Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sahabudeen
திண்டுக்கல் செம்பட்டியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:- நாங்கள் மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் நிற்கிறோம். யார், யாருக்கோ வாக்கு அளித்து ஏமாந்த தமிழ் சொந்தங்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பி இந்த தேர்தலில் நிற்கிறோம். அடிப்படை அரசியல் மாற்றம் தேவை என்பதற்காக தான் இந்த தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் நமக்கு அரை நூற்றாண்டுகள் பகை, பா.ஜ.க. நமக்கு 3,000 ஆண்டுகள் பகை. பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்காக ஊர், தெரு, வீடு வீடாக வந்து ஆதரவு கேட்டாலும் ஒரு வாக்கு கூட பா.ஜ.க.வுக்கு இல்லை என்கிற நிலையை மக்கள் உருவாக்க வேண்டும். கச்சத்தீவை மீட்டுத்தாருங்கள் என்று 6 மாதங்களுக்கு முன்பே நான் கடிதம் எழுதினேன்; கச்சத்தீவு நம்மிடம் இல்லை என்பது பா.ஜ.க.வுக்கு தேர்தல் வரும்போதுதான் தெரியவருகிறதா?. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை எதிர்ப்பது பரம்பரையாக நீடிக்கிறது.…
பழனிசாமி பேச்சு சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூரில் அரக்கோணம் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளனர். நான் பேசுவதில் எது பொய் என்று கூறினால் பதில் சொல்லத் தயார். விமர்சனத்துக்கு அ.தி.மு.க. தொண்டன்கூட பயப்பட மாட்டான். மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அ.தி.மு.க. அஞ்சாது. அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடுவது வாடிக்கையாகிவிட்டது. எங்கள் ஆட்சியின்போது தி.மு.க. மீது வழக்கு போடவில்லை; மக்கள் பணியாற்றினோம். தி.மு.க. அரசு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. திட்டங்களை கொண்டு வந்தால்தானே நாங்கள் குறை கூற முடியும். விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. மூன்று ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு…
திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வணக்கத்திற்குரிய வாக்காளப் பெருமக்கள், 17-வது பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட இக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு வரலாறு காணாத வாக்குகளை அள்ளித் தந்து மொத்தத்தில் பதிவான 10,48,779 வாக்குகளில் கூட்டணி வேட்பாளரான எனக்கு மட்டும் 6,29,285 வாக்குகள் அதாவது இத்தொகுதியில் அனைத்து கட்சிகளுக்கும் பதிவான மொத்த 100 சதவிகித வாக்குகளில் சுமார் 60 சதவிகித வாக்குகளை தாராளமாய் தந்து சுமார் 4,60,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்ற உறுப்பினராக, இந்தியாவிலேயே காங்கிரஸ் வேட்பாளர்களிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருச்சி பாராளுமன்ற வாக்காளப் பெருமக்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு என் நன்றியை மீண்டும் காணிக்கையாக்குகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் பாதிப்புகுண்டான சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீங்கலாக எனது நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி…
29 03 24 செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் RLT அகடமி பள்ளி வளாகத்தில் மூன்று நாட்கள் (29.03.2024-31.03.2024) நடைபெறும் மாநில அளவிலான இருபால் இளையோர் குத்துச்சண்டை போட்டியை SRIA குத்துச்சண்டை சங்க தலைவர் லயன் கருணாநிதி சார்பட்டா புகழ் மாஸ்டர் செந்தில் மற்றும் பொருளாளர் நடராஜ் Mr India தலைமையில் நடக்கிறது. நேற்று முதல் நாள் துவக்க விழாவில் மல்லை CE. சத்தியா MA இயக்குனர் SRIA குத்துச்சண்டை சங்கம், சர்வதேச தலைவர் மன்சூறிய குங் இப்போட்டியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் உடன் பள்ளியின் இயக்குனர் கார்த்திக், தமிழ்நாடு குத்துச்சண்டை சங்க செயலாளர் நாகராஜன், காலிதாஸ் மாநில குத்துச்சண்டை வீரர் மற்றும் வல்லம் கோபி மாஸ்டர் பாண்டியன் மாஸ்டர் ஜோதி சுரேஷ் மோனிஷா ராஜசேகர் சுல்தான் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும் RLT அகாடமி பள்ளியின் புதிய குத்துச்சண்டை மேடையை RLT இயக்குனர் கார்த்தி திறந்து வைத்தார்.
ஜி கே எம் கல்வி நிறுவனங்களின் 28 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம். செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் அடுத்த ஜி.கே.எம் கல்வி நிறுவனங்கள் தனது 28 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை தமிழ்த்தாய் வாழ்த்துக்களுடன் தொடங்கியது. கௌரவ விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றி ஆண்டு விழா கொண்டாட்டத்தை தொடங்கிவைத்தனர். மாணவ மாணவியர்களால் வரவேற்பு நடனம் நடைபெற்றது. தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் வரவேற்பு உரையை ஆற்றினார். மேலும் ஜி கே எம் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர். காத்தமுத்து கல்லூரியை தொடங்குவதில் கொண்டிருந்த ஆர்வமும் மற்றும் அதே நாளில் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாடுவது ஆகியவை பற்றி சி இ ஓ டாக்டர்.சுஜாதா பாலசுப்பிரமணியன் தலைமை உரையில் குறிப்பிடப்பட்டது. ஜி. கே.எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர். புவனேஸ்வரி , ஜி கே எம் கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர். தலைமை பொறியாளர் சுந்தர்ராஜன் மேற்பார்வையில் ஆண்டு அறிக்கை…
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கதல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி இன்று மதியம் உடன் நிறைவடைந்தது. கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு உள்ள சொத்து மதிப்பீட்டு பட்டியலையும் இணைத்துள்ளார். அண்ணாமலை பெயரில் அசையும் சொத்து 36 லட்சத்து 4100 ரூபாயும், அசையா சொத்து 1 கோடியே 12 லட்ச ரூபாயும் உள்ளது. அவரது மனைவி அகிலாவின் பெயரில் 2 கோடியே 3 லட்சத்து 12 ஆயிரத்து 77 ரூபாய் அசையும் சொத்தும், 53 லட்ச ரூபாய் அசையா சொத்தும் உள்ளது. அண்ணாமலை 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹோண்டா சிட்டி கார் வைத்துள்ளார். அண்ணாமலை மீது 24 வழக்குகள்…
கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி குறித்து எமோஷனல் ஸ்டோரி போட்ட ரோஹித் சர்மா – வைரலாகும் பதிவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி இதுவரை சிஎஸ்கே அணிக்காக ஐந்து கோப்பைகளை வெற்றி பெற்று கொடுத்துள்ளார். அதுமட்டும் இன்றி கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அறிமுக சீசனில் இருந்து சென்னை அணியின் ஈடு இணையற்ற கேப்டனாக இதுவரை மிகச் சிறப்பாக அணியை வழிநடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக நேற்று கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி அந்த பதவியை சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வழங்கியுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய அவர் ஜடேஜாவிற்கு அந்த வாய்ப்பை வழங்கினாலும் அதன் பின்னர் சிஎஸ்கே அணி மிகப்பெரிய சரிவை சந்தித்ததால் தோனி மீண்டும் கேப்டன்…
ஸ்ரீவில்லிபுத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை ஆற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:- சொன்னதை செய்ததால் தான் உங்கள் முன் கம்பீரமாக வந்து உரிமையோடு வாக்கு கேட்கிறேன். அலை அலையான மக்களின் ஆதரவே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் தி.மு.க. அரசின் திட்டத்தால் பயனடைந்து உள்ளது. தாய்வீட்டுச் சீர் போல பெண்களுக்கு உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட முத்தான 3 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக அரசின் காலை உணவு திட்டத்தால் தமிழகத்தில் 16 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர். சமூக நீதிக்கு பா.ஜ.க.வால் ஆபத்து; இட ஒதுக்கீடுக்கு தீங்கு இழைக்கும் கட்சி பா.ஜ.க. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வந்த போதும் பா.ஜ.க மறுத்து வருகிறது. சிறுபான்மையின மக்களுக்கு மட்டுமின்றி, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரி தான் பா.ஜ.க. தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரிய ஊழலை பா.ஜ.க செய்துள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலாவின் கணவரே கூறுகிறார். ஜி.எஸ்.டி வரியை…
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அ.தி.மு.க.வை பொறுத்தவரை, தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. தமிழகம், புதுவையில் 33 தொகுதிகளில் அ.தி.மு.க நேரடியாக போட்டியிடுகிறது. இந்நிலையில் தென்காசி மக்களவைத் தொகுதியில் தனிச்சின்னத்திற்கு பதிலாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது. இந்தநிலையில், இது குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன். இதற்காக என்னை யாரும் நிர்பந்திக்கவில்லை என்றார். டிவி சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தும் அது கிடைக்காததால் இம்முடிவு என தகவல் வெளியாகி உள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.உரிய நேரத்தில் விண்ணப்பிக்க வில்லை என்று தெரிவித்து பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களுக்கு ஒரே சின்னத்தை அந்தக் கட்சி பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.கரும்பு விவசாயி சின்னத்தில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிடவுள்ளதாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிஅறிவித்திருந்தது இந்நிலையில், தமிழகத்தில் 17 தொகுதிகளில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறது. கரும்பு விவசாயி சின்னம் பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 17 தொகுதிகளில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் மற்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் கிடைக்காததால் போட்டியிடவில்லை என்று பா.ம.ஐ.க தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சீமான் கட்சி…

