Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sahabudeen
மக்களவை தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாக தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தமிழை நேசித்து அவரிடமே ‘கலைஞானி’ என்று பட்டம் பெற்றவர், சமத்துவமும் பகுத்தறிவும் அரசியல் பார்வையாகக் கொண்டிருப்பவர், மதவெறி-மக்கள் விரோத பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட இந்தியா கூட்டணியில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து களமாடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும்-தளத்திலுமான ஒருங்கிணைப்புப் பணிகள் குறித்து ஆலோசித்தோம். மகத்தான வெற்றிப் பயணத்தின் தொடக்கம்.” இவ்வாறு டி.ஆர்.பி.ராஜா பதிவிட்டுள்ளார். அதேபோல் கமல்ஹாசன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடு காக்கும் ஒற்றை நோக்கம். அதற்கான செயல்பாடுகளின் திட்டம் ஆலோசிக்க தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர், அன்பு இளவல் டி.ஆர்.பி.ராஜா…
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதியில் உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் ரமலானை முன்னிட்டு அவர்களின் அறையில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று எதிர்ப்பு தெரிவித்து மதம் சார்ந்த முழக்கங்களை எழுப்பியதாகத் தெரிகிறது. அத்தோடு இல்லாமல் வாக்குவாதம் செய்து வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர்.இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒரு இலங்கை மாணவர் உட்பட 5 வெளிநாட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி இருக்கும் ‘ஏ’ பிளாக்கில் நடந்துள்ளது. முஸ்லிம் மாணவர்களின் மடிக்கணினிகள், அலைப்பேசிகள் உடைமைகள் போன்றவற்றையும் வன்முறை கும்பல் அடித்து நொறுக்கி உள்ளது. தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாகவும் நான்கு பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். குற்றவாளிகளைக் கைது செய்வதில் குஜராத் மாநில…
அறந்தாங்கி,மார்ச்.18-புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அப்துல் அமீது தெருவில் செயல்படும் அறந்தை மக்கள் நல பைத்துல்மால் அமைப்பினர் 1.25 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ அரிசி பைகளை 250 ஏழை குடும்ங்களுக்கு வழங்கினர். பைத்துல்மால் தலைவர் நோக்கியா சாகுல் அமீது தலைமையில் செயலாளர் முகம்மது ஆரிப், பொருளாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலையில் கிரசன்ட் பள்ளி தாளாளர் முகம்மது அசாரூதீன், சேக்பாத்திமா பள்ளி தாளாளர் சேக் அலாவுதீன், எவர்கிரீன் பள்ளி தாளாளர் முபாரக் அலி ஆகியோர் ஏழை குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி கொண்ட பைகளை கொடுத்து துவக்கிவைத்தனர். பைத்துல்மால் நிர்வாகிகள் முகம்மது அனஸ், காலித் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. வரும் 20-ந்தேதி முதல் வேட்பு மனுதாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது? என்பது பற்றி பா.ம.க. எந்த முடிவையும் எடுக்காமலேயே உள்ளது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேருவதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விரும்புவதாகவும். ஆனால் பா.ஜனதா கூட்டணியை அன்புமணி ராமதாஸ் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின. இப்படி பா.ம.க. மேலிடத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவி வருவதாலேயே கூட்டணி விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. எம்எல்ஏ அருள் சந்தித்து பேசி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் முகாம் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டால் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.…
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் பறக்கும் படைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இது போன்று 702 நிலையான கண்காணிப்பு குழுவினரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு மூன்று பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் என்ற அடிப்படையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், எட்டு மணி நேரம் அடிப்படையில், மூன்று ஷிப்ட்டாக பணிபுரிவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னை யானைக்கவுனி பகுதியில் தனியார் அலுவலகம் ஒன்றில் பெரிய அளவில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற பூக்கடை உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார், மூவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பைகளில் வைத்திருந்த கட்டுக்கட்டான பணத்தை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில்…
மக்களவைத் தேர்தல் குறித்து அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் துவங்கி உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், கடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு இந்த முறையும் மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. INDIA கூட்டணி சார்பில் திமுக மதுரை தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் மதுரை வேட்பாளராக சு.வெங்கடேசன் அறிவிக்கப்பட்டார். தேர்தல் குறித்து அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இன்று அதிகாலையே தேர்தலுக்கான பணியை துவங்கி விட்டார் சு.வெங்கடேசன். அதன்படி மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் உள்ள தியாகி பாலு அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து தேர்தல் பணியை தொடங்கியுள்ளார்.…
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ நடத்தி வருகிறார். அவரது யாத்திரை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மும்பையில் உள்ள சைத்திய பூமி எனப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவிடத்தில் ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை நிறைவு செய்கிறார். தொடர்ந்து நாளைய தினம் ராகுல் காந்தி தலைமையில் ‘நியாய சங்கல்ப பாதயாத்திரை’ நடைபெற உள்ளது. மும்பையில் உள்ள மணி பவணில் இருந்து ஆகஸ்ட் கிராந்தி மைதான் பகுதி வரை பாதயாத்திரை நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு ‘இந்தியா’ கூட்டணி தலைவரக்ள் பங்கேற்க உள்ளனர்.
மதுரை கோச்ச்சடையில் ரேஷன் கடை திறப்பு நிகழ்வில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். பி.எம். ஶ்ரீ பள்ளி திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திடவுள்ளது குறித்த கேள்விக்கு,”திமுகவுக்கு நிலையான கொள்கை கிடையாது. நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்த போட்டது திமுக தான்.நீட் ரத்து ரகசியத்தை உதயநிதி இதுவரை சொல்லவில்லை. திமுக காலத்தில் தான் தமிழர்களின் உரிமைகள் பறிபோனது. மத்திய அரசை எதிர்ப்பது போல் எதிர்ப்பது தான் திமுகவின் கொள்கை” என்றார் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அண்ணாமலை விமர்சித்தது குறித்த கேள்விக்கு,”தமிழ்நாட்டில் உள்ள ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான்.மத்தியில் ஆளும் கட்சி என்ற மமதையில் அண்ணாமலை மறைந்த தலைவர்களை மதிக்காமல் அரைவேக்காடு தனமாக பேசுகிறார். அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பெட்டியை உடைக்கும் போது தான் பாஜகவுக்கு மக்கள் என்ன ஆப்பு வைத்துள்ளார்கள் என்று தெரியும். அதன் பிறகு அண்ணாமலை இருப்பாரா, தொடர்வாரா…
உடன்குடி ஊராட்சி ஒன்றியம் நயினார்பத்து ஊராட்சி அம்மன்புரம் கிராமத்தில் 35 குடும்பங்களுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளுக்கு மின் இணைப்புகள் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் நயினார்பத்து ஊராட்சி அம்மன்புரம் கிராமத்தில் 35 குடும்பங்களுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளுக்கு மின் இணைப்புகள் இல்லாமல் சிரமப்பட்டு வந்த நிலையில், கனிமொழி எம்.பி., தமிழக மீன்வளம், மீனவர் நலன் -கால்நடை பராமரிப்புத் துறை அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் எடுத்த நடவடிக்கையால் மின் இணைப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டது. இதையொட்டி, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமையில் அம்மன்புரத்தில் நடைபெற்ற விழாவில் மின் இணைப்புக்கான சான்றிதழ்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். மேலும் இக்குடும்பத்தினர்கள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு 2001 முதல் 2025 வரை கட்டவேண்டிய நில…
புதுடெல்லி, தற்போதைய 17-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற ஜூன் மாதம் 16-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு, புதிய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே 18-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கடந்த ஆண்டு முதலே இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தேர்தல் கமிஷனர்கள் சுற்றுப்பயணம் செய்து, தேர்தலை நடத்துவது குறித்து ஆய்வு நடத்தினர். அனைத்து அரசியல் கட்சியினரிடமும் கருத்துக்களை கேட்டறிந்தனர். அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்த நிலையில், அரசியல் கட்சியினர் ஒரு புறம் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என மும்முரமாக உள்ளனர். இந்தநிலையில் எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது. அதாவது இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு, 18-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான…

