Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sahabudeen
செங்கல்பட்டு மாவட்டம்… செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மகளீர் கட்டணமில்லாப் பேருந்து செங்கல்பட்டு பழையபேருந்து நிலையத்தில் நிற்க்காமல் செல்கிறது.கோடை வெப்பத்தின் தாக்கத்தில் குழந்தைகளுடன் நின்றிருக்கும் மகளீர் நிற்க்காமல் செல்லும் பேருந்தை போகும் பாதையை வேதனையேடு குழந்தைகளுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மகளீர்கட்டணம் இல்லாப்பேருந்துகள் புறப்படும் 10 நிமிடத்தில் சுமார் 5 பேருந்துகள் ஓன்றன்பின் ஒன்றாக செல்கிறது.இப்படி செல்லும் பேருந்துகள் முதலில் செல்லும் இரண்டு பேருந்துகளில் மட்டும் பயணிகள் அதிக அளவில் ஏறிசெல்கின்றனர், பின்னர் வரும் 3 பேருந்துகள் பயணிகள் அதிகம் இல்லாமல் செல்வதால் அரசு அறிவித்த மகளீர் கட்டணம் இல்லா பேருந்து திட்டம் மகளீருக்கு பயன்படாமல் இருப்பதால் இத்திட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது..இதனை கருத்தில் கொண்டு,இதனை பேருந்து பணிமனை நேரக்காப்பாளர் கருத்தில் கொண்டு இத்திட்டம் மகளீர்க்கு பயண்படும் விதமாக பேருந்தின் நேர அட்டவணையை மாற்றி அமைத்து உதவுமாறு பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி தலைமை அலுவலகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட்டார். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: 2014 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற இயக்கம் அ.தி.மு.க., 3 ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அ.தி.மு.க. வுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. மக்களவைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மக்களவைத்தேர்தலின் அறிக்கை விரைவில் எதிர்பார்க்கலாம். கூட்டணியை நம்பி அ.தி.மு.க இல்லை. யார் வந்தாலும் வரவேற்போம் என்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அ.தி.மு.க. கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விவரம்:- 1 ) வட சென்னை ராயபுரம் ஆர்.மனோ 2 ) தென் சென்னை டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன் 3 ) காஞ்சிபுரம் – ராஜசேகர் 4 ) அரக்கோணம் – ஏ.என்.விஜயன் 5 ) கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ் 6) ஆரணி – கஜேந்திரன் 7 ) விழுப்புரம் – பாக்யராஜ் 8 ) சேலம்- விக்னேஷ் 9 ) நாமக்கல் – தமிழ்மணி 10 ) ஈரோடு – ஆற்றல் அசோக்குமார் 11) நாகை சுர்ஜித் சங்கர் 12) மதுரை சரவணன் 13) தேனி – வி.டி.நாராயண சாமி 14) கரூர்…
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- புதுச்சேரி மக்களின் அன்புக்கு நான் நன்றி கூறுகிறேன். அவர்கள் அபரிமிதமான அன்பினை என் மீது பொழிந்தார்கள். இந்த அன்பு தொடரும். புதுச்சேரி மக்களுக்கு சில நேரங்களில் கடுமையான முடிவுகளை எடுத்து சேவை செய்தேன். இந்த வாய்ப்பினை கொடுத்த பிரதமர், உள்துறை மந்திரி, ஜனாதிபதிக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். புதுச்சேரியில் பணி செய்ததை என்னால் மறக்க முடியாது. நல்ல திட்டங்களை செயல்படுத்த மனசாட்சிப்படி பணி செய்தேன். 3 மாத பொறுப்பு என்று கூறி எனக்கு 3 வருடங்கள் வாய்ப்பு கொடுத்தனர். இதற்கான ஆண்டவனையும், ஆள்பவரையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன். தமிழில் பதவிப்பிரமாணம், கவர்னர் உரையை வாசித்தேன். இப்போது மக்கள் பணி செய்ய முழுமனதோடு ராஜினாமா செய்துள்ளேன். இது நானாக எடுத்த முடிவு. என்னை யாரும் நிர்ப்பந்திக்கவில்லை. தெலுங்கானாவில் 300 ஊழியர்கள் என்னை அழுதுகொண்டே வழியனுப்பினார்கள். இன்னும் 6 மாத…
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க. தனது கூட்டணியை அறிவித்து, தொகுதி பங்கீட்டையும் நிறைவு செய்துள்ளது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை தே.மு.தி.க., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறது. ஆனாலும் இதுவரை உடன்பாடு எட்டப்படவே இல்லை. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவினர், தங்களது கூட்டணியை இறுதி செய்யும் வகையில் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சந்தித்து பேசி வருகின்றனர். தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டங்களில் உடன்குடி பகுதியில் உற்பத்தியாகும் கருப்பட்டி புகழ்பெற்றதாகும். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உடன்குடி கருப்பட்டி கிடைக்கும். தற்போது பனை மரங்களில் பதநீர் எடுக்கும் சீசன் தொடங்கிவிட்டது. குறைந்த அளவு பதநீர் கிடைப்பதால் சிலர் அதை உடனுக்குடன் விற்பனை செய்து வருகின்றனர். சிலர் மூன்று நாள் வரை பக்குவப்படுத்திவைத்து பின்னர் கருப்பட்டி ஆக உற்பத்தி செய்கின்றனர். புதிய கருப்பட்டி ஒரு கிலோ ரூ. 300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது புதிய கருப்பட்டியை மக்கள் அதிக அளவில் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். மேலும் ஒரு சில வியாபாரிகள் புதிய கருப்பட்டியை வாகனங்களில் வைத்து ஊர் ஊராகக் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். பழைய கருப்பட்டி கிலோ ரூபாய் 400 வீதம் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 10 கிலோ எடையுள்ள பழைய கருப்பட்டி சிப்பம் ரூபாய் 3,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- பெங்களூரு குண்டு வெடிப்பு குறித்து மத்திய மந்திரி ஷோபா கரந்த்லாஜேவின் பொறுப்பற்ற கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஒருவர் என்.ஐ.ஏ. அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது குண்டுவெடிப்பு சம்பவத்துடன் நெருக்கமாக தொடர்புடையவராக இருக்க வேண்டும். பா.ஜ.க.வின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடியர்களும் கண்டிப்பாக நிராகரிப்பார்கள். அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசிய மந்திரி ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். பிரதமர் முதல் தொண்டர் வரை பா.ஜ.க.வில் உள்ள அனைவரும் கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மத்திய மந்திரியின் இந்த வெறுப்புப் பேச்சை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மஜக பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசிது அறிக்கை! கடந்த மார்ச் 16ம் தேதியன்று சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் மஜக தலைமை நிர்வாகிகளுடன் சென்று சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தோம். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் மஜக தொண்டர்கள் உறுதியாக உள்ளனர். கூட்டணியின் வெற்றிக்கு நாடு முழுவதும் களப்பணி ஆற்றுவார்கள் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையலாம். என தகவல் வெளியான நிலையில் தற்போது பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. கூட்டணியில் இணைந்துள்ளது. திண்டிவனத்தில் உள்ள தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற பா.ம.க. உயர்மட்ட கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்?, வேப்டாளர்கள் யார்? என்பது குறித்த அறிவிப்பை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 19, 26 தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும்!தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன்படி முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதேப்போல் ஏப்ரல் 26ம் தேதி கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய தேதிகள் முஸ்லிம்கள் மஸ்ஜித்களில் கட்டாய கூட்டு பிரார்த்தனை செய்யும் ஜும்ஆ நாளான வெள்ளிக்கிழமையாகும். இதனால் முஸ்லிம் வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பூத் ஏஜெண்ட் உள்ளிட்ட தேர்தல் பணியாளர்களின் பணியும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.…

