாது; நான் கடினமாக உழைப்பதற்காக பிறந்தவன். மக்களை சந்திப்பதன் மூலம் எனக்கு ஆற்றல் கிடைக்கிறது; உத்வேகம் கிடைக்கிறது. அதனால்தான் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறேன். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதன்படி இன்று ராமர் கோவிலின் சிகரம் விண்ணைத் தொடுகிறது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் வரவில்லை என்பதை யாரும் மறக்க வேண்டாம். சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் செய்யாததை கடந்த 10 ஆண்டுகளில் செய்துள்ளோம். இது வெறும் டிரெய்லர்தான்; நாம் இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. மோடியின் கேரண்டிகளை பார்த்து ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியில் இருக்கின்றன. என்னுடைய…
ஈரோடு மாவட்டம் கோபி கவுந்தம்பாடியில் திருப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- அ.தி.மு.க.வை வீழ்த்த தி.மு.க. பல்வேறு அவதாரங்களை எடுத்தது. அ.தி.மு.க.வை அழிக்க மு.க.ஸ்டாலினின் எடுத்த திட்டங்கள் தூள், தூளாக்கப்பட்டன. அ.தி.மு.க. தலைவர்கள் மக்களுக்காக பாடுபடுவர்கள்; வேறுசிலர் குடும்பத்திற்காக பாடுபடுகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் அடித்தட்டு மக்களுக்காக பல திட்டங்கள் கிடைத்தன. அ.தி.மு.க.விற்கு துரோகம் செய்தவர்கள் தானாக அழிந்து விடுவார்கள். அ.தி.மு.க.வை முடக்க நினைத்ததை மக்கள் துணையோடு தவிடுபொடியாக்கினோம். அ.தி.மு.க.வின் அழுத்தத்தால்தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. தி.மு.க. எம்.பி.க்கள் தமிழக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை. இந்தியா கூட்டணி கூட்டத்தில், கர்நாடகாவிடம் பேசி தண்ணீரை பெற முயற்சிக்காதது ஏன்?. அ.தி.மு.க. ஆட்சியில் நீர்மேலாண்மையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் இருந்தது. விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் பல திட்டங்களை கொண்டுவந்தோம். அத்திக்கடவு அவிநாசி…

