Author: Sahabudeen

பீகார் மாநிலம் பாட்னாவின் பாலிகஞ்ச் பகுதியில் பா.ஜனதா கட்சியின் பேரணி நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும் போது கூறியதாவது:- காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர்கள் எப்போதும் தங்கள் குடும்பங்களின் நலனுக்காக உழைக்கின்றனர், ஆனால் ஏழைகளுக்காக எதையும் செய்யவில்லை . ஏழைகளுக்கு நல்லது செய்ய பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவால் மட்டுமே முடியும் பீகார் மாநிலம் பாட்னாவின் பாலிகஞ்ச் பகுதியில் பா.ஜனதா கட்சியின் பேரணி நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும் போது கூறியதாவது:- காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர்கள் எப்போதும் தங்கள் குடும்பங்களின் நலனுக்காக உழைக்கின்றனர், ஆனால் ஏழைகளுக்காக எதையும் செய்யவில்லை . ஏழைகளுக்கு நல்லது செய்ய பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவால் மட்டுமே முடியும் காங்கிரசும் ஆர்.ஜே.டி.யும் நீண்ட காலம் ஆட்சியில் இருந்தாலும், மூத்த தலைவர் கர்பூரி தாக்கூருக்கு…

Read More

தேர்தல் வருவதால் மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளதாக தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;- “சிலிண்டர் விலையை எப்பொழுதோ குறைத்திருக்க முடியும். ஆனால் தேர்தல் வரும் சமயத்தில் சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர். அதுவும் மகளிர் தினத்தில் சிலிண்டர் விலையை குறைத்திருக்கிறார்கள். பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும்தான் கவலையா? பெண்கள் சமையல் அறையிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயமாக இதை மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது இவ்வாரு கூறினார்

Read More

ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க முதல்வருக்கு – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல் ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகம் முழுவதும் வருகிற 12-03-2024 தேதி அன்று புனித ரமலான் மாதம் துவங்க உள்ளதால் அன்று முதல் இஸ்லாமியர்கள் 30 நாட்களும் விடிய காலை முதல் மாலை வரையிலும் நோன்பு வைத்து வருவார்கள் . ஆகவே அடிக்கடி மின்சாரம் தடை ஏற்பட்டால் நோன்பு வைத்திற்கும் இஸ்லாமியர்கள் மிகவும் சிரமம் படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு தடை இல்லா மின்சாரம் நோன்பு 30 நாட்களும் வழங்க வேண்டும் .மேலும் இஸ்லாமியர்கள் பகுதிகளில் இரவு நேரம் தேனீர் கடைகள் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது. நோன்பு 30 நாட்களும் இரவு நேரம் மசூதிகளில் நடை பெறும்…

Read More

குறையாது: அரசு டாக்டரான 3 அடி உயர இளைஞர் குஜராத்தின் பாவ் நகரை சேர்ந்த கணேஷ் பாரையா 72 சதவீத உயர குறைப்பாடுடன் பிறந்தவர். 3 அடி உயரம் மட்டுமே இருக்கும் கணேஷிற்கு டாக்டராக வேண்டும் என்ற பெரிய கனவு இருந்தது. ஆனால் அவரது உயரத்தை மட்டும் கணக்கிட்டு, அவர் டாக்டராகமுடியாது, அவசர சிகிச்சைகளை இவரால் கையாள முடியாது என்ற காரணத்தை கூறி, 2018ம் ஆண்டு கணேஷிற்கு மருத்தவப் படிப்பிற்கான சேர்க்கை மறுக்கப்பட்டது. ஆனால், கணேஷின் பள்ளி முதல்வர் உறுதுணையாக இருந்ததால், ‘குறையுடன் பிறப்பவர்கள் மருத்துவராகக் கூடாதா?’ என்ற கேள்வியை எழுப்பி சட்ட போராட்டத்தை ஆரம்பித்தார். இது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அவரை பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க அனுமதியும் அளித்தது. இதையடுத்து, பின் 2019இல் கல்லூரியில் சேர்ந்த அவர் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தார்.தற்போது பாவ்நகரில் உள்ள பொது மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக…

Read More

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார். அவ்வகையில், ராஜஸ்தானில் இன்று யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பன்ஸ்வாரா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காலியாக உள்ள 30 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும். அரசு தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவதை தடுப்பதற்கு உரிய சட்டம் இயற்றப்படும். விவசாயிகள் விளைவிக்கும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும். கிக் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Read More

இந்தியாவில் வடை சுடுவது பிரதமர் நரேந்திர மோடி-தமிழ்நாட்டில் வடை சுடுவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் மதுரை 73 வது வார்டு முத்துப்பட்டி பகுதியில் பத்து லட்ச ரூபாய் செலவில் விநாயகர் கோவில் நகரில் புதிதாக சத்துணவு அங்கன்வாடி மையம் அமைக்க முன்னாள் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பூமி பூஜை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் தேர்தல் பத்திரம் குறித்த கேள்விக்கு தேர்தல் பத்திரம் குறித்து கவலைப்படுவது காங்கிரஸ் மற்றும் திமுக தான் எங்களிடம் அந்த அளவுக்கு நிதி இல்லை ஆனால் எங்களுக்கு கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. திமுக கூட்டணி மக்களை எதிர்க்கவில்லை, உடல் ரீதியாக நலம் தான் வாயிலை வடை சுடுவது இந்திய அளவில் மோடி ஜி, தமிழ்நாட்டில் நம்ம ஸ்டாலின்…

Read More

கமல்ஹாசனின் வெளிநாட்டு பயணம், தேர்தல் முடியும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று கட்சியினருடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார் கமல். கமல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இணைந்து தயாரிக்கின்றன. கமல் வெளிநாட்டு பயண திட்டம் ரத்து: இந்நிலையில், இப்படத்தின் பணிகளுக்காக அண்மையில் வெளிநாடு சென்று திரும்பினார் கமல்ஹாசன். பிப்ரவரி இறுதியில் மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தது. ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடையாததன் காரணமாக பயணத்தை தள்ளி வைத்தார் கமல்ஹாசன். எனினும் ஒரு வாரம் ஆகியும் கூட்டணி பேச்சு முடிவடையாத நிலையில் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளார் கமல்ஹாசன். இயக்குநர் மணிரத்னம் மற்றும் ‘தக் லைஃப்’ படக்குழுவினர் தற்போது லொக்கேஷன் பார்ப்பதற்காக செர்பியா சென்றுள்ளனர். கமல்ஹாசனும்…

Read More

போலீஸ் நிலையங்களில் 10 ஆண்டுகளாக பல வழக்குகள் தீர்வு காணப்படாமல் இருந்தது போலீஸ் சூப்பிரண்டு கவனத்திற்கு வந்தது. பொதுவாக பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் வீட்டுப்பாடம் எழுதாவிட்டாலும், விளையாட்டு வகுப்புகளில் சரியாக செயல்படா விட்டாலும் பள்ளி வளாகத்தை 10 தடவை சுற்றி ஓட வேண்டும் என்ற தண்டனையை அனுபவித்து இருப்போம். இல்லையெனில் அதுபற்றி கேள்வி பட்டிருப்போம். அதுபோல் வழக்குகளுக்கு தீர்வு காணாத போலீஸ்காரர்கள் முதல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் என அனைவருக்கும் போலீஸ் சூப்பிரண்டு நூதன தண்டனை வழங்கிய சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் மிதுன் குமார். இவர் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவான வழக்குகளில் 10 ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்காதது பற்றி விவரம் கேட்டிருந்தார். அதன்படி சிவமொக்கா டவுனில் கோட்டே, ஜெயநகர், சிவமொக்கா பொருளாதார குற்றப்பிரிவு, கும்சி போலீஸ் நிலையங்களில் 10 ஆண்டுகளாக பல வழக்குகள் தீர்வு காணப்படாமல் இருந்தது…

Read More

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:- புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்

Read More

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்ட நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் இன்று சந்தித்து பேசினர். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கிருஷ்ணசாமியை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி என்பது உறுதியாகி உள்ளது. அ.தி.மு.க.வின் கூட்டணி மிக வலுவான கூட்டணியாக அமையும். எங்களது விருப்பத்தை அ.தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவித்துள்ளோம். விரைவில் எந்த தொகுதியில் போட்டி என்பதை ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Read More