Author: Sahabudeen

சேலத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, தமிழகத்தின் முக்கிய தலைவர்களான காமராஜர், மூப்பனார், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு பேசினார். குறிப்பாக காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டம் தனக்கு உத்வேகம் அளித்ததாக கூறினார். இந்நிலையில், தூத்துக்குடி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியபோது, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார். பிரதமர் மோடி சேலத்தில் பேசியதை மேற்கோள் காட்டி பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “நீங்கள் எல்லாம் டெல்லியில் காமராஜரை கொல்ல நினைத்த பாவிகள்” என்றார். அப்போது அவர் பயன்படுத்திய ஒரு வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய வீடியோ கிளிப்பையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:- பிரதமருக்கு எதிராக இழிவான மன்னிக்க முடியாத வார்த்தையை பேசியதன் மூலம் தி.மு.க. தலைவர்கள் தரம்தாழ்ந்த நிலையை அடைந்துள்ளனர். எங்களை விமர்சனம் செய்வதற்கு…

Read More

திருவாரூரில் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, பிரதமர் மோடி, தி.மு.க.வை விமர்சிப்பது ஏன்? தி.மு.க. மேல் அவர் ஆத்திரம் கொள்வது ஏன்? என்பது குறித்து பேசினார். அதன் விவரம் வருமாறு:- தமிழ்நாட்டுக்கான சிறப்புத்திட்டங்கள் எதையும் வழங்காத மோடிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. இது மோடிக்கும் தெரியும். அதனால்தான், தி.மு.க. மேல் அளவுக்கு அதிகமான ஆத்திரத்தை கொட்டுகிறார். மாநிலம் மாநிலமாக சென்று தி.மு.க.வை விமர்சித்தார். இப்போது தமிழ்நாட்டுக்கு வந்தும் அதே பல்லவியைப் பாடுகிறார். தி.மு.க. மேல் ஏன் அவருக்கு இவ்வளவு கோபம்?. இந்தியா முழுவதும் பா.ஜனதாவுக்கு எதிராக தனித்தனியாக இயங்கி வந்த கட்சிகளை ஒன்றிணைக்க நான் காரணமாக இருந்தேன் என்ற ஆத்திரத்தில் தி.மு.க.வை விமர்சித்துக்கொண்டிருக்கிறார். தன்னை எதிர்க்க யாருமில்லை என்று இருந்தவரின் பிழைப்பை ‘இந்தியா’ கூட்டணி கெடுத்துவிட்டது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேராது என்று கனவுலகத்தில் இருந்த மோடியின் தூக்கத்தை ‘இந்தியா’ கூட்டணி கலைத்துவிட்டது.

Read More

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:- தமிழ்நாடு அரசியல் தான் எனக்கு முக்கியம்; டெல்லி அரசியலில் விருப்பம் இல்லை. பிரதமர் மோடியின் உத்தரவை மதித்து நடப்பவன் நான். பிரதமர் மோடியின் விருப்பத்தினாலேயே கோவை தொகுதியில் போட்டியிடுகிறேன். நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பா.ஜ.க. வெல்லும். தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையிலிருந்து ஆரம்பமாக வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 40 நாட்கள் தங்கி இருந்து பரப்புரை செய்தாலும் கோவையில் பா.ஜ.க. தான் வெல்லும். 2026-ல் ஆட்சி அமைக்கவே பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்- மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், நேற்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,…

Read More

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து கெஜ்ரிவாலை 6 நாட்கள்(வரும் 28-ந்தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள் என பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவரும், தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;- டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் ஒரு கருப்பு நாள். அதேபோல் சமீபத்தில் ஜார்க்கண்ட் முதல்- மந்திரி ஹேமந்த் சோரன், பி.ஆர்.எஸ்.…

Read More

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன செய்தியில் கூறியிருப்பதாவது. மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில பொது செயலாளர் எஸ்.ஷாஜகான் பரிந்துரையின் படி சென்னை. எம்.ஜு.ஆர் நகரை சேர்ந்த ராஜா மணி என்பவர் மாநில தொழிலாளர் அணி துனை செயலாளராக இன்று முதல் நியமிக்க பட்டு உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் தாங்கள் பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அனைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் . மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தொழிலாளர் அணி துனை செயலாளராக நியமிக்க பட்டு உள்ள ராஜாமணிக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஓத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறேன்.…

Read More

தமிழகத்தின் அனைத்து . பொது மக்கள் மற்றும் பல சாதி இன்றிய பொது இயக்கத்தினர்கள். சமூக ஆர்வலர்கள்.பல சங்கத்தினர்கள். தமிழகத்தின் சுயநலம் இன்றி ஏழை எளிய மக்களின் சேவகன். தமிழகத்தின் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் கலைமகன் எஸ்.வெங்கடேஷ் அவர்களை ராஜ்ய சபா எம்.பி.யாக்க விரும்புகிறார்கள்…… சென்னையில் இருந்து பல மாவட்டங்களில் குறிப்பா செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியை சிறப்பாக மக்கள் பணி அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவரும் நிறுவனமான கலைமகன் எஸ் வெங்கடேசன் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் கோட்பாடுகளான சாதிகள் இல்லையடி பாப்பாகுலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்ற மகாகவி பாரதியாரின்வார்த்தைகளுக்கு ஏற்ப சாதி மத பேத மற்ற சமுதாயத்தை உருவாக்கிடவும் அனைவரையும் ஒன்றிணைந்து மக்களிடையே அமைதியும் ஒற்றுமையும்ஏற்படுத்துவதற்காகவும்எண்ணற்ற ஏழைஎளிய மக்களின் தேவை அறிந்துஉதவிகள் புரிந்திடும்இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு இந்த இயக்கம் சிறப்பான செயல்பாடுகளால் வெற்றி நடை போட்டு வருகிறது பல்வேறு மாவட்டங்களில் பல்…

Read More

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் இணைந்து டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம.மு.க.) போட்டியிட உள்ளது. இந்நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று கையெழுத்தானது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், “நான் ஒரு தொகுதி கூட போதும் என்றேன். பா.ஜ.க. தரப்பில் 2 தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினார்கள். அதன்படி தற்போது 2 தொகுதிகள் கிடைத்துள்ளன. இதற்கான ஒப்பந்தம் தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று கையெழுத்தானது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், “நான் ஒரு தொகுதி கூட போதும் என்றேன். பா.ஜ.க. தரப்பில் 2 தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினார்கள். அதன்படி தற்போது 2 தொகுதிகள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.விற்கு ‘குக்கர்’ சின்னத்தை…

Read More

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது மக்கள் தான். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. என்பது என்ன? என்று எல்லோருக்கும் புரியும், மூன்று அணியாக இருக்கின்ற அ.தி.மு.க. ஒன்றாக இணைய வாய்ப்பு வந்துள்ளதாக எனது அனுமானத்தில் கருதுகிறேன். தமிழக அரசு தேர்தல் காரணம் சொல்லி எந்தவித ஆக்கப்பூர்வமான செயல்களிலும் ஈடுபடாமல் உள்ளது. தூத்துக்குடியில் துப்புரவு பெண் ஒருவர் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை என்ன செய்து வருகிறது? என்று தெரியவில்லை. ஜெயலலிதா ஆட்சியின்போது நிர்வாக ரீதியாக இது போன்ற எந்த தவறும் நடந்தது கிடையாது. 2026 தேர்தல் என்பது எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் நேரடி போட்டியாக இருக்கும். அந்த தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன். தி.மு.க. என்ன ஆகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன். மத்தியில் எந்த ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அதாவது இதுவரை ஆட்சி செய்தவர்களில் எந்த ஆட்சி மக்களுக்கு பயன்பட்டதோ அந்த…

Read More

ஐ.நா.சபையின் நிவாரண உதவிகள் மையத்தில் செயல்படும் தன்னார்வலர்கள் மீதுதாக்குதலில் உயிர்இழப்புகள் ஏற்பட்ட உள்ளது இஸ்ரேலிய இரானுவத்தின் காட்டுமிராண்டிதான தாக்குதலை சர்வதேசகண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனதமிழ்நாடு மக்கள்நலன்காக்கும்இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வலியுறுத்தல் பலஸ்த்தீன் இஸ்ரேல்போர் கடந்த 166, நாட்களை கடந்த நிலையில் தொடர்ச்சியாக சர்வதேச சட்டங்களைகாலில் போட்டு மிதிக்கும் செயலில் இஸ்ரேல் அரசு செயல்பட்டு வருகிறது ஜ.நா.சபை கண்டித்தும் உலக குற்றவியல் நீதிமன்றம் (ICJ)உத்தரவு பிறப்பித்தும் அவற்றை புறம் தள்ளிவிட்டுதொடர்ந்து பலஸ்தீன்மக்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசு அதிலும் குறிப்பாக குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், மருத்துவமனைகள்பள்ளிக்கூடம், உணவு சேமித்து வைக்கும்கட்டிங்கள் என அனைத்தும் மீதும் மீலோச்சதனமான தாக்குதலில் இதுவரை 33000/அப்பாவி பொதுமக்கள் இருந்துள்ளார்கள் இதில் 1வயது முதல் 12 வரை குழந்தைகள் 13000/பேர்கள் கொள்ள பட்டுள்ளார்கள் மேலும் 75000/பேர் காயம்பட்டும் ஊனம் அடைந்துள்ளார்கள்சுமார் 50000ஆயிரத்தும் மேற்பட்ட கட்டிங்கள் இஸ்ரேல் ரானுவத்தினால் வான்வழி தாக்குதலில் உடைக்கபட்டுள்ளது அதில் வீடுகள்,வணிக வளாகங்கள், பள்ளிக்கூடங்கள் மசூதிகள்,கிறஸ்தவ தேவாலயங்கள்,…

Read More